முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காசநோயை ஒழிப்போம் கூட்டாண்மையின் 36வது வாரியக் கூட்டம்

காசநோயை ஒழிப்போம் கூட்டாண்மையின் 36வது வாரியக் கூட்டம் டாக்டர். மன்சுக் மாண்டவியா தலைமையில் நடைபெறுகிறது


பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தீவிர முயற்சியால் இந்தியா காசநோயை முற்றிலும் ஒழிக்க உறுதி பூண்டுள்ளது. காசநோய்க்கு எதிரான கூட்டுப் போராட்டத்தில் முன்னணியில் இருந்து வழிநடத்தவும் உலகளாவிய தெற்கின் குரலாக இருக்கவும் நாம்  தயாராக இருக்கிறோம்: டாக்டர் மன்சுக் மாண்டவியா

காசநோயைக் கண்டறிவதற்கான புதிய முறைகள், கணக்கெடுப்பு, டிஜிட்டல் பயன்பாடுகள் மற்றும் கண்காணிப்பு என கள அளவில் சிறப்பான பணிகளை இந்தியா மேற்கொண்டுள்ளது.


சுகாதார வசதிகளை மக்களுக்கு சிறப்பாக வழங்க உலகம் இந்தியாவின் புதிய முறைகள் ஆலோசனைகள் மற்றும் உத்திகளை பின்பற்ற வேண்டும்: டாக்டர் லூசிகா டிட்டியு

"இந்தியாவில் காசநோயை ஒழிக்க மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் அர்ப்பணிப்பை நாம் காண்கிறோம். காசநோய்க்கு எதிரான கூட்டுப் போராட்டத்தில் முன்னணியில் இருந்து வழிநடத்தவும் உலகளாவிய தெற்கின் குரலாக இருக்கவும் நாம் தயாராக இருக்கிறோம்." என இன்று நடைபெற்ற காசநோயை ஒழிப்போம் கூட்டாண்மையின் 36வது வாரியக் கூட்டத்தில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். அவருடன் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார் கலந்து கொண்டார்.


கூட்டத்தில் உரையாற்றிய டாக்டர் மாண்டவியா, "ஜி 20 தலைமையின் கீழ் 3 முக்கியமான சுகாதார முன்னுரிமைகளை இந்தியா அடையாளம் கண்டுள்ளது. இவை அனைத்தும் உலகளாவிய சுகாதார காப்பீட்டில் கவனம் செலுத்துவதோடு காசநோயை முற்றிலும் ஒழிப்பதற்கான நமது முயற்சியிலும் தொடர்புடையவை" என்று கூறினார். "காசநோயைக் கண்டறிவதற்கான புதிய முறைகள், கணக்கெடுப்பு, டிஜிட்டல் பயன்பாடுகள் மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றின் மூலம் கள அளவில் சிறப்பான பணிகள் நிறைய செய்யப்படுகின்றன" என்றும் அவர் கூறினார். "இதுபோன்ற நல்ல நடைமுறைகளைப் பின்பற்ற மற்ற நாடுகளுடன் தொழில்நுட்ப உதவியைப் பகிர்ந்து கொள்வதில் இந்தியா மகிழ்ச்சியடையும்" என்று அவர் கூறினார்.

கோவிட் நோயிலிருந்து மீள்வதற்கு மட்டுமல்லாமல், பிரதமரின் காசநோய் இல்லாத பாரதம் திட்டம் போன்ற புதுமையான உத்திகளைக் கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக டாக்டர் மாண்டவியா கூறினார். காசநோய்க்கு முற்றுப்புள்ளி வைக்க சமூகங்களை அணிதிரட்டுவதற்கான அழைப்பு இது என்றும் அவர் கூறினார்.

காசநோய்க்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் காசநோய் தடுப்பூசியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த மத்திய சுகாதார அமைச்சர், காசநோயை ஒழிப்போம் கூட்டாண்மை வாரியம் இதைப் பற்றி ஆலோசித்து, இந்த ஆண்டு செப்டம்பரில் உலகளாவிய சுகாதார காப்பீடு   குறித்த ஐநா உயர்மட்டக் கூட்டத்தில் இந்த விஷயத்தை எடுத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தினார். "காசநோய் தடுப்பூசி அவசரமாக தேவை" என்றும் அவர் வலியுறுத்தினார். அதன் வளர்ச்சியை விரைவாகக் கண்காணிப்பதும் உற்பத்தித் திறனை விரிவுபடுத்துவதும் எளிதாக அணுகுவதற்கு நாடுகளுக்கு உதவுவதும் முக்கியம் என்று டாக்டர் மாண்டவியா சுட்டிக்காட்டினார்.

டாக்டர் லூசிகா டிட்டியு, "காசநோயை ஒழிப்பதில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கிறது. ஏனெனில் இந்தியாவின் முன்னேற்றம் உலகத்திற்கு உந்து சக்தியாக இருக்கும்" என்று வலியுறுத்தினார். "இந்தியாவின், நோயாளிகளுக்கான ஊட்டச்சத்து உணவுகளை அளித்தல் (Ni-kshay ) தரவு மூலம் மிகவும் அதிநவீன முறைகளைக் கொண்டுள்ளனர்" என்று இந்தியாவைப் பாராட்டினார். அவர்களின் புதிய முறைகள் ஆலோசனைகள்  மற்றும் சுகாதாரத்தை மக்களுக்கு நெருக்கமாகக் கொண்டுவருவதற்கான உத்திகள் முழு உலகமும் பின்பற்றக்கூடிய ஒன்று," என்று அவர் கூறினார்.

காசநோயை ஒழிப்போம் கூட்டாண்மை வாரியம் காசநோய் பற்றிய இந்தியாவின் மதிப்பீட்டை உள்நாட்டில் உள்ள ஆதாரங்களுடன் பாராட்டினார். இந்த நிகழ்வில் "காசநோயால் பாதிக்கப்பட்ட சமூகங்கள் மற்றும் சிவில் சமூகத்தின் பொறுப்பு: கொடிய இடைவெளியைக் குறைப்பதற்கான முன்னுரிமைகள்" அறிக்கை வெளியிடப்பட்டது.

சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திருமதி. ரோலி சிங், தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்திற்கான உலக சுகாதார அமைப்பின் பிராந்திய இயக்குநர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங், காச நோயை ஒழிப்போம் கூட்டாண்மை அமைப்பின் துணைத் தலைவர் திரு ஆஸ்டின் அரின்ஸ் ஒபிஃபுனா, சுகாதார அமைச்சக இணை செயலாளர் டாக்டர் அசோக் பாபு, மத்திய சுகாதார அமைச்சக காசநோய் பிரிவு துணை பொது இயக்குநர் டாக்டர் ராஜேந்திர ஜோஷி, சுகாதார அமைச்சக மத்திய காசநோய் பிரிவு உதவி பொது இயக்குநர் டாக்டர் ராவ் மற்றும் உயர் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...