ஆகாய கங்கை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் மனோபாலா மகாதேவன் காலமானார்
அவருக்கு வயது 69, நாகர்கோவில் மருங்கூர் பகுதியை பூர்வீகமாகக் கொண்டவராவார்,40 திரைப்படங்களையும், 16 தொலைக்காட்சித் தொடர்களையும் 3 தொலைக்காட்சித் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். 175 திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நடித்த 1987 ஆம் ஆண்டில், ‘ஊர்காவலன்’ திரைப்படத்தை இயக்கினார்.
இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத் தன்மை கொண்டவர் மனோபலா. தமிழில் 700 படங்களுக்கு மேலாக குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
கடந்த ஒரு மாத காலமாகவே அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டிருந்ததற்காக சிகிச்சை எடுத்து வந்த நிலையில் உடல்நலக்குறைவால் அவர் காலமானார்.
கல்லீரல் பிரச்சனையில் சிகிச்சை எடுத்து வந்த நிலையில், சென்னையில் உள்ள தனது இல்லத்தில் அவர் காலமானார். நேற்று காலை அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
அவருக்கு தற்போது ஆஞ்சியோ சிகிச்சையும் அளிக்கப்பட்டது. பின்னர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில்
இன்று அவர் உடல் நலக்குறைவால் காலமானார். இவருக்கு குழந்தை இல்லை. எனவே, ஒரு மகனை தத்தெடுத்து அவரை சொந்த மகனாகவே வளர்த்துள்ளார்.
சமீபத்தில் அவருக்கு சிறப்பாக திருமணமும் செய்து வைத்தார். தற்போது அந்த மகன் வெளிநாட்டில் வசிக்கும் நிலை இயக்குநர், நடிகர், தயாரிப்பாளராகவும் வலம் வந்தவர் மனோபாலா. தமிழ்த் திரையுலகில் தவிர்க்க முடியாத இயக்குநர் ஹெச்.வினோத்தை அறிமுகப்படுத்தியவர்.
சதுரங்க வேட்டை போன்ற சென்சிட்டிவ் சப்ஜெக்ட்டை ஒரு புதுமுக இயக்குநரை நம்பி பண முதலீடு செய்யும் தைரியம் மனோபாலாவுக்கு இருந்ததைப் பார்த்து ஒட்டுமொத்த தமிழ் திரையுலகம் ஆச்சரியப்பட்டது
தற்போது யூட்யூப்களின் காலமாக மாறி விட்டதை உணர்ந்த மனோபாலா வேஸ்ட் பேப்பர் எனும் யூட்யூப் சேனலைத் தொடங்கி திரையுலகில் பிரபலங்களை சித்ரா லெட்சுமணன் போல பேட்டி எடுப்பதையும் இப்போது வழக்கமாக வைத்திருந்தார்.
அதில் தனது கடந்த கால அனுபவங்களையும் சுவாரஸ்யம் குறையாமல் தனக்கே உரிய பாணியில் பகிர்ந்து கொள்வதும் ரசிக்கும்படி இருக்கும்.
கருத்துகள்