முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காசநோயை ஒழிப்போம் கூட்டாண்மையின் 36வது வாரியக் கூட்டம்

காசநோயை ஒழிப்போம் கூட்டாண்மையின் 36வது வாரியக் கூட்டம் டாக்டர். மன்சுக் மாண்டவியா தலைமையில் நடைபெறுகிறது


பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தீவிர முயற்சியால் இந்தியா காசநோயை முற்றிலும் ஒழிக்க உறுதி பூண்டுள்ளது. காசநோய்க்கு எதிரான கூட்டுப் போராட்டத்தில் முன்னணியில் இருந்து வழிநடத்தவும் உலகளாவிய தெற்கின் குரலாக இருக்கவும் நாம்  தயாராக இருக்கிறோம்: டாக்டர் மன்சுக் மாண்டவியா

காசநோயைக் கண்டறிவதற்கான புதிய முறைகள், கணக்கெடுப்பு, டிஜிட்டல் பயன்பாடுகள் மற்றும் கண்காணிப்பு என கள அளவில் சிறப்பான பணிகளை இந்தியா மேற்கொண்டுள்ளது.


சுகாதார வசதிகளை மக்களுக்கு சிறப்பாக வழங்க உலகம் இந்தியாவின் புதிய முறைகள் ஆலோசனைகள் மற்றும் உத்திகளை பின்பற்ற வேண்டும்: டாக்டர் லூசிகா டிட்டியு

"இந்தியாவில் காசநோயை ஒழிக்க மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் அர்ப்பணிப்பை நாம் காண்கிறோம். காசநோய்க்கு எதிரான கூட்டுப் போராட்டத்தில் முன்னணியில் இருந்து வழிநடத்தவும் உலகளாவிய தெற்கின் குரலாக இருக்கவும் நாம் தயாராக இருக்கிறோம்." என இன்று நடைபெற்ற காசநோயை ஒழிப்போம் கூட்டாண்மையின் 36வது வாரியக் கூட்டத்தில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். அவருடன் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார் கலந்து கொண்டார்.


கூட்டத்தில் உரையாற்றிய டாக்டர் மாண்டவியா, "ஜி 20 தலைமையின் கீழ் 3 முக்கியமான சுகாதார முன்னுரிமைகளை இந்தியா அடையாளம் கண்டுள்ளது. இவை அனைத்தும் உலகளாவிய சுகாதார காப்பீட்டில் கவனம் செலுத்துவதோடு காசநோயை முற்றிலும் ஒழிப்பதற்கான நமது முயற்சியிலும் தொடர்புடையவை" என்று கூறினார். "காசநோயைக் கண்டறிவதற்கான புதிய முறைகள், கணக்கெடுப்பு, டிஜிட்டல் பயன்பாடுகள் மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றின் மூலம் கள அளவில் சிறப்பான பணிகள் நிறைய செய்யப்படுகின்றன" என்றும் அவர் கூறினார். "இதுபோன்ற நல்ல நடைமுறைகளைப் பின்பற்ற மற்ற நாடுகளுடன் தொழில்நுட்ப உதவியைப் பகிர்ந்து கொள்வதில் இந்தியா மகிழ்ச்சியடையும்" என்று அவர் கூறினார்.

கோவிட் நோயிலிருந்து மீள்வதற்கு மட்டுமல்லாமல், பிரதமரின் காசநோய் இல்லாத பாரதம் திட்டம் போன்ற புதுமையான உத்திகளைக் கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக டாக்டர் மாண்டவியா கூறினார். காசநோய்க்கு முற்றுப்புள்ளி வைக்க சமூகங்களை அணிதிரட்டுவதற்கான அழைப்பு இது என்றும் அவர் கூறினார்.

காசநோய்க்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் காசநோய் தடுப்பூசியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த மத்திய சுகாதார அமைச்சர், காசநோயை ஒழிப்போம் கூட்டாண்மை வாரியம் இதைப் பற்றி ஆலோசித்து, இந்த ஆண்டு செப்டம்பரில் உலகளாவிய சுகாதார காப்பீடு   குறித்த ஐநா உயர்மட்டக் கூட்டத்தில் இந்த விஷயத்தை எடுத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தினார். "காசநோய் தடுப்பூசி அவசரமாக தேவை" என்றும் அவர் வலியுறுத்தினார். அதன் வளர்ச்சியை விரைவாகக் கண்காணிப்பதும் உற்பத்தித் திறனை விரிவுபடுத்துவதும் எளிதாக அணுகுவதற்கு நாடுகளுக்கு உதவுவதும் முக்கியம் என்று டாக்டர் மாண்டவியா சுட்டிக்காட்டினார்.

டாக்டர் லூசிகா டிட்டியு, "காசநோயை ஒழிப்பதில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கிறது. ஏனெனில் இந்தியாவின் முன்னேற்றம் உலகத்திற்கு உந்து சக்தியாக இருக்கும்" என்று வலியுறுத்தினார். "இந்தியாவின், நோயாளிகளுக்கான ஊட்டச்சத்து உணவுகளை அளித்தல் (Ni-kshay ) தரவு மூலம் மிகவும் அதிநவீன முறைகளைக் கொண்டுள்ளனர்" என்று இந்தியாவைப் பாராட்டினார். அவர்களின் புதிய முறைகள் ஆலோசனைகள்  மற்றும் சுகாதாரத்தை மக்களுக்கு நெருக்கமாகக் கொண்டுவருவதற்கான உத்திகள் முழு உலகமும் பின்பற்றக்கூடிய ஒன்று," என்று அவர் கூறினார்.

காசநோயை ஒழிப்போம் கூட்டாண்மை வாரியம் காசநோய் பற்றிய இந்தியாவின் மதிப்பீட்டை உள்நாட்டில் உள்ள ஆதாரங்களுடன் பாராட்டினார். இந்த நிகழ்வில் "காசநோயால் பாதிக்கப்பட்ட சமூகங்கள் மற்றும் சிவில் சமூகத்தின் பொறுப்பு: கொடிய இடைவெளியைக் குறைப்பதற்கான முன்னுரிமைகள்" அறிக்கை வெளியிடப்பட்டது.

சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திருமதி. ரோலி சிங், தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்திற்கான உலக சுகாதார அமைப்பின் பிராந்திய இயக்குநர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங், காச நோயை ஒழிப்போம் கூட்டாண்மை அமைப்பின் துணைத் தலைவர் திரு ஆஸ்டின் அரின்ஸ் ஒபிஃபுனா, சுகாதார அமைச்சக இணை செயலாளர் டாக்டர் அசோக் பாபு, மத்திய சுகாதார அமைச்சக காசநோய் பிரிவு துணை பொது இயக்குநர் டாக்டர் ராஜேந்திர ஜோஷி, சுகாதார அமைச்சக மத்திய காசநோய் பிரிவு உதவி பொது இயக்குநர் டாக்டர் ராவ் மற்றும் உயர் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த