முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிஐஎஸ் சென்னையில் நடத்திய பல்வேறு நிகழ்ச்சிகள்

இந்திய தர நிர்ணய அமைவனம் , சென்னை - உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு இன்று குவாலிட்டி கனெக்ட் மற்றும் மானக் மந்தன் நிகழ்ச்சிகளை நடத்தியது


பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பிஐஎஸ் சென்னை பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியது

இந்திய தர நிர்ணய அமைவனம் (பி .ஐ .எஸ்) என்பது இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டரீதியான அமைப்பாகும். இது பொருள்களுக்கான தர உரிமம் (ஐஎஸ்ஐ மார்க்), மேலாண்மை திட்ட சான்றிதழ், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள்/கலைப் பொருள்களுக்கான ஹால்மார்க் உரிமம் மற்றும் ஆய்வகச் சேவைகளின் நலன் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது.


BIS , சென்னை கிளை அலுவலகம் உலக நுகர்வோர் உரிமை தினத்தை முன்னிட்டு இன்று இரண்டு நிகழ்ச்சிகளை நடத்தியது.

A ) குவாலிட்டி கனெக்ட் : 8 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் 1 நுகர்வோர் அமைப்பைச் சேர்ந்த மானக் மித்ராக்கள், நுகர்வோரின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று தர நியமங்கள் மற்றும் தரம் குறித்த விழிப்புணர்வை உருவாக்கும்



நிகழ்ச்சி இன்று தொடங்கியது. இன்று காலை சென்னை பெட்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், BIS தென்மண்டலத்தின் துணை இயக்குநர் ஜெனரல் ஸ்ரீ யுஎஸ்பி யாதவ், விழாவைச கொடியேற்றி துவக்கி வைத்தார். மேலும் கடலூர் சி.கந்தசுவாமி நாயுடு மகளிர் கல்லூரி மாணவர்களும் . செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கடலூர்;பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, விழுப்புரம்; பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், புதுச்சேரி; அரசு பாலிடெக்னிக் கல்லூரி, ஜோலார்பேட்டை; ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரி, வேலூர்; அருணை பொறியியல் கல்லூரி, திருவண்ணாமலை; பேட்ரிசியன் காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ் & சயின்ஸ், சென்னை & நுகர்வோர் அமைப்பு, கடலூர் ஆகியவை BIS சார்பாக தரம் பற்றிய விழிப்புணர்வை மேற்கொள்வர் . இந்த மானக் மித்ராக்கள் BIS செயல்பாடுகள் பற்றிய தகவல்களை பொது நுகர்வோருடன் பகிர்ந்து கொள்வார்கள்.



B ) மானக் மந்தன் : இந்திய தர நியமம் 15748:2022/ISO 11612:2015 இன் படி வெப்பம் மற்றும் நெருப்பிலிருந்து பாதுகாப்பளிக்கும் ஆடைகளுக்கான -குறைந்தபட்ச செயல்திறன் தேவைகள் “” என்ற தலைப்பில், "மானக் மந்தன்” நிகழ்ச்சி சென்னையில் இன்று 15 மார்ச் 2023 நடைபெற்றது. இந்த தர நியமம் , உற்பத்தியாளர்களால் மிக உயர்ந்த தரத்தை அளிப்பதை உறுதி செய்கிறது மற்றும் சுகாதார அபாயங்களைக் குறைப்பதன் மூலம் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறது. அதிக அளவிலான பயன்பாட்டிற்காக அணியக்கூடிய பாதுகாப்பு ஆடைகள், ஆடைகள் தேவைப்படும் இடங்களில் ( வரையறுக்கப்பட்ட நெருப்பு பரவல் மற்றும் தொழிலாளர்கள் கதிரியக்க அல்லது வெப்பச்சலனத்திற்கு உள்ளாகும் போது அல்லது வெப்பம் அல்லது உருகிய உலோகத் தெறிப்புகளைத் தொடர்புகொள்ளும் பொது) , தொழிலாளர்களுக்கு உடல்நலக் கேடுகளைக் குறைக்கிறது. நிகழ்வில் 33 பங்குதாரர்கள் கலந்து கொண்டனர். திரு எம் வி கார்த்திகேயன், தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் (எஃப்ஏசி),தமிழக அரசு நிகழ்ச்சியின் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார்.

திருமதி பவானி , Scientist-E, Director & Head (BIS-Chennai Branch Office) நிகழ்ச்சியின் நோக்கங்களை விளக்கினார் BIS இன் மற்ற அதிகாரிகள் தொழில்நுட்ப அமர்வுகளை நடத்தினர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு