முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிறுதானியங்களின் ஆரோக்கிய பலன்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த அமைச்சர் பி.மூர்த்தி வேண்டுகோள்

சிறுதானியங்களின் ஆரோக்கிய பலன்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - அமைச்சர் பி.மூர்த்தி


கேழ்வரகு, கம்பு போன்றவை ஏழை மக்களின் உணவு என்று நாம் பொதுவாக நினைக்கிறோம். இப்போது வசதி படைத்தவர்கள் நீரிழிவு போன்ற நோய்களுக்கு சிறுதானியங்களை மருந்தாக நினைத்து பயன்படுத்துகின்றனர். சிறுதானியங்கள் சத்து மிகுந்தவை. அவற்றை தொடர்ந்து உணவாக உண்டு வந்தால் நோய் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.


புதிது புதிதாக நோய்கள் நம்மைத் தாக்க காரணம் உணவு முறையில் ஏற்பட்ட மாற்றங்கள்தான். சிறுதானியங்களையும் சேர்த்துக் கொண்ட உணவுதான் சிறந்தது என்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டில் சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க தமிழ்நாடு அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது என்று வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு பி.மூர்த்தி தெரிவித்தார்.

இந்திய அரசின் மத்திய மக்கள் தொடர்பக சென்னை மண்டல அலுவலகம் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் ஏற்பாடு செய்துள்ள " அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள், மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு குறித்த எட்டு நாட்கள் புகைப்படம் & டிஜிட்டல் கண்காட்சியை இன்று தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றிய போது அமைச்சர் மூர்த்தி இவ்வாறு தெரிவித்தார்.


பல்லாயிரக்கணக்கான தியாகிகள் தம் இன்னுயிரை நீத்து நமக்கு சுதந்திரம் வாங்கித் தந்துள்ளனர் . அவர்களின் தியாகத்தை நாம் காலமெல்லாம் போற்ற வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியர் மூலமும் அந்தந்த மாவட்டத்தில் வெளித்தெரியாத தியாகிகள் குறித்து தகவல்கள் திரட்டப்பட்டு கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன என்று அமைச்சர் திரு. மூர்த்தி மேலும் தெரிவித்தார்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் மருத்துவர் எஸ்.அனீஷ் சேகர் தலைமை வகித்தார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மதுரைக்கு முக்கிய பங்கு உண்டு. மகாத்மா காந்தி ஐந்து முறை மதுரை வந்துள்ளார். ஜாலியன் வாலா பாக் படுகொலை போன்ற கொடுஞ்செயல் பெருங்காம நல்லூரில் நடந்துள்ளது. காந்தி அரையாடைக்கு  மாறியது மதுரையில் தான். மாணவர்கள் வரலாற்றைப் படிப்பதும் தெரிந்து கொள்வதும் முக்கியம் என்று ஆட்சியர் அனீஷ் சேகர் தெரிவித்தார்.

நிகழ்ச்சிக்கு மதுரை மாநகராட்சி ஆணையர் திரு.சிம்ரன்ஜீத் சிங் காலோன் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மன் தனியுரை நிகழ்த்தினார்.

மத்திய மக்கள் தொடர்பக மண்டல இயக்குநர் திரு.ஜெ.காமராஜ் நோக்கவுரை ஆற்றினார். வேளாண்மை இணை இயக்குநர் திரு.த.விவேகானந்தன் கருத்துரை ஆற்றினார்.

மதுரை மாநகராட்சி துணை மேயர் திரு.டி.நாகராஜன், 31ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் திரு வி.முருகன் ஆகியோரும் துவக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பள்ளிகளுக்கு இடையிலான ஓவியப் போட்டி மற்றும் பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் திரு மூர்த்தி பரிசுகள் வழங்கினார்.

கண்காட்சியில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் நோயீனி கடத்தி கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மைய கள அலுவலகம், அஞ்சல் துறை, ஆதார் திருத்தம், காசநோய் பிரிவு, பொது சுகாதார துறை, உணவு பாதுகாப்பு துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் ஆகியவற்றின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.

மதுரை ஸ்ரீசத்குரு சங்கீத வித்யாலயா மாணவர்களின் இசை நிகழ்ச்சியும் மத்திய மக்கள் தொடர்பகத்தில் பதிவு பெற்ற புனிதம் கலை மேம்பாட்டு மைய கலைஞர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

முன்னதாக மத்திய மக்கள் தொடர்பக புதுச்சேரி துணை இயக்குநர் டாக்டர் தி.சிவக்குமார் வரவேற்றார். நிறைவில் திருநெல்வேலி கள விளம்பர அலுவலர் திரு.பி.கோபகுமார் நன்றி கூறினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கள விளம்பர உதவி அலுவலர்கள் திரு போஸ்வெல் ஆசிர் (மதுரை), எஸ்.வீரமணி (புதுச்சேரி) மற்றும் பி.வேல்முருகன் (திருநெல்வேலி) ஆகியோர் செய்திருந்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...