முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கௌஹாத்தி உயர் நீதிமன்றத்தின் 75 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் குடியரசுத் தலைவர்

கௌஹாத்தி உயர் நீதிமன்றத்தின் 75 ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தில் குடியரசுத் தலைவர் கலந்து கொண்டார்

பழங்குடியின மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, வடகிழக்கு பிராந்தியத்தில் அமைதியான வாழ்வுக்கான நெறிமுறைகளை மேம்படுத்த கௌஹாத்தி உயர்நீதிமன்றம் உதவியிருக்கிறது: குடியரசுத் தலைவர் முர்மு

கௌஹாத்தியில் இன்று (ஏப்ரல் 7, 2023) கௌஹாத்தி உயர் நீதிமன்றத்தின் 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி  திரௌபதி முர்மு கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் முதியோர்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட 'போரோக்ஸா' என்ற மொபைல் செயலியை அவர் அறிமுகப்படுத்தினார்.


கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், இந்தியாவின் நீதித்துறையில் கௌஹாத்தி உயர் நீதிமன்றம் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது என்றார். 1948 இல் தொடங்கப்பட்ட பிறகு, ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக ஏழு மாநிலங்களின் அதிகார வரம்பைக் கொண்டிருந்தது. இன்றும் நான்கு மாநிலங்களின் அதிகார வரம்பைக் கொண்டுள்ளது. பல சட்டப்பூர்வ தெளிவினை ஏற்படுத்துவதன் மூலம் தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தைக் கொண்டுள்ளது. பல முக்கிய முடிவுகளை வழங்கியதற்காக கவனம் பெற்றுள்ளது. கௌஹாத்தி உயர் நீதிமன்றம் வரும் ஆண்டுகளிலும் இதே முறையில் மக்களுக்கு சேவை செய்யும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

வரலாற்று ரீதியாக பல்வேறு சமூகங்கள் ஒன்றிணைந்து வாழ்ந்தமைக்கு வடகிழக்கு பிராந்தியமே சிறந்த உதாரணம் என குடியரசுத் தலைவர்  தெரிவித்தார். இதன் விளைவாக, அது வளமான இன மற்றும் மொழியியல் பன்முகத்தன்மையைக் கொண்டுள்ளது. அத்தகைய பிராந்தியத்தில் நிறுவனங்கள் அதிக உணர்திறன் மற்றும் பொறுப்புணர்வைக் கொண்டிருக்க வேண்டும். வெவ்வேறு பகுதிகளுக்குப் பொருந்தும் சட்டங்கள் மாறுபடலாம் ஆனால் முழுப் பகுதியும் பொதுவான உயர் நீதிமன்றத்தால் நிர்வகிக்கப்படுகிறது. கௌஹாத்தி உயர்நீதிமன்றம் அதன் அதிகார வரம்பிற்குட்பட்ட சில மாநிலங்களில் நடைமுறையில் உள்ள வழக்காறான சட்டங்களைத் தொடர்ந்து நிலைநிறுத்துவதைப் பார்க்கும்போது மகிழ்ச்சி அளிக்கிறது என்று அவர் கூறினார். பழங்குடியின மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, இந்தப் பிராந்தியத்தில் அமைதியான சகவாழ்வுக்கான நெறிமுறைகளை மேம்படுத்த இந்த நிறுவனம் உதவியுள்ளது.


சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்துப் பேசிய குடியரசுத் தலைவர், சுற்றுச்சூழல் சீர்கேடு உலகெங்கிலும் உள்ள பல சமூகங்களுக்கு பெரும் அநீதிக்கு வழிவகுத்தது. மற்ற உயிரினங்கள் மற்றும் முழு சூழலியல் குறித்தும் நாம் பொறுப்புணர்வு கொண்டவர்களாக இருக்க வேண்டும். ஏனென்றால் ஒட்டுமொத்த மனிதகுலம் முன்னெப்போதும் இல்லாத சேதத்தை செய்துள்ளது. அதாவது இயற்கை அன்னையின் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுக்கு அநீதி இழைத்துள்ளது. சட்டப்பூர்வ சகோதரத்துவமும் அதற்கு அர்த்தமுள்ள பங்களிப்பைச் செய்யும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

நீதி என்பது வரையறையின்படி அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும், எனவே அது அனைவருக்கும் அணுகக்கூடியதாக இருக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். இருப்பினும், நீதிக்கான அணுகல் பல காரணிகளால் தடுக்கப்படுகிறது. அவற்றில் ஒன்று நீதிக்கான செலவு ஆகும். இலவச சட்ட ஆலோசனையின் வரம்பை நாம் தொடர்ந்து விரிவுபடுத்த வேண்டும் என்று அவர் கூறினார். நீதியின் மொழி மற்றொரு தடையாக உள்ளது. ஆனால் அந்த திசையில் பாராட்டத்தக்க முன்னேற்றம் உள்ளது. நீதித்துறை மேலும் மேலும் பிராந்திய மொழிகளில் தீர்ப்புகளை வழங்கத் தொடங்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். நீதி நிர்வாகத்தில் தொழில்நுட்பத்தின் அதிகரித்து வரும் பங்கு நீண்ட காலமாக அமைப்பை பாதித்த பல பிரச்சனைகளை தீர்த்து வருகிறது என்றும் அவர் கூறினார். வழக்கறிஞர்களும், சட்ட மாணவர்களும் ஏழைகளுக்கு உதவிக்கரம் நீட்டக்கூடிய தொழில்நுட்ப தீர்வுகளை சட்ட களத்தில் கண்டறிய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,