முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சென்னை விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்தின் முதல் பகுதியை பிரதமர் நாளை திறந்து வைக்கிறார்

சென்னை விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்தின் முதல் பகுதியை பிரதமர் நாளை திறந்து வைக்கிறார்



இந்தியாவின் தென்பகுதிக்கு ஊக்கமளிக்கும் வகையில், சென்னை விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்தின் முதல் பகுதி, அதிகரித்து வரும் விமானப் பயணிகளின் போக்குவரத்தை நிறைவு செய்யும் விதத்தில் திறக்கப்பட்டவுள்ளது.

இந்த அதிநவீன முனைய கட்டடத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை திறந்து வைக்கிறார். ஆளுநர் திரு ஆர்.என்.ரவி, முதலமைச்சர் திரு  மு.க.ஸ்டாலின்,  மத்திய சிவில் விமான போக்குவரத்து மற்றும் எஃகு துறை அமைச்சர் திரு. ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய ரயில்வே, தகவல் தொடர்பு மற்றும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ், மத்திய தகவல் ஒலிபரப்பு,  மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர். எல் முருகன், மாநில குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் திரு. தா.மோ.அன்பரசன், பொதுப்பணித்துறை அமைச்சர் திரு. எ.வ. வேலு, நாடாளுமன்ற உறுப்பினர் திரு.  டி.ஆர்.பாலு ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.  தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் பல திட்டங்கள் மற்றும் இந்திய ரயில்வே திட்டங்களும் நாளை தொடங்கி வைக்கப்படும்.



சென்னை இந்தியாவின் ஒரு முக்கிய பெருநகரமாகும், இது சுமார் 10 மில்லியன் மக்களைக் கொண்டுள்ளது. இது அதன் வளமான கலாச்சார பாரம்பரியம், துடிப்பான கலைகள் மற்றும் இசை, கலை கோயில்கள் மற்றும் சுவையான உணவு வகைகளுக்கு புகழ்பெற்றது, இதனால் உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான பார்வையாளர்களை ஈர்க்கிறது. சமீபத்திய ஆண்டுகளில், சென்னை வணிகம் மற்றும் தொழில்துறை, கல்வி மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் மையமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தின் பெருமையை உலகெங்கிலும் உள்ள மக்கள் மத்தியில் பறைசாற்றி வருகிறது. இது மட்டுமின்றி, கலாச்சார ரீதியாக வளமான இந்தப் பெருநகரம், அதன் அமைதியான கடற்கரைகள் மற்றும் உலகத் தரம் வாய்ந்த சுகாதார வசதிகளுடன் உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது.

சென்னை விமான நிலையம், அதன் அதிநவீன முனையங்கள்,  தடையற்ற பன்மாதிரி இணைப்பு மற்றும் மேம்பட்ட வசதிகளுடன், தென்னிந்தியாவின் நுழைவாயிலாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடம் (பகுதி  I)  பரபரப்பான விமான நிலையத்திற்கு ஒரு அத்தியாவசியமான மேம்பாடாக அமைந்துள்ளது. தற்போதுள்ள முனையங்களுடன், விமான நிலையம் ஆண்டுக்கு 23 மில்லியன் பயணிகள் என்ற அளவில் இருந்து 30 மில்லியன் பயணிகளைக் கையாளும் திறனைப் பெற்றுள்ளது. இரண்டாம் கட்ட பணிகள் முடிவடைந்ததும் இது 35 மில்லியன் பயணிகளாக அதிகரிக்கும்.




 இந்த முதல் கட்ட முனையம் 1,36,295 சதுர மீட்டர் பரப்பளவில் விமான நிலைய வசதிகளின் அற்புதமான உச்சபட்ச சௌகரியங்களின் அணிவகுப்பைக் கொண்டுள்ளது. 100 செக்-இன் கவுண்டர்கள், 108 குடிவரவு கவுண்டர்கள், 17 மின்தூக்கிகள், 17 நகரும் படிக்கட்டுகள்,  06 பயணப்பெட்டிகளைத் திரும்பப் பெறும் பேக்கேஜ் ரீக்ளைம் பெல்ட்கள் மற்றும் பலவற்றுடன் பயணிகளுக்கு முனையத்திற்குள் தடையற்ற வசதிகளும், அனுபவமும் கிடைக்கும். அதிநவீன தொழில்நுட்பத்தால் மேம்படுத்தப்பட்ட ஏராளமான வசதிகள், அதன் பயணிகளுக்கு  வசதியான மற்றும் தொந்தரவு இல்லாத பயண அனுபவத்தை வழங்குவது இந்திய விமான நிலைய ஆணையத்தின் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும்.

புதிய முனைய கட்டிடம், நவீன மற்றும் பாரம்பரிய கூறுகளை தன்னகத்தே தடையின்றி ஒருங்கிணைத்திருப்பது, கட்டிடக்கலையின் சிறப்பிற்கு ஒரு சான்றாகும். இது உள்ளூர் தமிழ் கலாச்சாரத்தின் குறிப்பிடத்தக்க பிரதிபலிப்பாகும். கோலம், சேலைகள், கோயில்கள் மற்றும் இயற்கை சூழலை முன்னிலைப்படுத்தும் பிற கூறுகள் போன்ற பாரம்பரிய அம்சங்களை இது உள்ளடக்கியது.



விமான நிலைய முனையம் ஒரு எதிர்கால பொறியியல் அற்புதம், நவீன தொழில்நுட்பம் மற்றும் நிலையான அம்சங்களின் கலவையைக் கொண்டுள்ளது. இது பயணத்தை எளிதாக்குவதுடன், கார்பன் தடத்தைக் குறைக்க உதவும். புதிய முனையத்தின் நிலையான வடிவமைப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த  தொழில்நுட்பங்களை செயல்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது.  இயற்கை ஒளி தொழில்நுட்ப பயன்பாடு, மழை நீர் சேகரிப்பு நுட்பங்களைச் செயல்படுத்துதல் போன்றவை விமான நிலையத்தின்  சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைப்பதில் உறுதியாக உள்ளது.  இந்தியாவில் ஒரு தேசிய பசுமை கட்டிட மதிப்பீட்டு அமைப்பின் அங்கீகாரத்தையும் இது பெற்றுள்ளது. முனைய கட்டிடம், பிற துணை கட்டிடங்கள் போன்ற சென்னை சர்வதேச விமான நிலையத்தின் நகர பக்க உள்கட்டமைப்பின் மேம்பாடு மற்றும் நவீனமயமாக்கல் திட்டமிடப்பட்ட திறன் கூட்டல் மற்றும் விமான பக்க உள்கட்டமைப்பின் உகந்த பயன்பாடு ஆகியவற்றால் மெருகூட்டப்பட்டுள்ளது. விரைவாக  வெளியேறும் வழிகள் குறைந்த காத்திருப்பு காலத்துடன் உள்ளேயும் வெளியேயும் விமானங்களின் சீரான இயக்கத்தை மேம்படுத்துகின்றன.  உச்சபட்ச நெரிசல் நேரங்களில் ஒரு மணி நேரத்திற்கு 36 இயக்கங்களிலிருந்து 45 இயக்கங்களாக குறிப்பிடத்தக்க அளவு அதிகரிப்பு ஏற்படும்.

சென்னை விமான நிலையத்தில் 2,20,972 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய ஒருங்கிணைந்த கட்டிடம்,  இரண்டு கட்டங்களாக ரூ. 2467 கோடி செலவில் கட்டப்படுகிறது.

சென்னை விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டடத்தின் காட்சிகள் மற்றும் புகைப்படங்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யவும்

https://we.tl/t-QafElsHkvI

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...