நீதிமன்றத்திற்குள் யாரையும் கைது செய்யக்கூடாது: பாகிஸ்தான் தலைமை நீதிபதி கண்டனம் முன்னாள் பிரதமர் கைதுக்கு அந்த நாட்டுத் தலைமை நீதிபதியின் கண்டனம்
இஸ்லாமாபாத்: நீதிமன்றத்தில் இருக்கும் யாரையும் கைது செய்யக்கூடாதென் பாகிஸ்தான் தலைமை நீதிபதி அறிவித்துள்ளார்.
கல்வி நிறுவன அறக்கட்டளை மோசடி தொடர்பான வழக்கில் செவ்வாய்கிழமையன்று முன்னால் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டார். வழக்கு ஒன்றில் ஜாமீன் கோரி இஸ்லாமாபாத் நீதிமன்றத்துக்கு வந்தவரை நீதிமன்ற வளாகத்திலேயே பாகிஸ்தான் சிறப்பு படை அதிரடியாகக் கைது செய்து கூட்டிச் சென்றது.
இம்ரான் கான் கைதுக்கெதிராக பாகிஸ்தான் முழுவதும் வன்முறைகளும் போராட்டங்களும்ம் நடைபெற்று வருவதாகத் தெரிகிறது. இம்ரான் கான் ஆதரவாளர்கள் சாலைகளில் வாகனங்கள், மற்றும் கண்ணில் படும் பொருட்களை எல்லாம் தீயிட்டுக் கொளுத்தி வருகின்றனர் இம்ரான் கான் ஆதரவாளர்களின் வன்முறைப் போராட்டத்தில் இதுவரை ஏழு பேர் உயிரிழந்துள்ளதைத் தொடர்ந்து, இம்ரான்கானை 8 நாள் காவலில் வைக்க பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே, இம்ரான் கான் கைது சட்டவிரோதம் என அவரது ஆதரவாளர்கள் உச்சநீதிமன்றத்தில் முறையீடும் செய்துள்ளனர். அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் இம்ரான் கான் கைது செய்யப்பட்ட விதத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. இம்ரான் கான் கைது சட்ட விரோதமெனவும், ஒரு மணி நேரத்தில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை நீதிமன்றத்தில் கைது செய்தது சட்டவிரோதம் என கருத்து தெரிவித்த அந்நாட்டு தலைமை நீதிபதி, இம்ரான் கான் கைது செய்யப்பட்ட விதத்திற்கு கண்டனமும் தெரிவித்தார். நீதிமன்ற உத்தரவை ஏற்று இம்ரான் கான் உச்சநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதில் பொது நீதி யாதெனில் ''நல்லாட்சி தருவேன் என நயமாகப் பேசி ஊழல் மலிந்த ஆட்சியைத் தந்து மக்களை ஏமாற்றிய பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பதவியை இழக்க நேரிட்டது பழைய கதை ! தன் பதவி பறிக்கப்பட்டதற்கு அமெரிக்காவைக் காரணமாகச் சொல்லி வந்தார்!
தற்போது நீதிமன்ற வளாகத்திலேயே பாதுகாப்புப் படையால் அதிரடியாக இழுத்து செல்லப்பட்டு கடத்தப்பட்டுள்ளார். அவர் தாக்கப்படுவதாகவும் செய்திகள் வருகிறது! அரச பயங்கரவாதம் பாகிஸ்தானில் அரங்கேறிக் கொண்டுள்ளது! என்பது தான்.
கருத்துகள்