ரூபாய்.2438 கோடி ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் சம்பந்தப்பட்டுள்ளார் அதனால் வெளிநாடு தப்பியோட்டம்
அவரை விசாரிக்க பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறை திட்டம்
சென்னை அமைந்தகரையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் வட்டி தருவதாக அறிவித்ததை நம்பி, லட்சக்கணக்கானோர் முதலீடு செய்தனர். ஆனால், முதலீட்டாளர்களுக்கு பணத்தை நிறுவனம் திருப்பித்தரவில்லை.
அதனால் பொதுமக்களிடம் முதலீடாக பெற்ற ரூபாய் .2,438 கோடி மோசடி செய்ததாகக் கொடுக்கப்பட்ட புகார் மீது பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். இந்த வழக்கை கூடுதல் டிஜிபி அபின் தினேஷ் மோடக், ஐஜி ஆசியம்மாள், கண்காணிப்பாளர் மகேஷ்வரன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். வழக்கின் அடிப்படையில் அந்நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்டது அதன் மேலாண் இயக்குனர்கள் ராஜசேகர், உஷா ராஜசேகர், மைக்கேல் ராஜ் ஆகியோர் வெளிநாட்டில் தலைமறைவான நிலையில், அந்நிறுவனத்தின் இயக்குனரும், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகியுமான ஹரீஷ் மற்றும் மற்றொரு இயக்குனரான மாலதி ஆகியோரை பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறை கடந்த வாரம் கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்தனர்.
மேலும் இந்த வழக்கில் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான ரூசோ என்பவரையும் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், நடிகரும் பாரதிய ஜனதா கட்சியில் கலைப் பிரிவு மாநில நிர்வாகியுமான இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இரமுக்களஞ்சியம் என்பவரின் மகன்களில் ஒருவரான ஆர்.கே.சுரேஷ் என்பவரிடம் வழக்கை மத்திய அரசின் மூலம் ஒன்றுமில்லாமல் செய்வதாகக் கூறி ரூபாய். 12 கோடியை அந்தக் குற்றவாளிகள் கொடுத்துள்ளனராம் . அந்தப் பணத்தைக் கொண்டு உயர் அதிகாரிகளை வளைக்கத் திட்டமிட்டிருந்தார். இதற்காக சில இடைத்தரகர்களையும் அணுகியுள்ளார்.
ஆனால் பொருளாதாரக் குற்றப்பிரிவில் சில நேர்மையான அதிகாரிகளும் பணியாற்றுவதால், இவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் பணத்தை வாங்கிய ஆர்.கே.சுரேஷ், அதோடு ஏமாற்றி விட்டதாகவும் கூறப்படுகிறது. இதை தனது வாக்குமூலத்தில் ரூசோ கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனால், மோசடிப் பணமான ரூ. 12 கோடியை வாங்கிய நடிகர் ஆர்.கே.சுரேஷ் என்பவரை விசாரிக்க காவல்துறையினர் தேடினர். ரூசோ கைதான தகவல் வெளியானதும், நடிகர் ஆர்.கே.சுரேஷ், துபாயுக்கு விமானம் தப்பி ஓடி விட்டார். இதனால் அவரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறை முடிவு செய்துள்ளனர். அவர் கைது செய்யப்பட்டால் மேலும் அதில் சம்பந்தப்பட்ட பல பாஜக நிர்வாகிகள் சிக்கலாம் என்றும் பேசப்படுகிறது. மேலும் நடிகர் ஆர்.கே.சுரேஷ், வழக்கை ஒன்றுமில்லாமல் செய்ய பாஜக நிர்வாகிகள் வேறு யாரிடமாவது பணத்தைக் கொடுத்துள்ளனரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர். அதனால் நடிகர் ஆர்.கே.சுரேஷை தமிழ் நாட்டிற்கு அழைத்து வர பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மா்ச் மாயம் 28 ஆம் தேதி ஆருத்ரா கோல்டு நிதிநிறுவன முறைகேடு வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஹரீஸ், மாலா ஆகிய இருவரையும் 10 நாட்கள் காவல்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. சிறப்பு நீதிமன்ற நீதிபதி கருணாநிதி வழக்கை விசாரித்து, இந்த வழக்கில் ஹரீஷை 4 நாட்கள் காவல்துறை காவலில் விசாரிக்கவும் மற்றொரு இயக்குனர் மாலதியை ஒரு நாள் விசாரிக்கவும் உத்தரவிட்டிருந்தார். ஹரீஷிடம் 4 நாட்கள் காவல்துறை விசாரணை முடிவடைந்த நிலையில், அவரை நீதிமன்றத்தில் மீன்டும் ஆஜர்படுத்தினர். அப்போது, காவல்துறை தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் பாபு ஆஜராகி, விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. பல தகவல்கள் பெறப்படவுள்ளன. விசாரணையில்தான் அனைத்தும் தெரியவரும் என்றார். அதையடுத்து, ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனத்தின் இயக்குனர் ஹரீஷை ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதிவரை காவல்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து நேற்று முதல் ஹரீசிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில்ஆருத்ரா நிதி நிறுவன இயக்குனரை சென்னை விமான நிலையத்தில் கால் வைத்ததும் கைது.
ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் பண மோசடி விவகாரம், இப்போது மாநில பாஜக தலைமையகமான கமலாலயத்தின் கதவுகளைத் தட்டியிருக்கிறது. முறைகேடு தொடர்பாக ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரும், தமிழ்நாடு பாரதிய ஜனதாவின் விளையாட்டுப் பிரிவின் மாநிலச் செயலாளராக இருந்தவருமான ஹரீஷ் என்பவரைக் கைது செய்திருக்கிறது பொருளாதாரக் குற்றப்பிரிவுக் காவல்துறை
வழக்கமான நிதி நிறுவன மோசடி வழக்கில் அரங்கேறும் கைதைப்போல இதைக் கடந்துபோய்விட முடியாது. காவல்துறை திவீரமாகத் தேடியபோதே, பிரதமரை வரவேற்ற பா.ஜ.க குழுவில் இடம்பிடித்தவர் தான் ஹரீஷ்.
புதுச்சேரி, மும்பை, டெல்லி என இடங்களை அடுத்தடுத்து மாற்றி, கைதிலிருந்து தொடர்ச்சியாகத் தப்பித்து வந்தவரை ஒருவழியாகச் சுற்றி வளைத்து விட்டது காவல்துறை. அவரின் கைது விவகாரம், பா.ஜ.க மாநில விளையாட்டுப் பிரிவின் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி முதல் மாநிலத் தலைவர் அண்ணாமலை வரை விசாரணைக்கு வந்து வெளிச்சம் போட்டுக் காட்டிருக்கிறது.
தமிழ்நாடு பா.ஜ.க-வுக்குள் ஹரீஷின் கைது எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது... அண்ணாமலை, அமர் இருவருக்கும் இதனால் ஏற்பட்டிருக்கும் சிக்கல்கள் என்ன..? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...
கருத்துகள்