முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கர்நாடகா மாநில பாஜக வேட்பாளர் பட்டியல் பலருக்கு ஏமாற்றம் ஜெயநகர் தொகுதியில் 1,200 பேர் விலகல்

கர்நாடகா மாநில  பாஜக வேட்பாளர் பட்டியல் பலருக்கு ஏமாற்றம்  ஜெயநகர் தொகுதியில் 1,200 பேர்  விலகல்




 கர்நாடகா மாநிலத்தில் சட்டசபைத் தேர்தலுக்கான பாரதிய ஜனதா கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.

ஜெயநகர் தொகுதி என்.ஆர். ரமேஷுக்கு கிடைக்காததைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள் 1,200 பேர் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்

கர்நாடகாவில் 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே மாதம் 10 ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்று  துவங்குகிறது.



கர்நாடக தேர்தலுக்கான வேட்பாளர்களை ஜேடிஎஸ், காங்கிரஸ் கட்சிகள் முன்னரே அறிவித்த நிலையில். இரண்து கட்சிகளிலும் வேட்பாளர்கள் பட்டியல் காரணமாக சலசலப்பு எழவில்லை. ஜேடிஎஸ் கட்சியில் ஹாசன் தொகுதி தமக்கு வேண்டும் என்கிறார் தேவ கவுடா மருமகள் பவானி. ஆனால் குமாரசாமி அதை ஏற்கவில்லை. 

காங்கிரஸ் கட்சியில் 11 முஸ்லிம் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் 25 முதல் 30 முஸ்லிம் வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்திருக்க வேண்டும் எனும் அதிருப்தியும் எழுந்துள்ளது. அதேபோல தேர்தலில் தமக்கு போட்டியிட தொகுதி ஒதுக்கித் தராத காரணத்தால் மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான ககோடு திம்மப்பா மகள் ராஜநந்தினி எடியூரப்பாவைச் சந்தித்து பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.




பாரதிய ஜனதா கட்சியில்  முதற்கட்டமாக நேற்று 189 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வந்ததில் தங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படும் என்பதால் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா எதிர்பைத் தெரிவித்தனர். இதில் ஜெகதீஷ் ஷெட்டர் தாம் தேர்தலில் போட்டியிடுவேன்  எனப் பிடிவாதம் கொண்டிருக்கிறார்.  அதற்காக டெல்லிக்கும் சென்றுள்ளார். ஆனால் ஈஸ்வரப்பாவோ, ஒட்டுமொத்தத் தேர்தல் அரசியலுக்கே முழுக்குப் போடுவதாகவும் அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து நேற்று முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது முதலே தற்போதய சட்டமன்ற உறுப்பினர்கள் பலரது பெயர் விடுபடவே அவர்களது ஆதரவாளர்களும் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். தற்போதைய நிலையில் பத்துக்கும் மேற்பட்ட நடப்பு  சட்டமன்ற உறுப்பினர்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக கலகக் குரல் எழுப்பி ஆதரவாளர்களை போராடச் செய்துள்ளனர். மேலும் கடந்த காலத் துணை முதல்வர் லட்சுமண் சவதி பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பெங்களூரு ஜெயநகர் தொகுதியில் என்.ஆர்.ரமேஷுக்கு தொகுதி  ஒதுக்காததைக் கண்டித்து அங்கும் போராட்டம் நடத்தினர் என்.ஆர். ரமேஷ் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளனர்.



என்.ஆர். ரமேஷுக்கு கட்சி மேலிடம் வாய்ப்புத் தராததைக் கண்டித்து 1,200 பேர் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.அதேபோல ஈஸ்வரப்பா ஆதரவாளர்களான ஷிவமோகா மேயர் உள்ளிட்ட 19 பேர் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காததால் பாரதிய ஜனதா கட்சியின்  எம்.எல்.சி சங்கர் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த நிலையில் தேர்தல் அரசியல் களம் கர்நாடகாவில் சூடுபிடித்துள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு