பிரதமரின் முன்முயற்சியால் காதிகிராம பொருட்களின் விற்பனை உயர்வு: காதிகிராமத் தொழில்ஆணையத் தலைவர் தகவல்
பிரதமரின் முன்முயற்சியால் காதிகிராம பொருட்களின் விற்பனை உயர்வு: காதிகிராமத் தொழில்ஆணையத்தலைவர்
பிரதமர் நரேந்திரமோடியின் சீரிய முன்முயற்சி காரணமாக காதி கிராம பொருட்கள் விற்பனை 1.15 கோடி ரூபாய்க்கும் மேல் கடந்துள்ளது என காதி கிராமத் தொழில் ஆணைய தலைவர் திரு மனோஜ்குமார் தெரிவித்துள்ளார்.
காதி கிராமத் தொழில் ஆணையம் சார்பில் திருப்பூரில் மார்ச் 11 முதல் 20 ஆம் தேதி வரையிலான மாநில அளவிலான கண்காட்சியை திறந்து வைத்து பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், காதி கிராம தொழிலை ஊக்குவிக்கும் விதமாக உற்பத்தி துறைக்கு ரூ. 50 லட்சம் வரையிலும், சேவை துறைக்கு ரூ. 20 லட்சம் வரையிலும் பிரதமரின் வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் கடனாக வழங்கப்படுவதாக தெரிவித்தார். மேலும், இந்த திட்டத்தின் கீழ் 8 லட்சத்திற்கும் அதிகமான நிறுவனங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாகவும், ரூ. 21 ஆயிரம் கோடிக்கும் மேல் மானியம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தேனீ இயக்கத்தின் கீழ் 17570 பேருக்கு 1.75 லட்சத்திற்கும் மேற்பட்ட தேனீ பெட்டிகள் மற்றும் தேனீக்கள் வழங்கப்பட்டுள்ளன, என்று கூறினார்.
மேலும், குயவர்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 24410 குயவர்களுக்கு மின்சார இயந்திரங்களும், 700க்கும் மேற்பட்ட தோல் கைவினைஞர்கள் மற்றும் 1560 அகர்பத்தி தயாரிப்பாளர்களுக்கு உற்பத்தி இயந்திரங்களும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்
. கைவினைஞர்களின் ஊதியத்தை 35%ஆக உயர்த்தியுள்ளதாக தெரிவித்த அவர், காதி கிராம தொழில் திட்டங்களின் மூலம் சுய தொழில்தொடங்க முன் வர வேண்டுமென தெரிவித்தார். தொடர்ந்து பிரதமர் சுய வேலை வாய்ப்பு திட்டத்தில் கடன் பெற்ற புதிய தொழில் முனைவோருக்கு மானியத் தொகை விடுவிக்கப்பட்டதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
கருத்துகள்