முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விடுதலை ஏ- சான்றிதழ் என்றாலும் குடும்பமாக குழந்தைகளுடன் காணும் மக்ககள் ஆதரவில் வெற்றி கண்ட வெற்றிமாறன்

விடுதலை கே. விஜயன் இயக்கிய திரைப்படம்


ஜூலை மாதம்  1986 ஆம் ஆண்டில் வெளியானதில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், விஷ்ணுவர்தன், மாதவி நடித்தது  இது ஹிந்தித் திரைப்படம் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த குர்பானியின் மீள்  தயாரிப்பு. எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய 'துணைவன்' நாவலைத் அடிப்படையாக வைத்து தற்போது உருவாக்கப்பட்டுள்ள விடுதலை திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை ஆர் ராமர்  செய்துள்ளார்.

விடுதலை திரைப்படத்தில் பவானி ஸ்ரீ, சேத்தன், ராஜிவ் மேனன், கௌதம் மேனன் என பலர் நடித்துள்ளனர். வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ள 'விடுதலை' திரைப்படம், தற்போது  வெளியாகி நல்ல வரவேற்பை பெறுகிறது. இந்தத் திரைப்படத்திற்கு இந்தியத் திரைப்படத்  தணிக்கைக்குழு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ள நிலையில்


சென்னை விருகம்பாக்கத்திலுள்ள  திரையரங்கில், திரைப்படத்தை காண வந்தவர்களிடம் குழந்தைகளை அழைத்துச் செல்ல திரையரங்க ஊழியர்கள் மறுப்பு தெரிவித்த நிலையில், அவர்களுடன் பெற்றோர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்  மேலும்  திரைப்படம் திரையிடப்பட்டு மக்கள் படம் பார்த்துக் கொண்டிருந்தபோது திரைப்படம் பாதியில் நிறுத்தப்பட்டது. அப்போது அங்கு வந்த காவல்துறையினர் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களை வெளியேற்ற முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெற்றோர், குழந்தைகளுக்கு என்ன படம் காண்பிக்க வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும் என்று கூறியதோடு, குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்ல மறுப்பு தெரிவித்தனர்.


அதையடுத்து வேறு வழியில்லாமல் காவலர்கள்  அங்கிருந்து வெளியேறினர் 'விடுதலை' திரைப்படம் மீண்டும் திரையிடப்பட்டது. இதை மலையூர் மம்பட்டியான் போலவே மக்கள் பார்க்கும் நிலை அருமபுரி என்கிற மலை சார்ந்த கிராமம் கனிமவளச் சுரங்கம் தோண்ட ஒரு பன்னாட்டு நிறுவனத்துக்கு அனுமதி வழங்கும் அரசு. ஆனால், மலையே வாழ்விடமாகவும், வாழ்வாதாரமாகவும் கொண்ட எளிய மக்களின் பின்னால் நின்று


ஆயுதம் தாங்கி  எதிர்க்கிறது ‘மக்கள் படை’ எனும் போராளிக் குழு. அதைத் தலைமை தாங்கி வழி நடத்தும் பெருமாளாக வரும் நடிகர் விஜய்சேதுபதியைக் கைது செய்து, அவரது குழுவை கூண்டோடு அழிக்க, இரண்டு ஆயுதப் படைப் பிரிவுக் காவலர்கள்  அருமபுரியில் முகாமிட்டதில் ஜீப் ஓட்டுநராகப் பணியில் இணையும் காவலர் குமரேசனாக நடிகர் சூரி அருமபுரி மக்களுக்காக இறங்குமவர், அந்த ஊர் பெண் தமிழரசியின் மனதிலும் இடம் பிடிக்கிறார்.


இச்சமயத்தில் காவல் படைக்கும் - மக்கள் படைக்கும் இடையிலான மோதல் முற்றி, அப்பாவி மக்கள் மீது திணிக்கப்படும் சித்திரவதை முகாமாக மாறுவதால் பாதிக்கப்படும் குமரேசன், மக்கள் படை பெருமாளை கைது செய்வதன் மூலமே கிராமத்து மக்களைச் சித்திரவதைலிருந்து காப்பாற்ற முடியும் என்று நினைக்கிறார். அதற்காக ஓடும் ஓட்டத்தில் பெருமாளைச் சந்தித்தாரா, இல்லையா என்பதே முதல் பாகக் கதை.

 குறும்படமாக எடுக்கக் கூடிய, ஜெயமோகன்  ‘துணைவன்’ நாவலின் கருவை மட்டும் கொண்டு, இரண்டு பாக சினிமாக்களுக்கான திரைக்கதையை எழுதி ஆச்சரியப்படுத்துகிறார் இயக்குனர் வெற்றிமாறன்.



கனிமவளச் சுரண்டலின் வழியாக ஆதாயமடைய நினைக்கும் அதிகார வர்க்கம், பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளைக்கு எதிராக நிற்கக்கூடிய மண்ணின் மக்களையும், அவர்களின் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய  போராளிக் குழுக்களையும் கையாளும் அரசின் வன்முறையும், இரத்தமும் சதையுமான பெரும் கதைக் களம் என்பதை, சமரசம் ஏதுமற்ற திரைக்கதையின் வழியாகக் காட்டி, இரண்டாம் பாகத்துக்குப் பெரும் எதிர்பார்ப்பைக் கூட்டும் முன்னோட்டக் காட்சிகளுடன் படத்தை நன்றாக முடித்திருக்கிறார்.


அரசு, ஆளுகிறகட்சி, எதிர்கட்சி, மக்கள், போராளிகள், காவலர்கள்  என பல முகங்களை அப்படியே விரித்து வைக்கிறது படம், எந்தச் சார்பு நிலையையும் எடுக்காமல், ஒரு பக்கமாகச்  சாயாமல் பயணிக்கும் படத்தில் நிகழும் அனைத்து சம்பவங்களும் கதாபாத்திரங்களும் கற்பனையே என பொறுப்புத் துறப்பு அறிவிப்பாகச்  செய்தாலும், எந்த நிலைபாட்டையும் எடுக்காத திரைக்கதையின் இந்த அணுகுமுறை, பார்வையாளர்களை தமிழ்நாட்டின் சமூக முன் வரலாற்றைத் தேட உந்தித் தள்ளுவது என்னவோ உண்மை. குமரேசன் - பெருமாள்  எனும் இரு முதன்மைக் கதாபாத்திரங்களும் எத்தகைய சூழலிலும், கதையின் எந்தக் கட்டத்தில் சந்திக்கின்றன என்பது தான் முதல் பாகத்தின் முத்தாய்ப்பாகிறது.


பெயர் சூட்டப்படாத மலைபூவைப் போல, குமரேசன் - தமிழரசி இடையே மலரும் காதலை இவ்வளவு இயல்பாகச் சித்தரிக்க முடியுமா என்று மனதை சிலுசிலுக்க வைத்திருப்பது அழகான தருணம். மற்றும்  காவல் துறையின் மனித உரிமை மீறல்கள்,  அதிகார அடுக்கில் துறைக்குள் நிகழும் ஒடுக்குமுறை என பலவற்றைச் சித்தரித்த விதத்தில்  ‘விசாரணை’ படத்தை முந்திச் செல்கிறார் இயக்குனர் வெற்றிமாறன்.


சாமானிய மக்களின் வாழ்விலிருந்து தூய நகைச்சுவையை எடுத்துப் பயன்படுத்தி தன்னை நிலை நிறுத்திக்கொண்ட. நடிகர் சூரி, இதில் குமரேசனாக மட்டுமே வந்து கவர்கிறார். துரத்தல் காட்சி ஒன்றிலும் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பைக் கொடுத்திருக்கிறார். உயரதிகாரி சுனிலுக்கு காபி கொடுக்கும் அந்த ஒரு காட்சியில் சார்லி சாப்ளினை நினைவூட்டிவிடுகிறார். தமிழரசியாக பவானி ஸ்ரீ மனதில் பதிகிறார். சேத்தனும், கௌதம் மேனனும் பார்வையாளர்களின் வெறுப்பைச் சம்பாதித்துக்கொள்வதில் போட்டி போட்டிருக்க



இரயில் பால குண்டு வெடிப்பு விபத்துக் காட்சி ஒன்று, இதற்கு முன் இவ்வளவு அழுத்தமாக படம்பிடிக்கப்பட்டதில்லை! அதில் தொடங்கி ஆயுதக் காவல் படை முகாம், மேற்குத் தொடர்ச்சி மலைக்காடு என ஊடுருவிச் சென்று நம்மை கதையின் களத்துக்குள் பிரவேசிக்க வைத்துவிடுகிறது வேல்ராஜின் ஒளிப்பதிவு  எண்பதுகளின் தொடக்கத்தில் நிகழும் கதைக்கு இளையராஜாவின் இசையும் இரண்டு பாடல்களும் பொருத்தமாகின்றன. காவலர்கள்- போராளிக் குழுவுக்கு இடையிலான மோதல் கதையில் முதன்மை பெற்றுள்ளதால் அதீத வன்முறை காட்சிகள் தவிர்க்க முடியாதவையாக இடம் பிடித்துள்ளன. அதனால் A சான்றிதழ் பெற்ற படமாதலால், பலகீனமானவர்கள், சிறுவர்கள் ஆகியோர் இப்படத்தைத் தவிர்ப்பது நலம். இருந்தும் மக்கள் தங்கள் பிள்ளைகளுடன் இப்படத்தைக் காண்பதும், காண வைப்பதும் தான் இந்த திரைப்படம் வெற்றி கண்டுள்ளது விடுதலை இரண்டாம் பாகம்  வரும்போது, மக்களுக்குத் தெரியவரும்… ‘இந்தக் காடு வேல்ராஜின் முழுக் கட்டுப்பாட்டில் தான் இருந்ததென்று. அந்தக் காட்டின் அரசன் வேல்ராஜ்!எந்தப் படத்தையும் எப்படி  வேண்டுமானாலும் ஒரு இயக்குநர் எடுக்கலாம், எந்தக் கருத்தை வேண்டுமானாலும் மக்களுக்குச் சொல்லலாம். ஆனால், பணம் போட்டு படம் எடுக்கிறவர்களுக்கு, அந்தப் பணம் திருப்பிக் கிடைக்கணும்’ என்ற மிகப்பெரிய பொறுப்போடு தான் விடுதலையில் வெற்றிமாறன் செயல்பட்டுள்ளார்


விடுதலை படத்தின் பெருவெடிப்பு, வெற்றிமாறனின் சிந்தனையிலிருந்து தொடங்கியது தான் அந்தத் தாக்கம் தற்போது படம் பார்க்கும் ரசிகர்கள் மத்தியில் வந்துவிட்டதாகவே  தோன்றுகிறது, வெ கபடிக்குழு புரோட்டா சூரியை கதாநாயகன் சூரியாக மாற்றியது இனி அவர் காட்டில் தான் மழை தற்போது கோலிவுட்டில் அணைத்துத் தயாரிப்பாளர்களின் பார்வையும் அவர் பக்கம்  திரும்பியதைக் காணலாம்.

மக்களின் உணர்வுகள் மற்றும் பிரச்சினைகளை, அவர்களுக்கான அரசியலைப் பேசுவதால் ஒரு கதைக் களம், கொஞ்சம் தவறினாலும் பிரச்சாரமாக மாறிவிடும் ஆபத்தை சந்திந்து விடுமே அப்படி ஆகாமலிருக்க சினிமாத்தனமாக சில தருணங்களை உருவாக்கி, அதன் வழியே சினிமா அனுபவத்தைச் சாத்தியமாக்குவதுதான் ஒரு சிறந்த இயக்குநரின் திரை ஆளுமையாகும். அதில் இயக்குனர் வெற்றிமாறன் பெயரைப்போல மீண்டும்  நிலை நாட்டுகிறார்.

காட்டு வழி போற பொண்ணே கவலைப்படாதே. 

காட்டுப் புலி வழி மறிக்கும் கலங்கி நிற்காதே. மீண்டும் 

விடுதலை. வடிவில் திரைப்படம் மக்களின் ஆதரவைப் பெறுகிறது

வழி நெடுக காட்டு மல்லி

காடும் காதலும் போராட்டமும் விளைவுகளும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த