முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சென்னை விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்தின் முதல் பகுதியை பிரதமர் நாளை திறந்து வைக்கிறார்

சென்னை விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்தின் முதல் பகுதியை பிரதமர் நாளை திறந்து வைக்கிறார்



இந்தியாவின் தென்பகுதிக்கு ஊக்கமளிக்கும் வகையில், சென்னை விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்தின் முதல் பகுதி, அதிகரித்து வரும் விமானப் பயணிகளின் போக்குவரத்தை நிறைவு செய்யும் விதத்தில் திறக்கப்பட்டவுள்ளது.

இந்த அதிநவீன முனைய கட்டடத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை திறந்து வைக்கிறார். ஆளுநர் திரு ஆர்.என்.ரவி, முதலமைச்சர் திரு  மு.க.ஸ்டாலின்,  மத்திய சிவில் விமான போக்குவரத்து மற்றும் எஃகு துறை அமைச்சர் திரு. ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய ரயில்வே, தகவல் தொடர்பு மற்றும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ், மத்திய தகவல் ஒலிபரப்பு,  மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர். எல் முருகன், மாநில குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் திரு. தா.மோ.அன்பரசன், பொதுப்பணித்துறை அமைச்சர் திரு. எ.வ. வேலு, நாடாளுமன்ற உறுப்பினர் திரு.  டி.ஆர்.பாலு ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.  தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் பல திட்டங்கள் மற்றும் இந்திய ரயில்வே திட்டங்களும் நாளை தொடங்கி வைக்கப்படும்.



சென்னை இந்தியாவின் ஒரு முக்கிய பெருநகரமாகும், இது சுமார் 10 மில்லியன் மக்களைக் கொண்டுள்ளது. இது அதன் வளமான கலாச்சார பாரம்பரியம், துடிப்பான கலைகள் மற்றும் இசை, கலை கோயில்கள் மற்றும் சுவையான உணவு வகைகளுக்கு புகழ்பெற்றது, இதனால் உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான பார்வையாளர்களை ஈர்க்கிறது. சமீபத்திய ஆண்டுகளில், சென்னை வணிகம் மற்றும் தொழில்துறை, கல்வி மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் மையமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தின் பெருமையை உலகெங்கிலும் உள்ள மக்கள் மத்தியில் பறைசாற்றி வருகிறது. இது மட்டுமின்றி, கலாச்சார ரீதியாக வளமான இந்தப் பெருநகரம், அதன் அமைதியான கடற்கரைகள் மற்றும் உலகத் தரம் வாய்ந்த சுகாதார வசதிகளுடன் உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது.

சென்னை விமான நிலையம், அதன் அதிநவீன முனையங்கள்,  தடையற்ற பன்மாதிரி இணைப்பு மற்றும் மேம்பட்ட வசதிகளுடன், தென்னிந்தியாவின் நுழைவாயிலாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடம் (பகுதி  I)  பரபரப்பான விமான நிலையத்திற்கு ஒரு அத்தியாவசியமான மேம்பாடாக அமைந்துள்ளது. தற்போதுள்ள முனையங்களுடன், விமான நிலையம் ஆண்டுக்கு 23 மில்லியன் பயணிகள் என்ற அளவில் இருந்து 30 மில்லியன் பயணிகளைக் கையாளும் திறனைப் பெற்றுள்ளது. இரண்டாம் கட்ட பணிகள் முடிவடைந்ததும் இது 35 மில்லியன் பயணிகளாக அதிகரிக்கும்.




 இந்த முதல் கட்ட முனையம் 1,36,295 சதுர மீட்டர் பரப்பளவில் விமான நிலைய வசதிகளின் அற்புதமான உச்சபட்ச சௌகரியங்களின் அணிவகுப்பைக் கொண்டுள்ளது. 100 செக்-இன் கவுண்டர்கள், 108 குடிவரவு கவுண்டர்கள், 17 மின்தூக்கிகள், 17 நகரும் படிக்கட்டுகள்,  06 பயணப்பெட்டிகளைத் திரும்பப் பெறும் பேக்கேஜ் ரீக்ளைம் பெல்ட்கள் மற்றும் பலவற்றுடன் பயணிகளுக்கு முனையத்திற்குள் தடையற்ற வசதிகளும், அனுபவமும் கிடைக்கும். அதிநவீன தொழில்நுட்பத்தால் மேம்படுத்தப்பட்ட ஏராளமான வசதிகள், அதன் பயணிகளுக்கு  வசதியான மற்றும் தொந்தரவு இல்லாத பயண அனுபவத்தை வழங்குவது இந்திய விமான நிலைய ஆணையத்தின் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும்.

புதிய முனைய கட்டிடம், நவீன மற்றும் பாரம்பரிய கூறுகளை தன்னகத்தே தடையின்றி ஒருங்கிணைத்திருப்பது, கட்டிடக்கலையின் சிறப்பிற்கு ஒரு சான்றாகும். இது உள்ளூர் தமிழ் கலாச்சாரத்தின் குறிப்பிடத்தக்க பிரதிபலிப்பாகும். கோலம், சேலைகள், கோயில்கள் மற்றும் இயற்கை சூழலை முன்னிலைப்படுத்தும் பிற கூறுகள் போன்ற பாரம்பரிய அம்சங்களை இது உள்ளடக்கியது.



விமான நிலைய முனையம் ஒரு எதிர்கால பொறியியல் அற்புதம், நவீன தொழில்நுட்பம் மற்றும் நிலையான அம்சங்களின் கலவையைக் கொண்டுள்ளது. இது பயணத்தை எளிதாக்குவதுடன், கார்பன் தடத்தைக் குறைக்க உதவும். புதிய முனையத்தின் நிலையான வடிவமைப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த  தொழில்நுட்பங்களை செயல்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது.  இயற்கை ஒளி தொழில்நுட்ப பயன்பாடு, மழை நீர் சேகரிப்பு நுட்பங்களைச் செயல்படுத்துதல் போன்றவை விமான நிலையத்தின்  சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைப்பதில் உறுதியாக உள்ளது.  இந்தியாவில் ஒரு தேசிய பசுமை கட்டிட மதிப்பீட்டு அமைப்பின் அங்கீகாரத்தையும் இது பெற்றுள்ளது. முனைய கட்டிடம், பிற துணை கட்டிடங்கள் போன்ற சென்னை சர்வதேச விமான நிலையத்தின் நகர பக்க உள்கட்டமைப்பின் மேம்பாடு மற்றும் நவீனமயமாக்கல் திட்டமிடப்பட்ட திறன் கூட்டல் மற்றும் விமான பக்க உள்கட்டமைப்பின் உகந்த பயன்பாடு ஆகியவற்றால் மெருகூட்டப்பட்டுள்ளது. விரைவாக  வெளியேறும் வழிகள் குறைந்த காத்திருப்பு காலத்துடன் உள்ளேயும் வெளியேயும் விமானங்களின் சீரான இயக்கத்தை மேம்படுத்துகின்றன.  உச்சபட்ச நெரிசல் நேரங்களில் ஒரு மணி நேரத்திற்கு 36 இயக்கங்களிலிருந்து 45 இயக்கங்களாக குறிப்பிடத்தக்க அளவு அதிகரிப்பு ஏற்படும்.

சென்னை விமான நிலையத்தில் 2,20,972 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய ஒருங்கிணைந்த கட்டிடம்,  இரண்டு கட்டங்களாக ரூ. 2467 கோடி செலவில் கட்டப்படுகிறது.

சென்னை விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டடத்தின் காட்சிகள் மற்றும் புகைப்படங்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யவும்

https://we.tl/t-QafElsHkvI

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த