தொடர்ச்சியாக லஞ்சக் குற்றச்சாட்டு. மிரட்டியும் உருட்டியும் லஞ்சம், தனியார் வக்கீல்களை வைத்து வழக்கு.பேரம்.! இப்படி செயல்பட்ட இலஞ்ச இலாவண்யப் பெண் போக்குவரத்துக் காவல்துறை ஆய்வாளர் பணி நீக்கம் செய்யப்பட்டார்,
சென்னை பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு ஆய்வாளராக பணியாற்றியவர் இராணி.
இவருக்கு காவல்துறை சார்பில் ஒதுக்கப்பட்ட ஜீப் ஓட்டுவதற்கு, தனியாக அவரது சொந்த செலவில் ஓட்டுநரை நியமித்ததுடன் இவரது சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் ஏற்படும் விபத்துகள் குறித்து விசாரணை நடத்தச் செல்லும் போது அந்த தனியார் ஓட்டுநரை அழைத்துக்கொண்டு, அலுவலக ஜீப்பில் செல்வதாக எழுந்த குற்றசாட்டுக்களுடன், விபத்து நடந்த இடத்திற்கு, அவருக்கு வேண்டிய வழக்குரைஞர்கள் சிலரை வரவழைத்த பின் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துவிட்டு, அவர்கள் மூலம் இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடருமாறு, பாதிக்கப்பட்ட பொதுமக்களை வற்புறுத்தியதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன
அவரது செயல்பாட்டை ஏற்க மறுக்கும் பொதுமக்களை, காவல்துறை ஆய்வாளா் என்ற முறையில், அவர்களை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. அதன் பின்னர் இழப்பீடாகக் கிடைக்கும் பணத்தில், ஒரு பகுதியை அவர் எடுத்துக் கொள்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது.
அது தொடர்பாக பொதுமக்கள் சிலர் தாம்பரம் சரக காவல் ஆணையர் அமல்ராஜிடம் புகாரளித்தனர். அதுமட்டுமின்றி உளவுத்துறையினரும் ஏற்கெனவே ஆய்வாளர் இராணி மீது உள்ள குற்றச்சாட்டுகளை அறிக்கையாக தாம்பரம் சரக ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்ததையடுத்து தாம்பரம் காவல்துறை ஆணையர் அவர் மீதான புகார்கள் குறித்து விசாரிக்குமாறு பள்ளிக்கரணை காவல்துறை துணை ஆணையர் ஜோஸ் தங்கையாவிற்கு உத்தரவிட்டதன் பேரில் அவர் நடத்திய விசாரணையில் ஆய்வாளர் இராணி மீதான குற்றச்சாட்டுகள் உண்மை எனத் தெரியவந்ததை அடுத்து அதை அறிக்கையாக காவல் துறை ஆணையரிடம் சமர்பித்தார். அதை யடுத்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு ஆய்வாளர் இராணி கடந்த ஆகஸ்ட் மாதம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தொடர் விசாரணையில் போக்குவரத்து ஆய்வாளர் இராணி மீதான குற்றச்சாட்டு உறுதியானதை அடுத்து ஆய்வாளர் ராணியை தற்போது பணிநீக்கம் செய்து தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
கருத்துகள்