நடிகர் சரத்பாபு காலமானார்
சில தினங்கள் முன் சரத்பாபு (வயது 71) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சில நாட்களுக்கு முன் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்த நிலையில், ஹைதராபாத்தில் நடிகர் சரத்பாபு உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சரத்பாபு செப்சிஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்டு, சில மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மதியம் காலமானார். அவரின் மறைவுக்கு திரை பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் சரத் பாபு, தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்த பிரபல நடிகையான ரமா பிரபாவை 1971-ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். ஆனால், 1988-ஆம் ஆண்டில் விவாகரத்து செய்த பின் நடிகர் எம்.என் நம்பியாரின் மகள் சினேகலதா தீட்சித்தை 1990 ஆம் ஆண்டில் திருமணம் செய்தார். ஆனால் 2011-ஆம் ஆண்டில் விவாகரத்தானது. இவருக்கு வாரிசுகள் இல்லை மேலும் தனது சகோதரர் பிள்ளைகளை வளர்த்து வந்தார்.
மனோபாலா உயிரிழப்பைத் தொடர்ந்து நடிகர் சரத்பாபுவின் உயிரிழப்பு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அவரது மறைவிற்கு திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.பிரபல நடிகர் திரு சரத் பாபுவின் மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
பிரபல நடிகர் திரு சரத் பாபுவின் மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது;
“திரு சரத்பாபு அவர்கள் பல துறை ஆளுமையாகவும் படைப்பாளியாகவும் விளங்கினார். தமது நீண்டகால திரைத்துறை வாழ்க்கையில் பல மொழிகளில் பிரபலமான பல பாத்திரங்களில் சிறப்பாக நடித்ததற்காக அவர் என்றும் நினைவுகூரப்படுவார். அவரது மறைவு துயரத்தை அளிக்கிறது. அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு இரங்கல்கள். ஓம் சாந்தி.”
கருத்துகள்