மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் 1500 ஆண்டுகள் பழமையான மீனாட்சி அம்மன்
கோடை கால வசந்த விழாவில் 500 ஆண்டுகள் கடந்த அழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம் சைவ வைணவ கலப்பு விழா சித்திரைத் திருவிழாவிற்கு கொடியேற்ற நிகழ்ச்சிகளுடன் வெகு விமரிசையாக நடந்ததில் மாநில நிதியமைச்சர் பி.டி ஆர்.பழனி வேல் தியாகராஜன் மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர், மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த் மற்றும் காவல்துறையினரும் கலந்து கொண்டனர். சித்திரை திருவிழாவானது கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.
சித்திரை திருவிழாவின் முதல்நாளில் சிம்ம வாகனத்தில் கம்பீரமாக வலம் வந்தார் அங்கயற்கன்னி கயல்விழி மீனவர் மகள் மீன் இலட்சினைக் கொடி கொண்ட பாண்டிய நாட்டில் மதுரைக்கு அரசி ஸ்ரீ மீனாட்சி அம்மன். கற்பக விருட்ச வாகனத்தில் பிரியாவிடையுடன் வலம் வந்த சுந்தரேஸ்வரப் பெருமானை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண் குளிரக் கண்டு தரிசனம் செய்தனர்.
ஞாயிற்றுக்கிழமையன்று சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் அதிகாலை சிறப்பு பூஜையைத் தொடர்ந்து காலை 10 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் அருள்மிகு சுந்தரேசுவரர்- ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆகியோர் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். அதன் பின்னர் 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடைபெற்றதில் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி அம்மனை வணங்கினர்.
12 நாட்கள் நடக்கும் இத் திருவிழாவில் காலை, இரவு நேரங்களில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள்.23.ஏப்ரல்.2023-மாலை-கற்பக விருட்சம்,சிம்மவாகனம்
24.ஏப்ரல்.23-இரவு-பூதம்,அன்னவாகனம்
25.ஏப்ரல்.23-இரவு-கைலாசவாகனம்,காமதேனு வாகனம் 26.ஏப்ரல்.2023- காலை தங்கப்பல்லக்கு. வில்லாபுரம் பாகற்காய் மண்டகப்படி
27.ஏப்ரல்.23-இரவு-தங்கக்குதிரை வாகனம் வேடர்பறிலீலை
28.ஏப்ரல்.23-இரவு- ரிஷப வாகனம் - சைவசமய ஸ்தாபித வரலாற்று லீலை.
29.ஏப்ரல்.23-இரவு-நந்திகேசுவரர்,யாளி வாகனம்
30.ஏப்ரல்.2023-இரவு 07.05 முதல் 07.29-மணிக்குள் அன்னை ஸ்ரீ மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்
01.மே.2023-இரவு திக்விஜயம்- இந்திரவிமானம் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஸ்ரீ மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் மே மாதம் 2 ஆம் தேதியும் மே மாதம் 3 ஆம் தேதி தேரோட்டமும் நடக்க உள்ளது. மே மாதம் 4ஆம் தேதி தீர்த்தவாரி தேவேந்திர பூஜையுடன் சித்திரைத் திருவிழா நிறைவு பெறுகிறது.
கொடியேற்ற நிகழ்வில் தமிழ்நாடு நிதியமைச்சர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மேயர் இந்திராணி பொன் வசந்த் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
மதுரை சித்திரை திருவிழா..கற்பக விருட்ச வாகனத்தில் சுந்தரேஸ்வரர்..சிம்ம வாகனத்தில் வலம் வந்த அம்மன்
சித்திரை திருவிழாவின் முதல்நாளில் சிம்ம வாகனத்தில் கம்பீரமாக வலம் வந்தார் ஸ்ரீ மீனாட்சி அம்மன். கற்பக விருட்ச வாகனத்தில் பிரியாவிடையுடன் வலம் வந்த சுந்தரேஸ்வரரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண் குளிரத் தரிசனம் செய்தனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள மீனாட்சி அம்மன் கோவில் உலகப் பிரசித்திப் பெற்றது அங்கு நடைபெறும் விழாக்களுக்கு மக்கள் திரளாகப் பங்கேற்பது திருமலை நாயக்கர் காலம் முதல் வழக்கமான ஒன்று. குறிப்பாக, ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சித்திரை மாதத்தில் நடைபெறும் சித்திரைக் கோடை வசந்த விழா திருவிழா மிகவும் பிரபலம்.
ஞாயிறன்று அதிகாலை சிறப்பு பூஜையைத் தொடர்ந்து காலை 10 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் சுந்தரேசுவரர்-மீனாட்சி ஆகியோர் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். அதன் பின்னர் 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி அம்மனை வணங்கினர்.
12 நாட்கள் நடக்கும் சித்திரை பெருவிழாவின் முதல் நாளான நேற்று மாலை வெள்ளி சிம்மாசனத்தில் கோவிலின் உள்ளே அமைந்துள்ள குலாலர் மண்டகப்படியில் அம்மனும் சுவாமியும் எழுந்தருளி. பிறகு அங்கிருந்து புறப்பாடாகி நான்கு மாசி வீதிகளில் சிம்ம வாகனத்தில் மீனாட்சி அம்மனும், கற்பகவிருட்சம் வாகனத்தில் சுந்தரேசுவரரும் பிரியாவிடையும் எழுந்தருளி விதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
சிம்ம வாகனத்தில் கம்பீரமாக மீனாட்சியும், கற்பக விருட்ச வாகனத்தில் சுந்தரேஸ்வரப் பெருமான் வீதி உலா வருவதை ஆயிரக்கணக்கான மக்கள் மாசி வீதிகளில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். சிறுவர்கள் சிறுமிகள் மீனாட்சி அம்மன் போல வேடமணிந்தும், கோலாட்டம், சிலம்பாட்டம், பொய்கால் குதிரையாட்டம், உள்ளிட்ட பல்வேறு வகையான பாரம்பரிய கலை வெளிப்படுத்தியவாறு மாசி வீதி விதி உலா வந்தது பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவர் திருக்கோயில் சித்திரை திருவிழா அழைப்பிதழ் சிவகங்கை சமஸ்தானம் மண்டகப்படி நடக்க இருக்கும் நாட்கள் ஆறாம் திருநாள்,ஏழாம் திருநாள் மற்றும் ஒன்பதாம் திருநாள் நிகழ்வுகள் குறிப்பிடப்பட்டுள்ளது
கருத்துகள்