முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பேரிடர் அபாயக் குறைப்புக்கான தேசிய தளத்தின் 3-வது அமர்வு

பேரிடர் அபாயக் குறைப்புக்கான தேசிய தளத்தின் 3-வது அமர்வை பிரதமர் தொடங்கி வைத்தார்


சுபாஷ் சந்திரபோஸ் மேலாண்மை விருது பெற்றவர்களுக்கு பாராட்டு

“துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கங்கள் ஏற்பட்ட பிறகு இந்தியாவின் மேலாண்மை அமைப்பின் முயற்சிகளுக்கு உலக அளவில் அங்கீகாரம்”


“ மேலாண்மை சம்பந்தமாக இந்தியாவின் தொழில்நுட்ப மற்றும் மனிதவள விரிவாக்கத்தின் மூலம் சிறந்த அளவில் சேவை”


“வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற திட்டமிடல் போன்றவற்றிற்கு அடிப்படை அளவிலான முன்மாதிரிகளை உருவாக்க வேண்டும், இந்தத் துறைகளில் நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும்”

“அங்கீகாரம் மற்றும் சீர்திருத்தம் ஆகிய இரண்டு முக்கிய அங்கங்கள் மூலம் பேரிடர் மேலாண்மை வலுப்படும்”

“உள்ளூர் பங்களிப்பின் வாயிலாக பெறப்படும் உள்ளூர் விரிவாற்றல் மூலமே வெற்றி பெற முடியும்”

“வீடுகளின் ஆயுட்காலம், கழிவுநீர் வடிகால், மின்சார விரிவாற்றல் மற்றும் குடிநீருக்கான உள்கட்டமைப்பு போன்றவைகள் குறித்த ஆற்றலே ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபவதற்கு உதவும்”

“செயற்கை நுண்ணறிவு, 5ஜி மற்றும் இணையதள சேவைகள் பயன்பாட்டின் மூலமே வரும் காலங்களில் அவசரகால ஊர்திகளை தேவைப்படும் போது விரைந்து இயக்க முடியும்

பேரிடர் அபாயக் குறைப்புக்கான தேசிய தளத்தின் 3-வது அமர்வை பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லியில் இன்று தொடங்கி வைத்தார்.  இந்த 3-வது நிகழ்வின் முக்கிய கருப்பொருள் "மாறிவரும் பருவநிலையில் உள்ளூர் விரிவாற்றலைக் கட்டமைத்தல்" ஆகும். 

இந்த நிகழ்வின் போது, சுபாஷ் சந்திரபோஸ்  மேலாண்மை விருது பெற்றவர்களுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். 2023- புரஸ்கார் விருது வென்றவர்கள்: ஒடிசா மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் மிசோரமின் லுங்கிலி தீயணைப்பு நிலையம் ஆகும்.

மேலும் பேரிடர் ஆபத்து குறைத்தல் துறையில் புத்தாக்க சிந்தனைகள், முன்முயற்சிகள், கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்த கண்காட்சியையும் பிரதமர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா, உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந்த் ராய் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், அண்மையில் துருக்கி மற்றும் சிரியாவில் இந்திய பேரிடர் மீட்புக் குழுவினர் ஆற்றிய பணிகளுக்கு உலகளவில் பாராட்டுகள் குவிந்துள்ளதாகவும் இது ஒவ்வொரு இந்தியரையும் பெருமையடையச் செய்துள்ளது எனவும் கூறினார். பேரிடர் மேலாண்மை தொடர்பான தொழில்நுட்பம் மற்றும் மனிதவளத்தை இந்தியா சிறப்பாக விரிவுப்படுத்தியுள்ளது என்றும் இது நாட்டுக்கு நன்கு பயனளித்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார். பேரிடர் மேலாண்மை அமைப்பை வலுப்படுத்தவும், மேம்படுத்தவும் ஆரோக்கியமான போட்டிகளை ஊக்குவிக்கவும், விருதுகள் நிறுவப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பேரிடர் மேலாண்மை விருது பெற்றவர்களுக்கு பிரதமர் பாராட்டுத் தெரிவித்தார்.

மாறும் பருவநிலைக்கு ஏற்ப உள்ளூரில் மீட்சித் தன்மையுடன் கட்டடங்களை உருவாக்குதல் என்ற இந்த நிகழ்ச்சியின் கருப்பொருள் இந்தியப் பாரம்பரியத்தில் நன்கு வெளிப்படுவதாக பிரதமர் கூறினார். கிணறுகள், பாரம்பரிய கட்டடக்கலைகள், பழங்கால நகரங்கள் போன்றவற்றில் இவை தெளிவாகக் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியாவில் பேரிடர் மேலாண்மைக்கானத் தீர்வுகள் மற்றும் உத்திகள் உள்ளூரிலேயே உள்ளன என்றும் அவர் கூறினார். கட்ச் பகுதியில் நிலநடுக்கத்திலிருந்து தப்பிய வீடுகளை அவர் உதாரணமாகக் குறிப்பிட்டார். புதிய தொழில்நுட்பங்களின் அடிப்படையில் வீட்டுவசதி மற்றும் நகர்புறத் திட்டமிடல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். உள்ளூர் தொழில்நுட்பம்  மற்றும் உள்ளூர்ப் பொருட்களைப் பயன்படுத்துவதும் தற்போதையத் தேவை என்றும் அவர் கூறினார். எதிர்கால தொழில்நுட்பத்துடன் உள்ளூர் தன்மைகளை இணைக்கும் போது பேரிடரை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளில் நாம் சிறப்பாக செயல்பட முடியும் என்று அவர் தெரிவித்தார்.

கடந்தகால வாழ்க்கை முறைகள் மிக வசதியாக இருந்தன என்று கூறிய அவர் வறட்சி, வெள்ளம், தொடர் மழை போன்ற இயற்கைப் பேரிடர்களை சமாளிப்பது குறித்து அனுபவமே நமக்கு கற்றுக் கொடுத்ததாகக் கூறினார். முந்தைய அரசுகள் பேரிடர் நிவாரணங்களை வேளாண் துறையுடன் இணைத்திருந்ததாக அவர் தெரிவித்தார். பூகம்பம் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்கள் ஏற்படும்போது அவை உள்ளூர் அளவில், உள்ளூர் உதவிகளைக் கொண்டு எதிர்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார். தற்போது நாம் வசிக்கும் சிறிய உலகில் அனுபவங்களை பல்வேறு தரப்புகளிலிருந்தும் நாம் கற்றுக்கொள்வது வழக்கமாகிவிட்டது என்றும் அவர் தெரிவித்தார். முன்பு கிராமங்களில் ஒரே மருத்துவர் அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளித்ததாகவும் தற்போது ஒவ்வொரு நோய்க்கும் சிறப்பு மருத்துவர் உள்ளதாகவும் பிரதமர் உதாரணமாகக் கூறினார். அதேபோல இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ள ஆற்றல்மிக்க அமைப்பை உருவாக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். கடந்த நூற்றாண்டின் இயற்கைப் பேரிடர்களிலிருந்து துள்ளியமான கணிப்புகளை நாம் உருவாக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். பேரிடர்களை எதிர்கொள்ளும் நடைமுறைகளை தேவைக்கேற்ப நவீன முறையில் மாற்றியமைக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

அடையாளம் காணுதல் மற்றும் சீர்திருத்தங்கள் ஆகியவை பேரிடர் மேலாண்மையை வலுப்படுத்துவதற்கான இரண்டு முக்கிய அம்சங்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் அச்சுறுத்தல்களை அடையாளம் கண்டு எதிர்காலத்தில் அதனுடைத் தாக்கம் எப்படி இருக்கும் என்பதைக் கணிக்க அடையாளம் காணும் நடைமுறை உதவும் என்றும் அவர் கூறினார். இயற்கைப் பேரிடர்களின் அபாயங்களைக் குறைக்க சீர்திருத்தங்கள் முக்கியமானவை என்றும் அவர் தெரிவித்தார். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அமைப்பு முறைகளை மேலும் வலுவாக்கி நீண்டகால நடைமுறைகளுக்கேற்ப அவற்றை மேம்படுத்தும் அணுகுமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். முந்தைய காலங்களில் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் ஏற்பட்ட புயல்களால் ஏராளமானோர் உயிரிழந்ததை அவர் சுட்டிக்காட்டினார். ஆனால் உத்திகளில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் மற்றும் சீர்திருத்தங்களால் புயல் சேதங்களை சமாளிக்கும் திறனை இந்தியா பெற்றுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இயற்கைப் பேரிடர்களை நம்மால் தடுக்க முடியாது என்று கூறிய பிரதமர் சிறந்த உத்திகள் மற்றும் செயல்பாடுகளை மேற்கொள்வதன் மூலம் பாதிப்புகளை குறைக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

சுதந்திரத்திற்குப் பின்பு பேரிடர் மேலாண்மை முறையாக இல்லை என்று பிரதமர் தெரிவித்தார். சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகளுக்கு பின்னரும் கூட பேரிடர் மேலாண்மை தொடர்பான சட்டங்கள் எதுவும் உருவாக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். 2001-ம் ஆண்டில் பேரிடர் மேலாண்மைச் சட்டம் கொண்டு வந்தது குஜராத் மாநிலம் தான் என்று அவர் குறிப்பிட்டார். இந்தச் சட்டத்தின் அடிப்படையில் அப்போதைய மத்திய அரசு, பேரிடர் மேலாண்மைச் சட்டத்தை இயற்றியதாகவும் அதன் பின்னர் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் உருவாக்கப்பட்டது எனவும் பிரதமர் கூறினார்.

உள்ளாட்சி அமைப்புகளில் பேரிடர் மேலாண்மையை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தினார். திட்டமிடலை முறைப்படுத்தி அதனை நிறுவனமயமாக்குவதுடன் உள்ளூர் திட்டமிடல்களை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். அமைப்பு முறைகளை முழுமையாக மாற்றியமைக்க வேண்டும் என்று கூறிய அவர் இரண்டு நிலைகளில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார். முதலாவதாக பேரிடர் மேலாண்மையில் பொதுமக்கள் பங்களிப்பை அதிகரிப்பதில் பேரிடர் மேலாண்மை வல்லுநர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நிலநடுக்கம், புயல், தீ விபத்து மற்றும் பிற பேரிடர் ஆபத்துகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை அதிகரிப்பதற்கு தொடர் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இது தொடர்பாக முறையான செயல்முறை, பயிற்சி உள்ளிட்டவைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அவசியம் என்றும் அவர் கூறினார். உள்ளூர் பங்களிப்பின் மூலமே வெற்றியை அடைய முடியும் என்ற தாரக மந்திரத்தைப் பின்பற்றி செயலாற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இளைஞர் குழுக்கள் உள்ளிட்டவற்றை கிராமப்புற அளவில் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.  தேசிய மாணவர் படை, நாட்டு நலப் பணித் திட்டம், முன்னாள் ராணுவத்தினர் போன்றவர்களின் பணிகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். மீட்புப் பணிகளை உரிய நேரத்தில் மேற்கொள்ளும் வகையில் சமுதாய மையங்களில் உரிய உபகரணங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இரண்டாவது நிலையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உடனுக்குடன் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். குடியிருப்புகளின் ஆயுட்காலம், கழிவுநீர் வடிகால், மின்சாரம், குடிநீருக்கான உள்கட்டமைப்பு போன்றவை தொடர்பான தகவல்கள் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க உதவும் என்றும் அவர்  தெரிவித்தார். மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்துகள் குறித்தும் மருத்துவமனைகளில் தீயணைப்புக்குத் தேவையான தயார்நிலைக் குறித்தும் ஆய்வு செய்யப்பட வேண்டியது அவசியம் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

கடந்த சில ஆண்டுகளாக வெப்பம் அதிகரித்து வரும் சூழலில் நகர்ப்புறப் பகுதிகளில் மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், உணவகங்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், போன்றவற்றில் தீ விபத்துகள் அதிகரித்திருப்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார். மக்கள் அடர்த்தி அதிகமுள்ள பகுதிகளை வாகனங்கள் மூலம் சென்றடைவதில் உள்ள சிக்கல்கள் குறித்துக் குறிப்பிட்ட பிரதமர் இதற்கு தீர்வுகாண வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். உயரமான கட்டடங்களில் ஏற்படும் தீயை அணைக்கும் வகையில் நமது தீயணைப்பு வீரர்களின் திறன்களை மேலும் அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். அதே நேரத்தில் தொழிற்சாலைகளில் ஏற்படும் தீயை அணைக்க போதுமான வசதிகள் உள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.

உள்ளூர் திறன்கள் மற்றும் உள்ளூர் உபகரணங்களை தொடர்ந்து நவீனப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று அவர் கூறினார். காடுகளில் இருந்து கிடைக்கப்பெறும் எரிபொருள்களை உயிரி எரிபொருள்களாக மாற்றும் உபகரணங்களை வழங்குவது மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு வழங்கும் வாய்ப்புகள் குறித்து ஆராய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இதன் மூலம் அவர்களது வருமானத்தை அதிகரிக்க முடியும் என்பதுடன், தீ விபத்துகளையும் குறைக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.  எரிவாயு கசிவுகள் அதிகமுள்ள தொழிற்சாலைகள் மற்றும் மருத்துவமனைகளில் சிறப்பு வல்லுநர்கள் குழுக்களை ஏற்படுத்த வேண்டியது குறித்தும் பிரதமர் எடுத்துரைத்தார். அதேபோல் அவசரகால ஊர்திகள் தொடர்பான கட்டமைப்புகளை எதிர்காலத் தேவைக்கேற்ப உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். இந்த விஷயத்தில் செயற்கை நுண்ணறிவு, 5ஜி, இணையதள சேவைக்கான உபகரண இணைப்பு ஆகிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது குறித்து ஆராய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். பேரிடர்களின் போது இடிபாடுகளுக்குள் புதையுண்டவர்களை மீட்பதில் ட்ரோன்கள், எச்சரிக்கை உபகரணங்கள் மற்றும் தனிநபர் உபகரணங்களை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். உலகளவில் சிறந்த நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிறந்த வழிமுறைகளைப் பின்பற்றுவது குறித்து வல்லுநர்கள் ஆராய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

உலகம் முழுவதும் பேரிடர்களின் போது இந்தியா விரைந்து செயலாற்றுவதாகவும் நெகிழ்ச்சித் தன்மையுடன் கூடிய உள்கட்டமைப்புக்கான முன்முயற்சிகளை எடுத்துவருவதாகவும் பிரதமர் தெரிவித்தார். இந்தியாவின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள பேரிடர் அபாயக் குறைப்பு உள்கட்டமைப்பு கூட்டமைப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் இணைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இன்றைய விவாதங்கள் பெரிய அளவில் ஆலோசனைகள் மற்றும் தீர்வுகளுக்கு வழிவகுக்கும் என்று கூறிய அவர் எதிர்கால செயல் திட்டங்களை நோக்கி இவை வழிநடத்தும் என்றும் பிரதமர் நம்பிக்கைத் தெரிவித்தார். பாரம்பரியமும், தொழில்நுட்பமும் நமது வலிமை என்று கூறிய பிரதமர், இந்த வலிமையுடன் பேரிடர் அபாயக் குறைப்பு கட்டமைப்பில் சிறந்த மாதிரியை நாம் உருவாக்க முடியும் என்று கூறினார். இது இந்தியாவுக்கானது மட்டுமல்ல என்றும் ஒட்டுமொத்த உலகத்துக்கானது என்றும் கூறி பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது உரையை நிறைவு செய்தார்.

என்பிடிஆர்ஆர் எனப்படும் பேரிடர் அபாயக் குறைப்புக்கான தேசியத் தளம் மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. பேரிடர் மீட்புத் தொடர்பான விவாதங்களை மேற்கொள்ளவும் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளவும், ஆலோசனைகளைத் தெரிவிக்கவும் செயல்திட்ட அடிப்படையிலான ஆய்வுகளை மேற்கொள்ளவும் இது வகை செய்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த