முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருச்சிராப்பள்ளி தனிப்படையை சிறைபிடித்து வைத்த இராஜஸ்தான் காவல்துறை

திருச்சிராப்பள்ளி  கருமண்டபத்திலுள்ள ஒரு வீட்டில் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் .17 ஆம் தேதி 13 பவுன் நகை, ரூபாய்.17 ஆயிரம் ரொக்கம், ஒரு கை மடிக் கணிப்பொறி உள்ளிட்டவை களவு போனது.


அதை மீட்கச் சென்ற திருச்சிராப்பள்ளி தனிப்படையை சிறைபிடித்து வைத்த இராஜஸ்தான் காவல்துறை பொய்யான இலஞ்சப் புகார் எனத் தெரிந்து விடுவித்தது

இதுதொடர்பாக இராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டம் பினய் பகுதி  ரத்தன் (வயது 38), சங்கர் (வயது 25), அவரது சகோதரர் ராம்பிரசாத் (வயது 25), ராமா (வயது 40) ஆகியோரை செஷன்ஸ் நீதிமன்ற உத்தரவில் காவல்துறையினர் கைது செய்தனர்.

விசாரணையில், இவர்கள் தமிழ் நாட்டின் பல பகுதிகளிலும் திருட்டில் ஈடுபட்டது தெரிந்ததையடுத்து திருட்டு நகைகளை மீட்க திருச்சிராப்பள்ளி கன்டோன்மென்ட் காவல்துறை உதவி ஆணையர் கென்னடி, ஆய்வாளர்கள் மோகன், ஷியாமளா தேவி, சார்பு ஆய்வாளர் உமா உள்ளிட்ட 15 பேர் கொண்ட தனிப்படை காவல்துறையினர் ரத்தன், சங்கரை கூட்டிக் கொண்டு வேனில் இராஜஸ்தான் சென்றனர்.அங்குள்ள அஜ்மீர் மாவட்டத்திலுள்ள உள்ளூர் காவலரின் உதவியுடன், ரத்தன் தெரிவித்த ஒரு நகைக்கடை வியாபாரியைச் சந்தித்த திருச்சிராப்பள்ளி காவல்துறையினர், அவரிடமிருந்து 300 கிராம் தங்கம், ரூபாய்.2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்த பின், மற்றொரு நகை வியாபாரியான பர்னலாலைத் தேடிச் சென்றபோது, அவர் தப்பிச் சென்றுவிட்டதனால், அவரது மனைவி சானியாவிடம் விசாரித்தனர்.

அப்போது திருச்சிராப்பள்ளி காவல்திறையினரைத் தொடர்பு கொண்ட சானியாவின் சகோதரர் லட்சுமணன், திருட்டு நகைகளை விற்றுவிட்டதாகவும், அதற்குப் பதிலாக ரூபாய்.25 லட்சம் பணம் கொடுத்து விடுவதாகவும் கூறியுள்ளார். திருச்சிராப்பபள்ளி காவலர்கள் லட்சுமணன் கூறியபடி, சானியாவை அழைத்துக் கொண்டு வேனில் அஜ்மீர் சென்றனர்.

இதற்கிடையே, திருட்டு வழக்கில் தனது சகோதரியை கைது செய்யாமலிருக்க திருச்சிராப்பள்ளி தனிப்படை காவலர்கள் லஞ்சம் கேட்பதாக அஜ்மீரிலுள்ள இலஞ்ச ஒழிப்புத் துறையில் லட்சுமணன் புகார் செய்துள்ளார். அதை நம்பிய இராஜஸ்தான் விஜிலன்ஸ்  நேற்று முன்தினம் மாலை அஜ்மீரிலிருந்த இன்ஸ்பெக்டர் மோகன், சப் இன்ஸ்பெக்டர் உமா உள்ளிட்ட 12 பேரை சிறைபிடித்து விசாரணைக்குக் கூட்டிச் சென்றனர்.

அதையறிந்த தமிழ்நாடு  டிஜிபி சைலேந்திர பாபு, திருச்சிராப்பள்ளி மாநகரக் காவல்துறை ஆணையர் சத்தியப்பிரியா உள்ளிட்டோர் இராஜஸ்தான் காவல் உயரதிகாரிகளைத் தொடர்புகொண்டு சம்பவங்களை விளக்கினர். அதையடுத்து, தமிழ் நாடு தனிப்படைக் காவலர்களை இராஜஸ்தான் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் 21 மணி நேரத்துக்குப் பின் நேற்று முன்தினம்  மாலை விடுவித்தனர். பிறகு பறிமுதல் செய்யப்பட்ட 300 கிராம் தங்கம் உள்ளிட்டவற்றுடன் திருச்சிராப்பள்ளி தனிப்படைக் காவல்துறை வேனில் தமிழ்நாடு புறப்பட்டனர்.

இதற்கிடையே, ஜெய்ப்பூரிலிருந்து விமானத்தில் அழைத்து வரப்பட்ட ரத்தன், சங்கர் ஆகிய இருவரும் நேற்று முன்தினமே ஜே.எம்.2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதுகுறித்து திருச்சிராப்பள்ளி  காவல்துறை ஆணையர் எம்.சத்திய பிரியா 'செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘‘திருடர்கள் மற்றும் நகை வியாபாரிகளின் உறவினர்கள் திருச்சிராப்பள்ளி காவலர்களைச்  சிக்க வைப்பதற்காக, லஞ்சம் கேட்பதாக பொய் புகார் அளித்தனர். முதலில் அதை உண்மை என நம்பிய இராஜஸ்தான் லஞ்ச ஒழிப்புத் துறையினர், பிறகு தரப்பட்ட விளக்கத்தை ஏற்று உண்மை நிலையை அறிந்து கொண்டு நேற்று அனைவரையும் விடுவித்தனர் எனத்  கூறினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்