தனி நபர்களை வற்புறுத்தி தனியார் நிதி நிறுவனங்கள் கடன் வழங்கக் கூடாதென, மதுரை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு.
மதுரை நாராயணபுரம் இந்தியன் வங்கி காலனியைச் சேர்ந்த பார்த்தசாரதி பெருமாள். இவர் மதுரை நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு விவரம் வருமாறு:
மதுரை மாவட்ட நீதிமன்றத்துக்கு எதிரில் செயல்படும் தனியார் நிதி நிறுவனத்தில் 2004 ஆம் ஆண்டில் நான் ரூபாய்.30,000 கடன் பெற்றேன். அதற்குரிய வட்டி மற்றும் அசலையும் தவனை தவறாமல் செலுத்தி வந்தேன். இந்த நிலையில் அந்த நிதி நிறுவனம் சார்பில் மேலும் பல சலுகையில் கடன் பெற்றுக்கொள்ளுங்கள் என தொடர்ந்து வற்புறுத்துகிறது. இதனால் நான் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளேன். மேலும் நான் இதுவரை கடனுக்காக செலுத்திய பணத்துக்கான விவரப் பட்டியலையும் அந்த நிறுவனம் தரமறுத்தது. எனவே, பணம் செலுத்தியதற்கான விவரப் பட்டியலை வழங்கவும், கடன் வாங்கச் சொல்லி வற்புறுத்தி வருவதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்த நிலையில்
மனுவை விசாரித்து, மனுதாரரை கடன் பெறச் சொல்லி நிதிநிறுவனம் வற்புறுத்தக் கூடாது எனவும், இந்த வழக்கு முடியும்போது மனுதாரரின் பணம் செலுத்திய பட்டியல் வழங்குவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி ராஜகோபால் உத்தரவிட்டார்.
கருத்துகள்