முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இலஞ்சமாக எது கொடுத்தாலும் வாங்கும் தலையாரி கேரளாவில் கைது

இலஞ்சமாக எது கொடுத்தாலும் வாங்கும்  தலையாரி அறையை பார்த்து அதிர்ந்த லஞ்ச ஒழிப்புத் துறை



17 கிலோ சில்லறை நாணயங்கள். கவர் பிரிக்கப்படாத 10 புதிய சட்டை வேட்டிகள், ஒரு சாக்கில் குடம்புளி,  பத்து லிட்டர் பாட்டில் தேன், பட்டாசு பாக்கெட்டுகள், கட்டுக்கட்டாக புதிய பேனாக்கள் என லஞ்சமாக வாங்கிய பல பொருள்களும் அவரது குவிந்து கிடந்து கிடந்தள்ளன. அவை பறிமுதல் செய்யப்பட்டது , லஞ்சப் பணம் அனைத்தும் 

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மன்னார்க்காடு வட்டம் பாலக்கயம் கிராம நிர்வாக அலுவலகத்தில் சான்றிதழ் ஒன்று கேட்டு விண்ணப்பித்திருந்ததாகவும். அதற்காக கிராமத் தலையாரி சுரேஷ்குமார் 2,500 ரூபாய் லஞ்சமாக கேட்பதாகவும் ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் அளித்தார் பாதிக்கப்பட்டவர். லஞ்ச ஒழிப்புத்துறையினர் பினாப்தலின் இரசாயன பவுடர் தடவிய பணத்தை அந்த நபரிடம் கொடுத்தனுப்பி கிராம நிர்வாக அலுவலக தலையாரியான உதவியாளருக்கு லஞ்சமாக கொடுக்கும்படி கூறியுள்ளனர். ஒரு தனியார் கல்லூரிக்கு அருகில் வைத்து தலையாரி சுரேஷ்குமார் லஞ்சப் பணத்தை பெற்றுள்ளார்.  லஞ்சம் பெறும்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவரை கையுடன் பிடித்தனர். பின்னர் அவர் தங்கியிருந்த அறையை மே  23-ஆம் தேதி சோதனை நடத்தியதில்



17 கிலோ சில்லறை நாணயங்கள். கவர் பிரிக்கப்படாத 10 புதிய சட்டைகள், வேட்டிகள், ஒரு சாக்கில் குடம்புளி,  பத்து லிட்டர் பாட்டில் தேன், பட்டாசுப் பாக்கெட்டுகள், கட்டுக்கட்டாக புதிய பேனாக்கள் என லஞ்சமாக வாங்கிய பல பொருள்களும் குவிந்து கிடந்துள்ளன.

 அதிர்ந்து போகும் அளவுக்கு அறை நிறைய கட்டுக்கட்டாக 2,000 ரூபாய் நோட்டுக்களும், 500 ரூபாய் நோட்டுக்களும் குவிந்து கிடந்துள்ளன. அதுமட்டுமல்லாது 17 கிலோ சில்லறை நாணயங்கள், சுமார் 45 லட்சம் ரூபாய்க்கான வங்கி டெப்பாசிட் ஆவணங்கள், ரூபாய் நோட்டுக்களாக முப்பத்தி ஐந்து லட்சத்து எழுபதாயிரம் ரூபாய் (ரூ 35,70,000) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 17 கிலோ நாணயங்களை எண்ணி கணக்கிட்டதில் சுமார் 9000 ரூபாய் வந்துள்ளது. வங்கி டெப்பாசிட் போன்ற ஆவணங்கள் 45 லட்சம் ரூபாய் மதிப்பு உள்ளதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரது சம்பளம் வரும் வங்கி கணக்கில் இருந்து அவர் பணமே எடுப்பது இல்லை எனவும், சம்பளம் வங்கிக் கணக்கில் சுமார் இருபது லட்சம் ரூபாய் இருந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுச்

சிக்கியுள்ளது லஞ்ச ஒழிப்புத் துறையை அதிர்ச்சியடையச் வைத்துள்ளது. சுரேஷ்குமார் திருச்சூரில் உள்ள விஜிலென்ஸ் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை  ஜூன் மாதம் 6- ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சுரேஷ்குமார் பாலக்கயம் கிராம நிர்வாக அலுவலகத்தில் தலையாரியாக அல்லது கிராம உதவியாளராக பணிக்கு வந்துள்ளார். ஒவ்வொரு பணிக்கும் 500 முதல் பத்தாயிரம் வரை பணம் பேரம் பேசி வாங்குவதாகவும், பணம் இல்லாதவர்களிடம் எதாவது பொருள் வாங்குவதாகவும் விசாரணையில் தெரியவந்தது. அப்படி எதுவும் கொடுக்காமல் இருந்தால் அந்தப் பணியை முடிக்காமல் மாதக்கணக்கில் இழுத்தடிப்பாராம். சுரேஷ் குமாரை கடந்த 23-ஆம் தேதியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்து கேரள வருவாய்த்துறை அமைச்சர் கே.ராஜன் கூறுகையில், "வில்லேஜ் அசிஸ்டென்ட் லஞ்சம் வாங்கி குவித்த விவகாரத்தை மிகவும் தீவிரமான பிரச்னையாகப் பார்க்கிறேன். எந்தவித ஊழலுக்கும் உடந்தையாக இருப்பதை அரசு அனுமதிக்காது. லஞ்சம், ஊழலுக்கான தண்டனையை இன்னும் கடுமையாக்க வேண்டும். லஞ்சம் பற்றி புகார் அளிக்க கட்டணம் இல்லா தொலைபேசி எண் உள்ளிட்ட வசதிகளை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும். லஞ்சத்தை வெளியே கொண்டுவர பொதுமக்களின் உதவி தேவை. மூன்று ஆண்டுகளாக ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் வில்லேஜ் அசிஸ்டெண்ட் உள்ளிட்டவர்கள் உடனடியாக இடம் மாற்றப்படுவார்கள்" எனத் தெரிவித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.