முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஞாயிறு அன்று புதிய நாடாளுமன்றம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும்

புதிய நாடாளுமன்ற தொடக்கவிழாவின் போது நாடாளுமன்றத்தில் வரலா


ற்றுச் சிறப்புமிக்க புனிதமான செங்கோலினைப் பிரதமர் மோடி நிறுவவுள்ளார்

புதிய நாடாளுமன்றம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் ஞாயிறன்று வரலாறு மீண்டும் திரும்பவிருக்கிறது. இந்நாளில் நியாயமான, சமத்துவமான நிர்வாகத்தின் புனித அடையாளமாக விளங்கும் செங்கோலினைப் பிரதமர் பெற்று அதனைப் புதிய நாடாளுமன்றத்தில் நிறுவவிருக்கிறார். இதே செங்கோலினை ஆகஸ்ட் 14 அன்று இரவு பல தலைவர்கள் முன்னிலையில் இந்தியாவின் முதலாவது பிரதமரான திரு ஜவஹர்லால் நேரு தமது இல்லத்தில்  பெற்றுக்கொண்டார்.


இந்தியாவின் சுதந்திர நாளில் நடைபெற்ற ஒட்டுமொத்த நிகழ்வையும் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா நினைவுகூர்ந்தார். “சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட பண்டிட் ஜவஹர்லால் நேருவிடம் செங்கோல் ஒப்படைக்கப்பட்டதன் மூலம் இந்தியாவில் அதிகாரமாற்றம் ஏற்பட்டது என்பது பற்றிய புரிதல் பெரும்பாலான மக்களிடம் இல்லை. இந்தியாவின் சுதந்திரத்தைக் கொண்டாடிய 1947 ஆகஸ்ட் 14 அன்றிரவு இந்த சிறப்பு நிகழ்வு நடைபெற்றது.  இந்த இரவில் சுதந்திர தின விழாவிற்காக தனிப்பட்ட முறையில் வருகை தந்த தமிழ்நாட்டின் திருவாவடுதுறை மடத்தின் ஆதீனங்களிடமிருந்து இந்த செங்கோலினை ஜவஹர்லால் நேரு பெற்றுக்கொண்டார். பிரிட்டிஷாரிடமிருந்து, இந்தியர்களுக்கு அதிகாரம் ஒப்படைக்கப்பட்டதன் தருணத்தை இது குறிப்பால் உணர்த்தியது.  செங்கோல் ஒப்படைக்கப்பட்டதன் அந்தத் தருணத்தை சுதந்திர தினமாக நாம் கொண்டாடுகிறோம்”.

அமிர்தகாலத்தின் தேசிய அடையாளமாக செங்கோலினை ஏற்கும் முடிவை மாண்புமிகு பிரதமர்  மேற்கொண்டுள்ளார். மாண்புமிகு பிரதமரிடம் ஆதீனங்களால் செங்கோல் வழங்கும் அதேபோன்ற நிகழ்வு புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெறவுள்ளது.

செங்கோல் பற்றிய விவரத்தை எடுத்துரைத்த உள்துறை அமைச்சர், நேர்மை என பொருள்படும் செம்மை என்ற தமிழ் வார்த்தையில் இருந்து செங்கோல் என்ற சொல் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள முதன்மையான தர்மம் மிக்க மடங்களைச் சேர்ந்த உயர்நிலை ஆதினங்களால் இது ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது. இதன் உச்சியில் நியாயத்தைக் குறிக்கும் வகையில் கைகளால் செதுக்கப்பட்ட நந்தியின் உருவம் இடம் பெற்றுள்ளது. மிகமுக்கியமாக செங்கோலைப் பெறுவது என்பது நீதியோடும், நேர்மையோடும் ஆள்வதற்கான ஆணையாக இருக்கும்.  மக்களுக்கு சேவைசெய்ய தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இதனை ஒருபோதும் மறக்கலாகாது.

இந்த செங்கோல், 1947-ல் இருந்து மக்களவையில் மக்களவைத் தலைவரின் இருக்கைக்கு அருகே பிரதானமாகத் தெரியும் வகையில்,  மாண்புமிகு பிரதமரால் நிறுவப்படும். நாட்டு மக்கள் காணும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் இது சிறப்புமிக்க தருணங்களில் வெளியே கொண்டுவரப்படும்.

வரலாற்றுச் சிறப்புமிக்க “செங்கோலினை” நிறுவுவதற்கு மிகவும் பொருத்தமான, புனிதமான இடம் நாடாளுமன்றமாகும் என்று உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்தார்.

செங்கோல் நிறுவப்படுவது 1947 ஆகஸ்ட் 15-ன் உணர்வை மறக்க முடியாததாக மாற்றுகிறது. இது எல்லையற்ற நம்பிக்கையின் வாக்குறுதியாகவும், எல்லையற்ற சாத்தியங்களின் அடையாளமாகவும் இருப்பதோடு, வலுவான, வளம் மிக்க தேசத்தை கட்டமைப்பதற்கான தீர்மானமாகவும் உள்ளது. இது அமிர்தகாலத்தின் அடையாளமாக இருக்கும்.  இந்தியா தனது சரியான இடத்தைப் பெறுகின்ற புகழ்மிக்க சகாப்தத்தின் சாட்சியமாகவும் இருக்கும்.

தமிழ்நாட்டு மடங்களின் பங்களிப்பை தமிழ்நாடு அரசு  2021-22-ன் இந்து சமய அறநிலையத்துறை கொள்கைக் குறிப்பில் பெருமிதத்துடன் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின் 24-ம் பத்தி அரசவையின் ஆலோசனைத் தளமாக மடங்களின் பங்களிப்பைத் தெளிவாக எடுத்துரைக்கிறது.

ஆதீனத் தலைவர்களின் கலந்தாலோசனையுடன் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் புனிதமான சடங்கின் போது தங்களின் ஆசிகளைப் பொழிவதற்காக 20 ஆதீனங்களின் தலைவர்கள் இந்தப் புனிதமான விழாவில் பங்கேற்கவுள்ளனர்.  இவர்களுக்கு  எனது நன்றியை நான் தெரிவித்துக்கொள்கிறேன். இதன் கட்டமைப்பில் தொடர்புடைய 96 ஆண்டு பழமையான ஸ்ரீ உம்முடி பங்காரு செட்டி அவர்கள் இந்தப் புனித விழாவில் பங்கேற்பதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த செங்கோல் பற்றிய விவரங்களையும், பதிவிறக்கம் செய்யத்தக்க வீடியோக்களையும், சிறப்பு இணையதளத்தையும் (sengol1947.ignca.gov.in) உள்துறை அமைச்சர் இன்று வெளியிட்டார். இந்திய மக்கள் இதனைக் கண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு பற்றி அறிய வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். இது அனைவருக்கும் பெருமிதமான விஷயமாகும் என்று அவர் கூறினார்.

மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி, மத்திய தகவல் ஒலிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுக்கள் துறை அமைச்சர் திரு அனுராக்சிங் தாக்கூர், கலாச்சார அமைச்சகத்தின் செயலாளர் திரு கோவிந்த் மோகன் உள்ளிட்டோர் செய்தியாளர் சந்திப்பில் உடனிருந்தனர்.  இலக்கியத்தில் "தென்னன் திருநந்தி சேவகன் றன்னொடும் பொன்னங் கிரியினிற் பூதலம் போற்றிடும்" என மிக சிறப்பாக சொல்லப்பட்ட திரு நந்தி கொண்ட ஒரு சிறப்பான எந்தை ஈசனின் செங்கோல் இன்று முதல் நமது இந்தியத் திருநாட்டை வழி நடத்தத் துணை நிற்கப் போகிறது .        . "பொன்றிகழ் மேனி ஒருத்தி தோன்றிச்

செங்கோல் காட்டிச் செய்தவம் புரிந்த

அங்கவள் தன்றிறம் அயர்ப்பா யென்றனள்" 

-மணிமேகலை.18, 82)                   "சேயுயர் விற்கொடிச் செங்கோல் வேந்தே

வாயி லோரெ”ன வாயில் வந் திசைப்ப

(சிலப்பதிகாரம்  :கால்கோட் காதை 128-140)..இப்படி மதிப்பு மிக்க செங்கோல் ..எப்போது செய்தாலும்  அது ஒரு சின்னம் தான்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.