முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆருத்ரா மோசடி வழக்கில், தலைமறைவு 5 நபர்கள் தேடப்படும் குற்றவாளிகள்

 தமிழ்நாடு முழுவதும் 1.9 லட்சம் பேரிடம் ரூபாய் .2,438 கோடி மோசடி செய்த ஆருத்ரா நிதி நிறுவன இயக்குநர்கள் 5 நபர்களை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிப்பு:


பொதுமக்கள் தகவலளித்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது,

 மோசடி வழக்கில், தலைமறைவாக உள்ள 'ஆருத்ரா' இயக்குநர்கள் 5 பேரை தேடப்படும் குற்றவாளியாக பொருளதாதார குற்றப்பிரிவு காவல்துறை அறிவித்துள்ளனர்

அவர்கள் குறித்து தகவல் அளித்தால் தக்க சம்மானம் வழங்கப்படும் என்றும். தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கிய 'ஆருத்ரா' நிதி  நிறுவனத்திற்கு திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, அரியலூர், வேலூர், விருதுநகர், கடலூர் என மாநிலம் முழுவதும் 37 கிளைகள்  நிறுவனம் துவங்கி சில ஆண்டுகளுக்கு முன், 'எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்யும் பணத்திற்கு மாதம் 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாக விளம்பரம் செய்ததை நம்பி தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்கள், பொதுமக்கள் என 1 லட்சத்து 9 ஆயிரத்து 255 பேர் சுமார் ரூபாய்.2,438 கோடியை பண ஆசை காரணகாக முதலீடு செய்தனர். பணம் கட்டிய பொதுமக்களுக்கு முதல் 2 மாதங்கள் வட்டி கொடுத்தனர்.


ஆனால் அதன் பிறகு அவர்களுக்கு எந்த வித வட்டியும் கொடுக்கப்படவில்லை. அதனால் முதலீடு செய்த பொதுமக்கள் ஆருத்ரா நிதி நிறுவன அலுவலகங்களில் கட்டிய பணம் மற்றும் அதற்கான வட்டியை கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் உரிய பதில் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். இதனால் இந்த வழக்கு டிஜிபி உத்தரவுப்படி பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. அதன்படி  இந்த மோசடி குறித்து விசாரணை நடத்திய போது, ஆருத்ரா நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த நபர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி கொடுப்பதாக மோசடி செய்தது


உறுதியானதைத்தொடர்ந்து ஆருத்ரா நிதி நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள், ஏஜெண்டுகள் மீது மோசடி உள்ளிட்ட  ஏழுக்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்ட்ட பின்னர் மோசடி தொடர்பாக ஆருத்ரா நிதி நிறுவனத்திற்குச் சொந்தமான அலுவலகங்கள், அதன் இயக்குநர்களின் வீடுகள், ஏஜெண்டுகளின் வீடுகள் என 57 இடங்களில் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்தினர். அதில், ரூபாய்.5.69 கோடி ரொக்கம், ரூபாய்.1.13 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளிப் பொருட்களுடன் வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் சில பறிமுதல் செய்யப்பட்டது. அதன்படி ஆருத்ரா நிதி நிறுவன இயக்குநர்கள், ஏஜென்ட்களின் 120 க்கும் மேற்பட்ட வங்கி கணக்கிலிருந்த ரூபாய்.96 கோடி மட்டும் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. அவர்களின் 97 அசையா சொத்துக்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்.

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில், இதுவரை நிதி நிறுவனத்தின் இயக்குநர்களாக இருந்த 16 நபர்களில், பாஸ்கர், மோகன்பாபு, செந்தில்குமார், பட்டாபிராம், மைக்கேல்ராஜ், பாரதிய ஜனதா கட்சியிலிருந்து குறறவாளி எனத் தெரிந்த பின் நீக்கப்பட்ட  ஹரீஷ், பேச்சி முத்துராஜ்(எ)ரபீக், ஐயப்பன், ரூசோ, நாகராஜ், மாலதி உள்ளிட்ட 11 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான 'ஆருத்ரா' நிதி நிறுவன உரிமையாளர் சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ராஜசேகர், கிழக்கு முப்பேர் பகுதியைச் சேர்ந்த உஷா, பூந்தமல்லி திருமால் நகரைச் சேர்ந்த தீபக் கோவிந்த் பிரசாத், சென்னை பூம்புகார் நகர், முதல் மெயின் ரோட்டைச் சேர்ந்த நாராயணி, செங்கல்பட்டு மாவட்டம் செட்டிபாளையம், ஸ்ரீ பாவானி நகரைச் சேர்ந்த ரூமேஷ்குமார் ஆகிய 5 பேர் இன்னும் காவல்துறையினரிடம் சிக்காமல் வெளிநாடுகளிலோ அல்லது  வெளிமாநிலங்களிலோ தலைமறைவாக உள்ளனர்.


இதுவரை இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட  ஹரீஷ் உள்ளிட்ட 11 பேரிடம் நடத்திய விசாரணையில், மோசடி செய்த பணத்தில் பெரும்பாலான பணம் அரசியல் கட்சியின் பிரமுகர்களுக்கு கொடுத்தது தெரியவந்தது. மேலும், பிரச்னைகளை வெளியே வராமல் தடுக்க கட்டப்பஞ்சாயத்து, தலைமறைவாக இருக்க அடைக்கலம் என பல கோடி ரூபாய் செலவு செய்து இருப்பதும் தெரியவந்துள்ளது. எனவே இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான ஆருத்ரா உரிமையாளர் ராஜசேகர் தனது மனைவியுடன் துபாயில் தலைமறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. அதனால் அவரை சிபிஐ மூலம் இண்டர் போல்  உதவியுடன் கைது செய்து சென்னைக்குக் கொண்டு வர பொருதாளதாரக் குற்றப்பிரிவு காவல்ருறையினர்  நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதேநேரம், தலைமறைவான மோசடி நிறுவன  உரிமையாளர் ராஜசேகர், அதன் இயக்குநர்களான உஷா, தீபக் கோவிந்த் பிரசாத், நாராயணி, ரூமேஷ்குமார் ஆகியோர் குறித்து தகவல் ஏதேனும் தெரிந்தால்  பொதுமக்கள் பொருளாதார குற்றப்பிரிவுக் காவல்துறைக்கு உடனடியாகத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். உறுதியான தகவல்களாக இருப்பின், 'தக்க சன்மானம்' வழங்கப்படும். 5 நபர்கள் குறித்து தகவல் கொடுப்பவரின் விவரங்கள் இரகசியமாக பாதுகாக்கப்படும். நேரிலோ அல்லது தொலைபேசி மூலமோ தகவல் தெரிவிக்கலாம். நேரில் தகவல் தெரிவிக்க விரும்புபவர்கள், காவல் கண்காணிப்பாளர், தலைமையிடம், பொருளாதாரக் குற்றப்பிரிவு அலுவலகம், காவலர் பயிற்சிக் கல்லூரி, அசோக் நகர் சென்னை என்ற முகவரியில் தெரிவிக்கலாம். தொலைபேசியில் தகவல் கொடுப்பவர்கள் 044-22504311 மற்றும் 044- 22504332 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம் என்றும் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறை சார்பில்  தெரிவிக்கப்படடுள்ளது,

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்