தமிழ்நாட்டின் 2023 ஆம் நிதி ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கை தாக்கல்
செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய சட்டப்பேரவைக்கு செல்லும் வழியில், முன்னாள் முதல்வர் டாக்டர் மு. கருணாநிதி நினைவிடத்தில் வைத்து மரியாதை செலுத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம். பச்சைத் துண்டுடன் வந்து பத்து மணியளவில் இன்று வேளாண்மைத் துறைக்கான நிதி நிலை அறிக்கையை வாசித்தார். தமிழ்நாட்டில் மொத்த சாகுபடி பரப்பு 93 ஆயிரம் ஹெக்டேர் அதிகரித்து 63 லட்சத்து 48 ஆயிரம் ஹெக்டேராக உயர்ந்துள்ளதாகவும் .
2021-22 ஆம் ஆண்டில் 119 லட்சத்து 97 ஆயிரம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும். இது முந்தைய ஆண்டைவிட 11 லட்சத்து 73 டன் அதிகமெனவும், காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு 5 லட்சத்து 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி நடந்துள்ளதால் கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவு உற்பத்தியாகும். வரப்போகும் ஆண்டில் 127 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் விவசாயத்திற்காக புதிதாக ஒன்றரை லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.சிற்றூர்களில் வேளாண்மை முழுமையாக வளர்வதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளுடன் இதர பணிகளையும் மேற்கொள்ள, 'கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்' செயல்படுத்தப்படுகிறது. இத் திட்டத்திற்காக, 2504 ஊராட்சிகளுக்கு ரூபாய். 230 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதன் மூலம் இலவச பம்புசெட்டுகள், இலவச பண்ணைக் குட்டைகள் ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு ஆழ்துளைக் கிணறுகள், உலர்களத்துடன் கூடிய தரம் பிரிப்புக் கூடங்கள் போன்ற வசதிகள் ஏற்படுத்தித்தரப்படும்.ஏற்கனவே 20 மாவட்டங்களை உள்ளடக்கிய இரண்டு சிறுதானிய மண்டலங்களோடு, புதிதாக நாமக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, புதுக்கோட்டை உள்ளிட்ட ஐந்த மாவட்டங்களும் சேர்த்துக்கொள்ளப்படும். நீலகிரி, தர்மபுரி மாவட்டங்களில் பொது விநியோக அட்டைகளுக்கு இரண்டு கிலோ கேழ்வரகு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். சிறு தானியத் திருவிழாக்களும் நடத்தப்படும். அந்த இயக்கத்திற்கு 82 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் உடனடித் தேவைகளை நிறைவேற்றவும் அவர்களது வருவாயை அதிகரிக்கவும் மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டம் 64 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். அதில் கிராம வேளாண் முன்னேற்றக் குழு அமைக்கப்படும். தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாக்க 200 ஏக்கர் பரப்பளவில் அந்த ரகங்களின் விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு, மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுவதற்கு 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
பாரம்பரிய நெல் விதைகளை விதை வங்கியில் பராமரித்துவரும் 10 விவசாயிகளுக்கு தலா மூன்று லட்சம் வீதம் 30 லட்ச ரூபாய் வழங்கப்படும்.குறுவைப் பருவத்தில் ஒரு லட்சம் ஏக்கரில் மாற்றுப் பயிர்களைச் சாகுபடி செய்வதற்கு ஊக்குவிக்க 16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். நெல்லுக்குப் பின் மாற்றுப் பயிர் சாகுபடி செய்வதை ஊக்குவிக்க 24 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். சிறு, குறு மற்றும் நிலமற்ற வேளாண்மைத் தொழிலாளருக்கு வேளாண்மைக் கருவிகளை வாங்க 15 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. 60,000 வேளாண்மைக் கருவிகள் இதன் மூலம் வழங்கப்படும்.
தமிழ்நாட்டில் உள்ள நில உரிமையாளர்கள், விவசாயிகளின் அடிப்படைத் தகவல்களான ஆதார் எண், வங்கிக் கணக்கு எண் ஆகியவற்றைச் சேமித்துவைக்க GRAINS (Grower Online Registration of Agriculture Inputs System) எனும் இணையதளம் அறிமுகப்படுத்தப்படும். பயிர் காப்பீட்டுத் திட்டங்களுக்குச் செலுத்த மாநில அரசின் மானியமாக இந்த ஆண்டு 2,337 கோடி ரூபாய் செலுத்தப்படும்.
கடந்த ஆண்டோடு ஒப்பிட்டால், சர்க்கரை ஆலைகளுக்குப் பதிவு செய்யப்படும் கரும்பு சாகுபடி பரப்பு 2022-23 காலகட்டத்தில் 55,000 ஹெக்டேர் அதிகரித்துள்ளது. கரும்புக்கு டன் ஒன்றுக்கு மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நியாய விலையான 2,821 ரூபாயுடன் 195 ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்படும். இதற்கென 253 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் கரும்பு விவசாயிகள் பயன்பெறுவர். தமிழ்நாட்டு விவசாயிகளின் இயற்கை உரத் தேவையைப் பூர்த்தி செய்யும் விதமாக, சேலம், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆலைக்கழிவு மண்ணிலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட இயற்கை உரம் தயாரிக்க கட்டமைப்புகள் உருவாக்கப்படும்.தமிழ்நாட்டில் இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் 35,200 ஹெக்டர் பரப்பில் மிளகாய் பயிரிடப்படுகிறது. இப்பரப்பை 40,000 ஹெக்டேராக உயர்த்தி, உற்பத்தியினை அதிகரிக்க இம்மாவட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, ஐந்து ஆண்டுகளில் மிளகாய் மண்டலமாக மாற்றப்படும். மிளகாயின் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களைத் தயாரிக்க ஏதுவான கட்டமைப்பை உருவாக்க ஆறு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். வரும் ஆண்டில் காவிரி பாசனப் பகுதிகளிலுள்ள ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால்களில் தூர்வாரும் பணிகள் 90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திலும் ’மதி-பூமாலை’ வளாகத்திலும் சிறுதானியங்களில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதற்காக, சிறுதானிய சிற்றுண்டி உணவகம் (Millet Cafe) உருவாக்கப்படும். சிறப்பு வேளாண்மைப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு மூலம் உலகச் சந்தையில் அவற்றின் மதிப்பு அதிகரிக்கிறது. 2022 ஆம் ஆண்டில், சோழவந்தான் வெற்றிலை, பண்ருட்டி பலாப்பழம் உள்ளிட்ட 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதேபோன்று,, இந்த ஆண்டிலும் கிருஷ்ணகிரி அரசம்பட்டி தென்னை, கிருஷ்ணகிரி பன்னீர் ரோஜா, தஞ்சாவூர் பேராவூரணி தென்னை, மூலனூர் குட்டை முருங்கை, சாத்தூர் வெள்ளரி, தஞ்சாவூர் வீரமாங்குடி அச்சுவெல்லம், தூத்துக்குடி விளாத்திகுளம் மிளகாய், கடலூர் கோட்டிமுளை கத்திரி, மதுரை செங்கரும்பு, சிவகங்கை கருப்புகௌணியரிசி ஆகிய பத்து பொருட்களுக்கு புவிசார் குறியீடு 30 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பெற திட்டமிடப்பட்டுள்ளதாகவும்
.உழவர் சந்தைக்கு வரும் விவசாயிகள், பொதுமக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதால் , சராசரியாக நாளொன்றுக்கு 8,000 விவசாயிகள், மூன்று இலட்சம் நுகர்வோர் பயனடைந்து வருகின்றனர். வரும் ஆண்டு திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, நாமக்கல், புதுக்கோட்டை, திருப்பூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் உள்ள 25 உழவர் சந்தைகளுக்கு அடிப்படைத் தேவைகளான குடிநீர், கழிப்பறை வசதி, கடைகள் புனரமைப்பு, நடைபாதை வசதிகள் உள்ளிட்ட பணிகள் ஒன்பது கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். எனவும் அமைச்சர் அறிவிப்பில் தெரிவித்தார்.
இப்படிப் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டாலும் நாட்டில் விவசாயத்தில் விவசாயிகளை இதுவரை பலன் சென்றடையவில்லை உண்மையில் வியாபாரிகளும் கமிஷன் மண்டிகள் வைத்துப் பிழைக்கும் தரகர்களும் விவசாய அலுவலர்களும் தான் இலாபம் ஈட்டும் நிலை உள்ளது என்பதற்கு ஒரு உதாரணம் இங்கு காண்போம் இன்று வேளாண்மை பட்ஜெட் தாக்கல்..
இந்த இரண்டு வாழைப்பழத்த சென்னை சேப்பாக்கம் கடையில் வாங்கினேன்..விலை 10 ரூபாய்.
இதே பழம் ஆலவிளாம்பட்டி கிராமத்து விவசாயி தோட்டத்தில் நூறு பழம் கொண்ட ஒரு வாழைத்தாரை விலை 100 ரூபாய்க்கு தான் ஒரு வியாபாரி வாங்குகிறார்
அவரது தோட்டத்தில் தேங்காய் விலை 9 ரூபாய்
சென்னையில் 22 ரூபாய் விற்கிறது
விவசாயிகளின் விளைபொருட்கள் விலையை அரசு நிர்ணயிக்காத வரை உங்கள் ஊக்கதொகை
நமது விவசாதயிகளுக்கு உதவாது என்பதே இங்கு உண்மை நிலை.
விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்றுங்கள் என்பதே இங்கு பொதுநீதி
கருத்துகள்