முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காசநோயை ஒழிப்போம் கூட்டாண்மையின் 36வது வாரியக் கூட்டம்

காசநோயை ஒழிப்போம் கூட்டாண்மையின் 36வது வாரியக் கூட்டம் டாக்டர். மன்சுக் மாண்டவியா தலைமையில் நடைபெறுகிறது


பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தீவிர முயற்சியால் இந்தியா காசநோயை முற்றிலும் ஒழிக்க உறுதி பூண்டுள்ளது. காசநோய்க்கு எதிரான கூட்டுப் போராட்டத்தில் முன்னணியில் இருந்து வழிநடத்தவும் உலகளாவிய தெற்கின் குரலாக இருக்கவும் நாம்  தயாராக இருக்கிறோம்: டாக்டர் மன்சுக் மாண்டவியா

காசநோயைக் கண்டறிவதற்கான புதிய முறைகள், கணக்கெடுப்பு, டிஜிட்டல் பயன்பாடுகள் மற்றும் கண்காணிப்பு என கள அளவில் சிறப்பான பணிகளை இந்தியா மேற்கொண்டுள்ளது.


சுகாதார வசதிகளை மக்களுக்கு சிறப்பாக வழங்க உலகம் இந்தியாவின் புதிய முறைகள் ஆலோசனைகள் மற்றும் உத்திகளை பின்பற்ற வேண்டும்: டாக்டர் லூசிகா டிட்டியு

"இந்தியாவில் காசநோயை ஒழிக்க மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் அர்ப்பணிப்பை நாம் காண்கிறோம். காசநோய்க்கு எதிரான கூட்டுப் போராட்டத்தில் முன்னணியில் இருந்து வழிநடத்தவும் உலகளாவிய தெற்கின் குரலாக இருக்கவும் நாம் தயாராக இருக்கிறோம்." என இன்று நடைபெற்ற காசநோயை ஒழிப்போம் கூட்டாண்மையின் 36வது வாரியக் கூட்டத்தில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். அவருடன் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார் கலந்து கொண்டார்.


கூட்டத்தில் உரையாற்றிய டாக்டர் மாண்டவியா, "ஜி 20 தலைமையின் கீழ் 3 முக்கியமான சுகாதார முன்னுரிமைகளை இந்தியா அடையாளம் கண்டுள்ளது. இவை அனைத்தும் உலகளாவிய சுகாதார காப்பீட்டில் கவனம் செலுத்துவதோடு காசநோயை முற்றிலும் ஒழிப்பதற்கான நமது முயற்சியிலும் தொடர்புடையவை" என்று கூறினார். "காசநோயைக் கண்டறிவதற்கான புதிய முறைகள், கணக்கெடுப்பு, டிஜிட்டல் பயன்பாடுகள் மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றின் மூலம் கள அளவில் சிறப்பான பணிகள் நிறைய செய்யப்படுகின்றன" என்றும் அவர் கூறினார். "இதுபோன்ற நல்ல நடைமுறைகளைப் பின்பற்ற மற்ற நாடுகளுடன் தொழில்நுட்ப உதவியைப் பகிர்ந்து கொள்வதில் இந்தியா மகிழ்ச்சியடையும்" என்று அவர் கூறினார்.

கோவிட் நோயிலிருந்து மீள்வதற்கு மட்டுமல்லாமல், பிரதமரின் காசநோய் இல்லாத பாரதம் திட்டம் போன்ற புதுமையான உத்திகளைக் கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக டாக்டர் மாண்டவியா கூறினார். காசநோய்க்கு முற்றுப்புள்ளி வைக்க சமூகங்களை அணிதிரட்டுவதற்கான அழைப்பு இது என்றும் அவர் கூறினார்.

காசநோய்க்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் காசநோய் தடுப்பூசியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த மத்திய சுகாதார அமைச்சர், காசநோயை ஒழிப்போம் கூட்டாண்மை வாரியம் இதைப் பற்றி ஆலோசித்து, இந்த ஆண்டு செப்டம்பரில் உலகளாவிய சுகாதார காப்பீடு   குறித்த ஐநா உயர்மட்டக் கூட்டத்தில் இந்த விஷயத்தை எடுத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தினார். "காசநோய் தடுப்பூசி அவசரமாக தேவை" என்றும் அவர் வலியுறுத்தினார். அதன் வளர்ச்சியை விரைவாகக் கண்காணிப்பதும் உற்பத்தித் திறனை விரிவுபடுத்துவதும் எளிதாக அணுகுவதற்கு நாடுகளுக்கு உதவுவதும் முக்கியம் என்று டாக்டர் மாண்டவியா சுட்டிக்காட்டினார்.

டாக்டர் லூசிகா டிட்டியு, "காசநோயை ஒழிப்பதில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கிறது. ஏனெனில் இந்தியாவின் முன்னேற்றம் உலகத்திற்கு உந்து சக்தியாக இருக்கும்" என்று வலியுறுத்தினார். "இந்தியாவின், நோயாளிகளுக்கான ஊட்டச்சத்து உணவுகளை அளித்தல் (Ni-kshay ) தரவு மூலம் மிகவும் அதிநவீன முறைகளைக் கொண்டுள்ளனர்" என்று இந்தியாவைப் பாராட்டினார். அவர்களின் புதிய முறைகள் ஆலோசனைகள்  மற்றும் சுகாதாரத்தை மக்களுக்கு நெருக்கமாகக் கொண்டுவருவதற்கான உத்திகள் முழு உலகமும் பின்பற்றக்கூடிய ஒன்று," என்று அவர் கூறினார்.

காசநோயை ஒழிப்போம் கூட்டாண்மை வாரியம் காசநோய் பற்றிய இந்தியாவின் மதிப்பீட்டை உள்நாட்டில் உள்ள ஆதாரங்களுடன் பாராட்டினார். இந்த நிகழ்வில் "காசநோயால் பாதிக்கப்பட்ட சமூகங்கள் மற்றும் சிவில் சமூகத்தின் பொறுப்பு: கொடிய இடைவெளியைக் குறைப்பதற்கான முன்னுரிமைகள்" அறிக்கை வெளியிடப்பட்டது.

சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திருமதி. ரோலி சிங், தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்திற்கான உலக சுகாதார அமைப்பின் பிராந்திய இயக்குநர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங், காச நோயை ஒழிப்போம் கூட்டாண்மை அமைப்பின் துணைத் தலைவர் திரு ஆஸ்டின் அரின்ஸ் ஒபிஃபுனா, சுகாதார அமைச்சக இணை செயலாளர் டாக்டர் அசோக் பாபு, மத்திய சுகாதார அமைச்சக காசநோய் பிரிவு துணை பொது இயக்குநர் டாக்டர் ராஜேந்திர ஜோஷி, சுகாதார அமைச்சக மத்திய காசநோய் பிரிவு உதவி பொது இயக்குநர் டாக்டர் ராவ் மற்றும் உயர் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...