முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஞாயிறு அன்று புதிய நாடாளுமன்றம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும்

புதிய நாடாளுமன்ற தொடக்கவிழாவின் போது நாடாளுமன்றத்தில் வரலா


ற்றுச் சிறப்புமிக்க புனிதமான செங்கோலினைப் பிரதமர் மோடி நிறுவவுள்ளார்

புதிய நாடாளுமன்றம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் ஞாயிறன்று வரலாறு மீண்டும் திரும்பவிருக்கிறது. இந்நாளில் நியாயமான, சமத்துவமான நிர்வாகத்தின் புனித அடையாளமாக விளங்கும் செங்கோலினைப் பிரதமர் பெற்று அதனைப் புதிய நாடாளுமன்றத்தில் நிறுவவிருக்கிறார். இதே செங்கோலினை ஆகஸ்ட் 14 அன்று இரவு பல தலைவர்கள் முன்னிலையில் இந்தியாவின் முதலாவது பிரதமரான திரு ஜவஹர்லால் நேரு தமது இல்லத்தில்  பெற்றுக்கொண்டார்.


இந்தியாவின் சுதந்திர நாளில் நடைபெற்ற ஒட்டுமொத்த நிகழ்வையும் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா நினைவுகூர்ந்தார். “சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட பண்டிட் ஜவஹர்லால் நேருவிடம் செங்கோல் ஒப்படைக்கப்பட்டதன் மூலம் இந்தியாவில் அதிகாரமாற்றம் ஏற்பட்டது என்பது பற்றிய புரிதல் பெரும்பாலான மக்களிடம் இல்லை. இந்தியாவின் சுதந்திரத்தைக் கொண்டாடிய 1947 ஆகஸ்ட் 14 அன்றிரவு இந்த சிறப்பு நிகழ்வு நடைபெற்றது.  இந்த இரவில் சுதந்திர தின விழாவிற்காக தனிப்பட்ட முறையில் வருகை தந்த தமிழ்நாட்டின் திருவாவடுதுறை மடத்தின் ஆதீனங்களிடமிருந்து இந்த செங்கோலினை ஜவஹர்லால் நேரு பெற்றுக்கொண்டார். பிரிட்டிஷாரிடமிருந்து, இந்தியர்களுக்கு அதிகாரம் ஒப்படைக்கப்பட்டதன் தருணத்தை இது குறிப்பால் உணர்த்தியது.  செங்கோல் ஒப்படைக்கப்பட்டதன் அந்தத் தருணத்தை சுதந்திர தினமாக நாம் கொண்டாடுகிறோம்”.

அமிர்தகாலத்தின் தேசிய அடையாளமாக செங்கோலினை ஏற்கும் முடிவை மாண்புமிகு பிரதமர்  மேற்கொண்டுள்ளார். மாண்புமிகு பிரதமரிடம் ஆதீனங்களால் செங்கோல் வழங்கும் அதேபோன்ற நிகழ்வு புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெறவுள்ளது.

செங்கோல் பற்றிய விவரத்தை எடுத்துரைத்த உள்துறை அமைச்சர், நேர்மை என பொருள்படும் செம்மை என்ற தமிழ் வார்த்தையில் இருந்து செங்கோல் என்ற சொல் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள முதன்மையான தர்மம் மிக்க மடங்களைச் சேர்ந்த உயர்நிலை ஆதினங்களால் இது ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது. இதன் உச்சியில் நியாயத்தைக் குறிக்கும் வகையில் கைகளால் செதுக்கப்பட்ட நந்தியின் உருவம் இடம் பெற்றுள்ளது. மிகமுக்கியமாக செங்கோலைப் பெறுவது என்பது நீதியோடும், நேர்மையோடும் ஆள்வதற்கான ஆணையாக இருக்கும்.  மக்களுக்கு சேவைசெய்ய தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இதனை ஒருபோதும் மறக்கலாகாது.

இந்த செங்கோல், 1947-ல் இருந்து மக்களவையில் மக்களவைத் தலைவரின் இருக்கைக்கு அருகே பிரதானமாகத் தெரியும் வகையில்,  மாண்புமிகு பிரதமரால் நிறுவப்படும். நாட்டு மக்கள் காணும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் இது சிறப்புமிக்க தருணங்களில் வெளியே கொண்டுவரப்படும்.

வரலாற்றுச் சிறப்புமிக்க “செங்கோலினை” நிறுவுவதற்கு மிகவும் பொருத்தமான, புனிதமான இடம் நாடாளுமன்றமாகும் என்று உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்தார்.

செங்கோல் நிறுவப்படுவது 1947 ஆகஸ்ட் 15-ன் உணர்வை மறக்க முடியாததாக மாற்றுகிறது. இது எல்லையற்ற நம்பிக்கையின் வாக்குறுதியாகவும், எல்லையற்ற சாத்தியங்களின் அடையாளமாகவும் இருப்பதோடு, வலுவான, வளம் மிக்க தேசத்தை கட்டமைப்பதற்கான தீர்மானமாகவும் உள்ளது. இது அமிர்தகாலத்தின் அடையாளமாக இருக்கும்.  இந்தியா தனது சரியான இடத்தைப் பெறுகின்ற புகழ்மிக்க சகாப்தத்தின் சாட்சியமாகவும் இருக்கும்.

தமிழ்நாட்டு மடங்களின் பங்களிப்பை தமிழ்நாடு அரசு  2021-22-ன் இந்து சமய அறநிலையத்துறை கொள்கைக் குறிப்பில் பெருமிதத்துடன் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின் 24-ம் பத்தி அரசவையின் ஆலோசனைத் தளமாக மடங்களின் பங்களிப்பைத் தெளிவாக எடுத்துரைக்கிறது.

ஆதீனத் தலைவர்களின் கலந்தாலோசனையுடன் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் புனிதமான சடங்கின் போது தங்களின் ஆசிகளைப் பொழிவதற்காக 20 ஆதீனங்களின் தலைவர்கள் இந்தப் புனிதமான விழாவில் பங்கேற்கவுள்ளனர்.  இவர்களுக்கு  எனது நன்றியை நான் தெரிவித்துக்கொள்கிறேன். இதன் கட்டமைப்பில் தொடர்புடைய 96 ஆண்டு பழமையான ஸ்ரீ உம்முடி பங்காரு செட்டி அவர்கள் இந்தப் புனித விழாவில் பங்கேற்பதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த செங்கோல் பற்றிய விவரங்களையும், பதிவிறக்கம் செய்யத்தக்க வீடியோக்களையும், சிறப்பு இணையதளத்தையும் (sengol1947.ignca.gov.in) உள்துறை அமைச்சர் இன்று வெளியிட்டார். இந்திய மக்கள் இதனைக் கண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு பற்றி அறிய வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். இது அனைவருக்கும் பெருமிதமான விஷயமாகும் என்று அவர் கூறினார்.

மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி, மத்திய தகவல் ஒலிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுக்கள் துறை அமைச்சர் திரு அனுராக்சிங் தாக்கூர், கலாச்சார அமைச்சகத்தின் செயலாளர் திரு கோவிந்த் மோகன் உள்ளிட்டோர் செய்தியாளர் சந்திப்பில் உடனிருந்தனர்.  இலக்கியத்தில் "தென்னன் திருநந்தி சேவகன் றன்னொடும் பொன்னங் கிரியினிற் பூதலம் போற்றிடும்" என மிக சிறப்பாக சொல்லப்பட்ட திரு நந்தி கொண்ட ஒரு சிறப்பான எந்தை ஈசனின் செங்கோல் இன்று முதல் நமது இந்தியத் திருநாட்டை வழி நடத்தத் துணை நிற்கப் போகிறது .        . "பொன்றிகழ் மேனி ஒருத்தி தோன்றிச்

செங்கோல் காட்டிச் செய்தவம் புரிந்த

அங்கவள் தன்றிறம் அயர்ப்பா யென்றனள்" 

-மணிமேகலை.18, 82)                   "சேயுயர் விற்கொடிச் செங்கோல் வேந்தே

வாயி லோரெ”ன வாயில் வந் திசைப்ப

(சிலப்பதிகாரம்  :கால்கோட் காதை 128-140)..இப்படி மதிப்பு மிக்க செங்கோல் ..எப்போது செய்தாலும்  அது ஒரு சின்னம் தான்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...