முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கர்நாடகா மாநில பாஜக வேட்பாளர் பட்டியல் பலருக்கு ஏமாற்றம் ஜெயநகர் தொகுதியில் 1,200 பேர் விலகல்

கர்நாடகா மாநில  பாஜக வேட்பாளர் பட்டியல் பலருக்கு ஏமாற்றம்  ஜெயநகர் தொகுதியில் 1,200 பேர்  விலகல்




 கர்நாடகா மாநிலத்தில் சட்டசபைத் தேர்தலுக்கான பாரதிய ஜனதா கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.

ஜெயநகர் தொகுதி என்.ஆர். ரமேஷுக்கு கிடைக்காததைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள் 1,200 பேர் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்

கர்நாடகாவில் 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே மாதம் 10 ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்று  துவங்குகிறது.



கர்நாடக தேர்தலுக்கான வேட்பாளர்களை ஜேடிஎஸ், காங்கிரஸ் கட்சிகள் முன்னரே அறிவித்த நிலையில். இரண்து கட்சிகளிலும் வேட்பாளர்கள் பட்டியல் காரணமாக சலசலப்பு எழவில்லை. ஜேடிஎஸ் கட்சியில் ஹாசன் தொகுதி தமக்கு வேண்டும் என்கிறார் தேவ கவுடா மருமகள் பவானி. ஆனால் குமாரசாமி அதை ஏற்கவில்லை. 

காங்கிரஸ் கட்சியில் 11 முஸ்லிம் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் 25 முதல் 30 முஸ்லிம் வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்திருக்க வேண்டும் எனும் அதிருப்தியும் எழுந்துள்ளது. அதேபோல தேர்தலில் தமக்கு போட்டியிட தொகுதி ஒதுக்கித் தராத காரணத்தால் மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான ககோடு திம்மப்பா மகள் ராஜநந்தினி எடியூரப்பாவைச் சந்தித்து பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.




பாரதிய ஜனதா கட்சியில்  முதற்கட்டமாக நேற்று 189 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வந்ததில் தங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படும் என்பதால் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா எதிர்பைத் தெரிவித்தனர். இதில் ஜெகதீஷ் ஷெட்டர் தாம் தேர்தலில் போட்டியிடுவேன்  எனப் பிடிவாதம் கொண்டிருக்கிறார்.  அதற்காக டெல்லிக்கும் சென்றுள்ளார். ஆனால் ஈஸ்வரப்பாவோ, ஒட்டுமொத்தத் தேர்தல் அரசியலுக்கே முழுக்குப் போடுவதாகவும் அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து நேற்று முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது முதலே தற்போதய சட்டமன்ற உறுப்பினர்கள் பலரது பெயர் விடுபடவே அவர்களது ஆதரவாளர்களும் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். தற்போதைய நிலையில் பத்துக்கும் மேற்பட்ட நடப்பு  சட்டமன்ற உறுப்பினர்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக கலகக் குரல் எழுப்பி ஆதரவாளர்களை போராடச் செய்துள்ளனர். மேலும் கடந்த காலத் துணை முதல்வர் லட்சுமண் சவதி பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பெங்களூரு ஜெயநகர் தொகுதியில் என்.ஆர்.ரமேஷுக்கு தொகுதி  ஒதுக்காததைக் கண்டித்து அங்கும் போராட்டம் நடத்தினர் என்.ஆர். ரமேஷ் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளனர்.



என்.ஆர். ரமேஷுக்கு கட்சி மேலிடம் வாய்ப்புத் தராததைக் கண்டித்து 1,200 பேர் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.அதேபோல ஈஸ்வரப்பா ஆதரவாளர்களான ஷிவமோகா மேயர் உள்ளிட்ட 19 பேர் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காததால் பாரதிய ஜனதா கட்சியின்  எம்.எல்.சி சங்கர் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த நிலையில் தேர்தல் அரசியல் களம் கர்நாடகாவில் சூடுபிடித்துள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...