இலஞ்சமாக எது கொடுத்தாலும் வாங்கும் தலையாரி அறையை பார்த்து அதிர்ந்த லஞ்ச ஒழிப்புத் துறை
17 கிலோ சில்லறை நாணயங்கள். கவர் பிரிக்கப்படாத 10 புதிய சட்டை வேட்டிகள், ஒரு சாக்கில் குடம்புளி, பத்து லிட்டர் பாட்டில் தேன், பட்டாசு பாக்கெட்டுகள், கட்டுக்கட்டாக புதிய பேனாக்கள் என லஞ்சமாக வாங்கிய பல பொருள்களும் அவரது குவிந்து கிடந்து கிடந்தள்ளன. அவை பறிமுதல் செய்யப்பட்டது , லஞ்சப் பணம் அனைத்தும்
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மன்னார்க்காடு வட்டம் பாலக்கயம் கிராம நிர்வாக அலுவலகத்தில் சான்றிதழ் ஒன்று கேட்டு விண்ணப்பித்திருந்ததாகவும். அதற்காக கிராமத் தலையாரி சுரேஷ்குமார் 2,500 ரூபாய் லஞ்சமாக கேட்பதாகவும் ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் அளித்தார் பாதிக்கப்பட்டவர். லஞ்ச ஒழிப்புத்துறையினர் பினாப்தலின் இரசாயன பவுடர் தடவிய பணத்தை அந்த நபரிடம் கொடுத்தனுப்பி கிராம நிர்வாக அலுவலக தலையாரியான உதவியாளருக்கு லஞ்சமாக கொடுக்கும்படி கூறியுள்ளனர். ஒரு தனியார் கல்லூரிக்கு அருகில் வைத்து தலையாரி சுரேஷ்குமார் லஞ்சப் பணத்தை பெற்றுள்ளார். லஞ்சம் பெறும்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவரை கையுடன் பிடித்தனர். பின்னர் அவர் தங்கியிருந்த அறையை மே 23-ஆம் தேதி சோதனை நடத்தியதில்
17 கிலோ சில்லறை நாணயங்கள். கவர் பிரிக்கப்படாத 10 புதிய சட்டைகள், வேட்டிகள், ஒரு சாக்கில் குடம்புளி, பத்து லிட்டர் பாட்டில் தேன், பட்டாசுப் பாக்கெட்டுகள், கட்டுக்கட்டாக புதிய பேனாக்கள் என லஞ்சமாக வாங்கிய பல பொருள்களும் குவிந்து கிடந்துள்ளன.
அதிர்ந்து போகும் அளவுக்கு அறை நிறைய கட்டுக்கட்டாக 2,000 ரூபாய் நோட்டுக்களும், 500 ரூபாய் நோட்டுக்களும் குவிந்து கிடந்துள்ளன. அதுமட்டுமல்லாது 17 கிலோ சில்லறை நாணயங்கள், சுமார் 45 லட்சம் ரூபாய்க்கான வங்கி டெப்பாசிட் ஆவணங்கள், ரூபாய் நோட்டுக்களாக முப்பத்தி ஐந்து லட்சத்து எழுபதாயிரம் ரூபாய் (ரூ 35,70,000) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 17 கிலோ நாணயங்களை எண்ணி கணக்கிட்டதில் சுமார் 9000 ரூபாய் வந்துள்ளது. வங்கி டெப்பாசிட் போன்ற ஆவணங்கள் 45 லட்சம் ரூபாய் மதிப்பு உள்ளதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரது சம்பளம் வரும் வங்கி கணக்கில் இருந்து அவர் பணமே எடுப்பது இல்லை எனவும், சம்பளம் வங்கிக் கணக்கில் சுமார் இருபது லட்சம் ரூபாய் இருந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுச்
சிக்கியுள்ளது லஞ்ச ஒழிப்புத் துறையை அதிர்ச்சியடையச் வைத்துள்ளது. சுரேஷ்குமார் திருச்சூரில் உள்ள விஜிலென்ஸ் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஜூன் மாதம் 6- ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சுரேஷ்குமார் பாலக்கயம் கிராம நிர்வாக அலுவலகத்தில் தலையாரியாக அல்லது கிராம உதவியாளராக பணிக்கு வந்துள்ளார். ஒவ்வொரு பணிக்கும் 500 முதல் பத்தாயிரம் வரை பணம் பேரம் பேசி வாங்குவதாகவும், பணம் இல்லாதவர்களிடம் எதாவது பொருள் வாங்குவதாகவும் விசாரணையில் தெரியவந்தது. அப்படி எதுவும் கொடுக்காமல் இருந்தால் அந்தப் பணியை முடிக்காமல் மாதக்கணக்கில் இழுத்தடிப்பாராம். சுரேஷ் குமாரை கடந்த 23-ஆம் தேதியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்து கேரள வருவாய்த்துறை அமைச்சர் கே.ராஜன் கூறுகையில், "வில்லேஜ் அசிஸ்டென்ட் லஞ்சம் வாங்கி குவித்த விவகாரத்தை மிகவும் தீவிரமான பிரச்னையாகப் பார்க்கிறேன். எந்தவித ஊழலுக்கும் உடந்தையாக இருப்பதை அரசு அனுமதிக்காது. லஞ்சம், ஊழலுக்கான தண்டனையை இன்னும் கடுமையாக்க வேண்டும். லஞ்சம் பற்றி புகார் அளிக்க கட்டணம் இல்லா தொலைபேசி எண் உள்ளிட்ட வசதிகளை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும். லஞ்சத்தை வெளியே கொண்டுவர பொதுமக்களின் உதவி தேவை. மூன்று ஆண்டுகளாக ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் வில்லேஜ் அசிஸ்டெண்ட் உள்ளிட்டவர்கள் உடனடியாக இடம் மாற்றப்படுவார்கள்" எனத் தெரிவித்தார்.
கருத்துகள்