முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆருத்ரா மோசடி வழக்கில், தலைமறைவு 5 நபர்கள் தேடப்படும் குற்றவாளிகள்

 தமிழ்நாடு முழுவதும் 1.9 லட்சம் பேரிடம் ரூபாய் .2,438 கோடி மோசடி செய்த ஆருத்ரா நிதி நிறுவன இயக்குநர்கள் 5 நபர்களை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிப்பு:


பொதுமக்கள் தகவலளித்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது,

 மோசடி வழக்கில், தலைமறைவாக உள்ள 'ஆருத்ரா' இயக்குநர்கள் 5 பேரை தேடப்படும் குற்றவாளியாக பொருளதாதார குற்றப்பிரிவு காவல்துறை அறிவித்துள்ளனர்

அவர்கள் குறித்து தகவல் அளித்தால் தக்க சம்மானம் வழங்கப்படும் என்றும். தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கிய 'ஆருத்ரா' நிதி  நிறுவனத்திற்கு திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, அரியலூர், வேலூர், விருதுநகர், கடலூர் என மாநிலம் முழுவதும் 37 கிளைகள்  நிறுவனம் துவங்கி சில ஆண்டுகளுக்கு முன், 'எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்யும் பணத்திற்கு மாதம் 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாக விளம்பரம் செய்ததை நம்பி தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்கள், பொதுமக்கள் என 1 லட்சத்து 9 ஆயிரத்து 255 பேர் சுமார் ரூபாய்.2,438 கோடியை பண ஆசை காரணகாக முதலீடு செய்தனர். பணம் கட்டிய பொதுமக்களுக்கு முதல் 2 மாதங்கள் வட்டி கொடுத்தனர்.


ஆனால் அதன் பிறகு அவர்களுக்கு எந்த வித வட்டியும் கொடுக்கப்படவில்லை. அதனால் முதலீடு செய்த பொதுமக்கள் ஆருத்ரா நிதி நிறுவன அலுவலகங்களில் கட்டிய பணம் மற்றும் அதற்கான வட்டியை கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் உரிய பதில் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். இதனால் இந்த வழக்கு டிஜிபி உத்தரவுப்படி பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. அதன்படி  இந்த மோசடி குறித்து விசாரணை நடத்திய போது, ஆருத்ரா நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த நபர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி கொடுப்பதாக மோசடி செய்தது


உறுதியானதைத்தொடர்ந்து ஆருத்ரா நிதி நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள், ஏஜெண்டுகள் மீது மோசடி உள்ளிட்ட  ஏழுக்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்ட்ட பின்னர் மோசடி தொடர்பாக ஆருத்ரா நிதி நிறுவனத்திற்குச் சொந்தமான அலுவலகங்கள், அதன் இயக்குநர்களின் வீடுகள், ஏஜெண்டுகளின் வீடுகள் என 57 இடங்களில் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்தினர். அதில், ரூபாய்.5.69 கோடி ரொக்கம், ரூபாய்.1.13 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளிப் பொருட்களுடன் வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் சில பறிமுதல் செய்யப்பட்டது. அதன்படி ஆருத்ரா நிதி நிறுவன இயக்குநர்கள், ஏஜென்ட்களின் 120 க்கும் மேற்பட்ட வங்கி கணக்கிலிருந்த ரூபாய்.96 கோடி மட்டும் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. அவர்களின் 97 அசையா சொத்துக்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்.

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில், இதுவரை நிதி நிறுவனத்தின் இயக்குநர்களாக இருந்த 16 நபர்களில், பாஸ்கர், மோகன்பாபு, செந்தில்குமார், பட்டாபிராம், மைக்கேல்ராஜ், பாரதிய ஜனதா கட்சியிலிருந்து குறறவாளி எனத் தெரிந்த பின் நீக்கப்பட்ட  ஹரீஷ், பேச்சி முத்துராஜ்(எ)ரபீக், ஐயப்பன், ரூசோ, நாகராஜ், மாலதி உள்ளிட்ட 11 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான 'ஆருத்ரா' நிதி நிறுவன உரிமையாளர் சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ராஜசேகர், கிழக்கு முப்பேர் பகுதியைச் சேர்ந்த உஷா, பூந்தமல்லி திருமால் நகரைச் சேர்ந்த தீபக் கோவிந்த் பிரசாத், சென்னை பூம்புகார் நகர், முதல் மெயின் ரோட்டைச் சேர்ந்த நாராயணி, செங்கல்பட்டு மாவட்டம் செட்டிபாளையம், ஸ்ரீ பாவானி நகரைச் சேர்ந்த ரூமேஷ்குமார் ஆகிய 5 பேர் இன்னும் காவல்துறையினரிடம் சிக்காமல் வெளிநாடுகளிலோ அல்லது  வெளிமாநிலங்களிலோ தலைமறைவாக உள்ளனர்.


இதுவரை இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட  ஹரீஷ் உள்ளிட்ட 11 பேரிடம் நடத்திய விசாரணையில், மோசடி செய்த பணத்தில் பெரும்பாலான பணம் அரசியல் கட்சியின் பிரமுகர்களுக்கு கொடுத்தது தெரியவந்தது. மேலும், பிரச்னைகளை வெளியே வராமல் தடுக்க கட்டப்பஞ்சாயத்து, தலைமறைவாக இருக்க அடைக்கலம் என பல கோடி ரூபாய் செலவு செய்து இருப்பதும் தெரியவந்துள்ளது. எனவே இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான ஆருத்ரா உரிமையாளர் ராஜசேகர் தனது மனைவியுடன் துபாயில் தலைமறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. அதனால் அவரை சிபிஐ மூலம் இண்டர் போல்  உதவியுடன் கைது செய்து சென்னைக்குக் கொண்டு வர பொருதாளதாரக் குற்றப்பிரிவு காவல்ருறையினர்  நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதேநேரம், தலைமறைவான மோசடி நிறுவன  உரிமையாளர் ராஜசேகர், அதன் இயக்குநர்களான உஷா, தீபக் கோவிந்த் பிரசாத், நாராயணி, ரூமேஷ்குமார் ஆகியோர் குறித்து தகவல் ஏதேனும் தெரிந்தால்  பொதுமக்கள் பொருளாதார குற்றப்பிரிவுக் காவல்துறைக்கு உடனடியாகத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். உறுதியான தகவல்களாக இருப்பின், 'தக்க சன்மானம்' வழங்கப்படும். 5 நபர்கள் குறித்து தகவல் கொடுப்பவரின் விவரங்கள் இரகசியமாக பாதுகாக்கப்படும். நேரிலோ அல்லது தொலைபேசி மூலமோ தகவல் தெரிவிக்கலாம். நேரில் தகவல் தெரிவிக்க விரும்புபவர்கள், காவல் கண்காணிப்பாளர், தலைமையிடம், பொருளாதாரக் குற்றப்பிரிவு அலுவலகம், காவலர் பயிற்சிக் கல்லூரி, அசோக் நகர் சென்னை என்ற முகவரியில் தெரிவிக்கலாம். தொலைபேசியில் தகவல் கொடுப்பவர்கள் 044-22504311 மற்றும் 044- 22504332 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம் என்றும் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறை சார்பில்  தெரிவிக்கப்படடுள்ளது,

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...