கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் தற்போது அதிமுகவின் இரண்டு குழுக்களாக உள்ள நிலையில் பெங்களூரு புலிகேசி நகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்து
வேட்பாளரையும் அக்கட்சியின் பொறுப்பில் உள்ள எடப்பாடி கே.பழனிச்சாமி சார்பில் டி.அன்பரசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் அதன் மற்றொரு பிரிவின் பொருப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தரப்பில் நெடுஞ்செழியன் வேட்பாளராக நிறுத்தப்படுவதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து இன்று மேலும் இரண்டு தொகுதிகளுக்கான வேட்பாளர்களாக கோலார் தங்க வயல் சட்டமன்றத் தொகுதியில், ஆனந்தராஜ் என்பவரும் காந்தி நகர் சட்டமன்றத் தொகுதியில் குமார் என்பவரும் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளார்.
மேலும் தேர்தல் கமிஷன் எடப்பாடி கே.பழனிச்சாமி தரப்பை ஆதரித்து சின்னம் வழங்குமா அல்லது இந்தக் கட்சியினர் நடத்தும் வழக்கின் இறுதி உத்தரவு வரும் வரை பார்த்திருக்குமா என்பதும் ஒருவேளை ஒருதரப்பில் முடிவெடுக்கும் நிலை வந்தால் அக்கட்சி மீண்டும் ஒரு பிளைவைச் சந்திக்கும் நிலைதான் உள்ளது ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் திருச்சிராப்பள்ளி பொதுக்கூட்ட மாநாடும்
எடப்பாடி கே.பழனிச்சாமி தரப்பில் மதுரை பொதுக்கூட்ட மாநாடும் அவர்கள் இரண்டு தரப்பையும் வழிநடத்தும் நபர்கள் வைத்த பரிட்சை போலவே அரசியல் பார்வையாளர்கள் பார்த்துவரும் நிலை தான் உள்ளது.
கருத்துகள்