சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் வீரமங்கை இராணி வேலு நாச்சியார் மற்றும் தெய்வப் புலவர் திருவள்ளுவருக்கு சிலை
சுதந்திரப் போராட்ட வீரமங்கை கௌரி வல்லப இராணி வேலு நாச்சியார் மற்றும் தெய்வப் புலவர் திருவள்ளுவர் ஆகியோரின் பங்களிப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த சென்னை பல்கலைக்கழகம் தனது இரு வளாகங்களிலும் சிலைகளை நிறுவுவதற்குத் திட்டமிட்டுள்ளது.
இந்த முடிவுக்கு சென்னை பல்கலைக்கழக செனட் ஒப்புதல் அளித்துள்ளது விரைவில் சிண்டிகேட் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு. அனுமதி கிடைத்த பின்னர், இந்தச் சிலைகளை நிறுவ பல்கலைக்கழகம் நிதி ஒதுக்கீடு செய்யும்.
சேப்பாக்கத்திலுள்ள பிரதான வளாகத்தில் வேலு நாச்சியார் சிலையும், மெரினா வளாகத்தில் திருவள்ளுவர் சிலையும் நிறுவுவதற்கு சென்னைப் பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு மாணவிகளுக்கு வீரமங்கை வேலு நாச்சியார் விருதை பல்கலைக்கழகம் அறிவித்தது. இந்தியாவில் காலனித்துவத்தை எதிர்த்துப் போராடிய முதல் சமஸ்தான இராணி வீரமங்கை வேலு நாச்சியார்.
1780 ஆம் ஆண்டில் ல் சிவகங்கை சமஸ்தானத்தின் அரசியாக இருந்த வீரமங்கை வேலு நாச்சியாரைப் பற்றிய வரலாறு ஜான்ஸி ராணி லக்குமிபாயைப் போல பலருக்குத் தெரியவில்லை என்பதே எனபஹ பல்கலைக்கழக அலுவலர்கள் தெரிவித்தனர். அவர்கள் சங்கத்தின் சார்பில் தெரிவித்ததாவது “இந்த ஆண்டு, நாங்கள் சுதந்திரத்தின் 75 வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறோம், இராணி வீரமங்கை வேலு நாச்சியாரின் துணிச்சலைப் பற்றி நம் இளைஞர்களுக்குக் கற்பிக்க இதைவிடச் சிறந்த நேரமில்லை. இராணி வீரமங்கை வேலு நாச்சியாரின் சிலை நிறுவுவதற்கான யோசனையை பேராசிரியர் ஒருவர் முன்மொழிந்தார், அதற்கு செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது, ”என்று சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான எஸ்.கௌரி தெரிவித்தார்.
கருத்துகள்