முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

டாக்டர் அப்பாசாகேப் தர்மாதிகாரிக்கு 'மகாராஷ்டிர பூஷன்' விருது

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா, 2022 ஆம் ஆண்டிற்கான "மகாராஷ்டிர பூஷன்" விருதை



டாக்டர் அப்பாசாகேப் தர்மாதிகாரிக்கு மகாராஷ்டிர மாநிலம் ராய்கரில் இன்று வழங்கினார்

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர்  திரு அமித் ஷா, 2022 ஆம் ஆண்டிற்கான "மகாராஷ்டிர பூஷன்" விருதை டாக்டர் அப்பாசாகேப் தர்மாதிகாரிக்கு மகாராஷ்டிர மாநிலம் ராய்கரில் இன்று வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவிஸ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.




எந்தப் புகழுக்கும் ஆசைப்படாமல் பொது வாழ்வில் சமூக சேவை செய்த சமூக சேவகர் அப்பாசாகேப் மீது மக்கள் ஆழ்ந்த மரியாதையும் பக்தியும் கொண்டுள்ளனர் என்று திரு  அமித் ஷா தமது உரையில் குறிப்பிட்டார். அப்பாசாகேப் செய்த தியாகம், அர்ப்பணிப்பு மற்றும் சேவை மூலமாகவே இத்தகைய மரியாதை மற்றும் பக்தியை அடைய முடிந்துள்ளது என்றும் அவர் கூறினார். அப்பாசாகேப் மீதான மக்களின் அன்பும், நம்பிக்கையும், மரியாதையும் அவரது பணி மற்றும் மாண்புக்கும்    நானாசாகேபின் போதனைகளுக்குமான பரிசாகும். மக்களைப் பின்பற்றுவதற்கு பதிலாக, அப்பாசாகேப் போன்று, மக்கள் பின்பற்றும் வகையில் ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும் என்று திரு ஷா கூறினார்.


சமூக சேவை எனும் கலாசாரம் ஒரே குடும்பத்தில் மூன்று தலைமுறைகளாக நீடிப்பது வரலாற்றில் அரிதாகக் காணப்படுவது என்று மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் தெரிவித்தார். முதலில் நானாசாகேப், பிறகு அப்பாசாகேப், இப்போது சச்சின் பாவ் மற்றும் அவரது சகோதரர்கள் சமூக சேவையின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்கின்றனர். அவருக்கு மகாராஷ்டிர பூஷன் விருது வழங்கியதன் மூலம் மகாராஷ்டிரா அரசு அப்பாசாகேபை கௌரவித்தது மட்டுமின்றி, அவரைப் போல் வாழ கோடிக்கணக்கான மக்களை ஊக்கப்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார்.

மகாராஷ்டிர பூஷன் விருது 1995ல் நிறுவப்பட்டது என்றும், அதன் பின்னர் மகாராஷ்டிரா மற்றும் நாட்டின் சமூக வாழ்க்கைக்குப் பங்களித்த பலருக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் திரு அமித் ஷா கூறினார். இப்போது நானாசாகேபின் குடும்பத்தைச் சேர்ந்த அப்பாசாகேபுக்கு விருது கிடைத்துள்ளது என்று அவர் கூறினார். ஒரே குடும்பத்திற்கு இரண்டாவது முறையாக மகாராஷ்டிர பூஷன்  விருது வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும். "நாம் முன்னேறுவோம்" என்ற முழக்கத்துடன் அப்பாசாகேப் தனது செயல்களின் மூலம் சமூகத்தை வழிநடத்தினார் என்று திரு ஷா கூறினார். குழந்தைகள் மேம்பாடு, இலவசமாகக் கல்விப் பொருட்கள் விநியோகம், மரம் வளர்ப்பு, தூய்மை செய்தல், ரத்த தானம், திருவிழாக் காலங்களில் குப்பைகளைச் சேகரிக்கும் தனித்துவ நடைமுறை, கிணறுகளை சுத்தம் செய்தல், பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், பழங்குடியினர் நலன், போதையில்லா சமுதாயம், மூடநம்பிக்கை ஒழிப்பு, எழுத்தறிவின்மை ஒழிப்பு ஆகியவற்றுக்காகப் பாடுபட்டு இந்தப் பணிகளில்  பல உதாரணங்களை ஏற்படுத்தினார்.

அப்பாசாகேபின் நீண்ட ஆயுளுக்காக பிரார்த்தனை செய்த திரு அமித் ஷா, அவரது லட்சக்கணக்கான தொண்டர்கள் அப்பாசாகேப்  வழிகாட்டுதல்படி பல ஆண்டுகள் சமூகத்தில் தொடர்ந்து பணியாற்ற வாழ்த்து தெரிவித்தார். அப்பாசாகேப் போன்ற தகுதியான ஆளுமைக்கு மகாராஷ்டிர பூஷண் விருது வழங்கியதற்காக மகாராஷ்டிர முதலமைச்சர் திரு ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர் திரு  தேவேந்திர ஃபட்னவிஸ் ஆகியோருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...