நடிகர் ரஜினிகாந்த் ஒரு பூஜியம்;
என்.டி.ஆரை கொல்ல சதி செய்ததே சந்திரபாபு நாயுடு தான் என அமைச்சராக உள்ள நடிகை ரோஜா சாடல் ''என்.டி.ஆர் மேலிருந்து ஆசிர்வாதம் செய்கிறார் என்று நடிகர் ரஜினிகாந்த் பேசியது தவறு. ,நடிகர் ரஜினிகாந்த் எதுவும் தெரியாமல் தவறாகப் பேசுகிறார். ரஜினிகாந்த் பேசியதைப் பார்த்து தெலுங்கானாவில் உள்ள என். டி. ஆர். ஆதரவாளர்கள் அனைவரும் கோபத்தில் உள்ளனர். என்.டி .ஆரை கொலை செய்ய யார் திட்டம் போட்டாரோ, அவரையே நல்லவர் என்று நடிகர் ரஜினிகாந்து பேசுவது கண்டிக்கத்தக்கது. அரசியலுக்கு வர வேண்டும் என்று விருப்பம் இல்லாதவர், மற்ற மாநில அரசியல் பற்றி பேசும் போது அங்கு என்ன பிரச்சனை உள்ளது என்பதைத் தெரிந்து பேச வேண்டும். இல்லை யென்றால் அமைதியாக இருந்து விட வேண்டும்.
ஆந்திரப் பிரதேசத்தின் அரசியலைப் பற்றித் தெரியாத நடிகர் ரஜினிகாந்த், சந்திரபாபு நாயுடு கூப்பிட்டார் என்பதற்காக வந்து, எதையாவது பேச வேண்டும் எனப் பேசுகிறார். அதனால் அவர் பூஜியமாகி விட்டார். நடிகர் ரஜினிகாந்த் ஒரு அரசியல்வாதியாக இருந்தால் மன்னிப்புக் கேட்கச் சொல்லலாம். ஆனால் அவர் ஒரு நடிகர் மட்டுமே. எனவே அவர் பேசியது குறித்து ஒரு தெளிவான அறிக்கையை அவர் வெளியிட வேண்டும். ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மாதிரி ஒரு முதலமைச்சரை எங்குமே பார்க்க முடியாது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் இரண்டு லட்ச ரூபாய் மதிப்பிலான நிதி உதவிகளைச் செய்துள்ளார்.
சந்திரபாபு நாயுடுக்கு ஆதரவாக பவன் கல்யாண், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் தனித்தனியாக வந்தாலும், ஒன்றாகச் சேர்ந்து வந்தாலும் ஜெகன்மோகன் ரெட்டியை ஒன்றுமே செய்ய முடியாது" எனப் பேசியுள்ளார்
கருத்துகள்