ஜகத்குரு ஆதிசங்கராச்சாரியாவின் பிறந்தநாளில் அவருக்குப் பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்
ஜகத்குரு ஆதிசங்கராச்சாரியாவின் பிறந்தநாளில் அவருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.
ட்விட்டர் செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது;
“அத்வைத வேதாந்தத்தின் நிறுவனரும், இந்திய கலாச்சார மறுமலர்ச்சியின் முன்னோடியுமான ஜகத்குரு ஆதி சங்கராச்சாரியார் அவர்களின் பிறந்தநாளில் கோடிக்கணக்கான வணக்கங்கள். ஒரே இந்தியா உன்னத இந்தியாவின் உயிர்நாடி அவரது ஆன்மீகச் செய்திகளில் பொதிந்துள்ளது, இது காலகாலத்திற்கும் நாட்டு மக்களின் உந்து சக்தியாகத் தொடரும்.”
கருத்துகள்