முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆம்ரோ கிங்ஸ் நிறுவன சதுரங்கவேட்டை போல மோசடி

ஆம்ரோ கிங்ஸ் நிறுவனத்தில் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதம் பத்து சதவீதம் என்ற அடிப்படையில் பத்தாயிரம் ரூபாய் திரும்பத் தருவதாக கூறினர்.


மேலும் பொதுமக்களிடம் வசூலிக்கும் பணத்தை ரியல் எஸ்டேட், சூப்பர் மார்க்கெட்,ஹோட்டல்கள், இன்சூரன்ஸ் நிறுவனம், தங்க வியாபாரம் உள்ளிட்ட 18 தொழில்களில் முதலீடு செய்து, அதில் பணத்தை முதலீடு செய்தவர்களையும் பங்குதாரர்களாக சேர்த்து ஒரு லட்சம் ரூபாய்க்கு 10 ஆயிரம் ரூபாய் வரை மாதம் திரும்பத் தருவதாக உறுதியளித்துள்ளனர்.இதனை நம்பி ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் பணத்தை இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். பணம் முதலீடு செய்தவர்களுக்கு உறுதியளித்ததை போல சில மாதங்கள், ஒரு லட்சத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் வரை திரும்ப வழங்கப்பட்டுள்ளது.ஆனால் சில மாதங்களுக்கு பிறகு ராஜராஜன், அவரது மனைவி முத்துலட்சுமி ஆகியோர் தங்கள் வேலையை காட்டத்தொடங்கினர். பணத்தை திரும்பத் தராமல் நிறுவனத்தை மூடிவிட்டு ராஜராஜன், அவரது மனைவி முத்துலட்சுமி உள்ளிட்டோர் தலைமறைவாகினர்.இதனையடுத்து முதலீடு செய்தவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து பெரும் அதிர்ச்சி அடைந்தனர். பலரும் பல லட்சம் ரூபாய் இதில் முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்தனர்.இந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள், நிறுவனத்தில் தங்களை சேர்த்துவிட்ட முகவர்கள் மீதும் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.இந்த புகார் பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. குறிப்பாக அசோக் நகரைச் சேர்ந்த சாந்தகுமார் என்பவர், 71 முதலீட்டாளர்களிடமிருந்து 3.26 கோடி ரூபாய் மதிப்பிற்கு மோசடி செய்துள்ளனர் என்று புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை மார்ச் 16ஆம் தேதி வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக நிறுவனத்தின் நிர்வாகிகள் மற்றும் அலுவலகத்தில் கடந்த மார்ச் 18ஆம் தேதி ஐந்து இடங்களில் சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்கள் பணம், தங்கம், வெள்ளி, நகை, கார், எலெக்ட்ரானிக் ஆவணங்கள் ஆகியவற்றை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.இந்நிலையில் தலைமறைவாக இருந்த ராஜராஜன்,முத்துலட்சுமி மற்றும் ரஞ்சித்குமார் ஆகியோரை நேற்றுமுன்தினம் இரவு காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் ‘சதுரங்கவேட்டை’ படப்பாணியில் எம்எல்எம் போல் பல்வேறு கூட்டங்களை நடத்தி ஆசை வார்த்தை காட்டி பலரையும் இந்த மோசடியில் சிக்க வைத்தது தெரியவந்தது.முக்கிய தரகரான அய்யனார் என்பவரை தேடி வருகின்றனர். பொதுமக்களிடம் வசூல் செய்த பணத்தில் வாங்கப்பட்ட சொத்துக்கள் குறித்து ஆவணங்களைப் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...