இந்தியக் கடலோரக் காவல்படையினர் மண்டபம் பகுதியில் 260 கிலோ கடல் அட்டையைப் பறிமுதல் செய்தனர்
மண்டபம் அருகேயுள்ள இடையர்வலசை கடற்கரையில், 2023 மே 10-ம் தேதியன்று இந்திய கடலோர காவல்படை 260 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்துள்ளது. கடல் அட்டைகளை சேகரிப்பது, அவற்றை வர்த்தகம் செய்வது வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், 1972 அட்டவணை I-இன் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட கடல் வாழ் உயிரினங்கள் கடத்தப்படுவதாகக் கிடைத்த உளவுத்துறை தகவலின் அடிப்படையில், மண்டபத்தில் உள்ள கடலோர காவல்படை நிலையத்திலிருந்து ஒரு குழு இடையர்வலசை பகுதியில் கடற்கரையின் ஆழமற்ற கடற்பகுதிக்குள் நீந்தி சோதனை செய்தது.
இதில், கடலில் மறைத்து வைக்கப்பட்டிருந் தடை செய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய 11 மூட்டைகளைக் இந்திய கடலோர காவல்படையினர் மீட்டனர். மீட்கப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.1.2 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட அனைத்து பொருட்களையும் இந்தியக் கடலோர காவல்படையினர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
கருத்துகள்