முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இங்கிலாந்தில் உள்ள இந்திய சமூகத்தினருடனான சந்திப்பின் போது துணை குடியரசுத்தலைவரின் உரை

இங்கிலாந்தில் உள்ள இந்திய சமூகத்தினருடனான சந்திப்பின் போது துணை குடியரசுத்தலைவரின் உரை (பகுதிகள்)


நண்பர்களே, இந்த வருகை எனக்கு என்றும் மறக்க முடியாததாக இருக்கும்.  இது நான் நீண்ட உரையை நிகழ்த்துவதற்கான சந்தர்ப்பம் அல்ல ஆனால் நான் ஒன்றை உறுதியாகச் சொல்வேன்- இந்தியா தனது புலம்பெயர்ந்தோரைப் பற்றி பெருமை கொள்கிறது. அவர்கள் பாரதத்தின் 24 x 7 தூதர்கள் ஆவர். இங்கு 1.7 மில்லியன் மற்றும் உலகம் முழுவதும் 32 மில்லியன் இந்தியர்கள் வாழ்கின்றனர்.

இந்த நேரத்தில் இந்தியா அனைத்து உலகளாவிய நிலைகளிலும் மிகுந்த செயல்பாடு கொண்ட ஒரு சனநாயக நாடு. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நிர்வாகமானது மனிதகுலத்தின் 1/6 பங்கை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மாற்றியமைத்திருப்பதைக் காணலாம்.

மக்களின் துன்பத்தைப் போக்குவதற்கும், சாமானியர்களுக்கு அதிகாரமளிப்பதற்கும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. முன்பு கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத உள்கட்டமைப்பு வளர்ச்சி என்பது இன்றைக்கு அடிப்படை உண்மையாக இருக்கிறது.

இந்தியாவில் 700 மில்லியன் இணையப் பயனர்கள் உள்ளனர். இதனால் வெளிப்படைத்தன்மையுடன் பணப் பரிவர்த்தனைகள் நிகழ்கின்றன. இதுவரை 110 மில்லியன் விவசாயிகள் வருடத்திற்கு மூன்று முறை பெற்ற ஊக்கத் தொகை ரூ. 2.2 லட்சம் கோடியை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக அவர்களின் வங்கிக்கணக்கில் பெற்றுள்ளனர்.

ஒவ்வொரு இளைஞரும் தனது ஆற்றலை முழுமையாக வெளிப்படுத்த  சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நிதிக் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. முத்ரா கடனுதவித் திட்டம் வேலை கொடுக்கும் இளைஞர்களை உருவாகியுள்ளது.

34 ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய கல்விக் கொள்கை உருவாகியுள்ளது.

கிராம அளவில், நகராட்சி மட்டத்தில், மாநில அளவில், மத்திய அளவில், கூட்டுறவு மட்டத்தில் அரசியலமைப்பு பொறிமுறைகளை அரசியலமைப்பு வழங்குகிறது. பாரதத்தில் இவை அனைத்தும் சிறப்பாகக் கட்டமைக்கப்பட்டுள்ளன. உலகில் உள்ள வேறு எந்த நாட்டிலும் இத்தகைய ஜனநாயகத்தை நீங்கள் காண முடியுமா?

இந்தியர்களாக நாம் பெருமைப்பட வேண்டும். நமது வரலாற்று சாதனைகளில் பெருமிதம் கொள்ள வேண்டும். உலகில் எந்த நாடு கோவிட் தொற்றுநோயை இவ்வளவு வெற்றிகரமாகச் சமாளித்ததாகக் கூற முடியும்? தடுப்பூசி டோஸ் ஒவ்வொரு இந்தியருக்கும்  இலவசமாக, சரியான நேரத்தில், அளவீடு செய்யப்பட்ட முறையில் வழங்கப்பட்டது. அதன் சான்றிதழானது ஸ்மார்ட்போனில் கிடைக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

எந்தவொரு தேசத்தின் வளர்ச்சிக்கும் அடிப்படையான உள்கட்டமைப்பு வளர்ச்சியைப் பாருங்கள். உலகத் தரம் வாய்ந்த விரைவுப் பாதைகள், மோட்டார் பாதைகள், விமானப் பரப்பு மற்றும் கிராம மட்டம் வரை நிச்சயமாக தொழில்நுட்பம் விரிவாக உள்ளது. ரயில் மார்க்கத்தைப் பொறுத்தவரை, முன்பு ராஜதானிகள் மற்றும் பிற ரயில்கள் இருந்தன, ஆனால் இப்போது வந்தே பாரத் உள்ளது.

இந்தியாவில் இப்போது எந்த கிராமத்திற்குச் சென்றாலும், தொழில்நுட்ப முன்னேற்றங்களைக் காணலாம். பாஸ்போர்ட் விண்ணப்பிக்க அவர்கள் வேறு எங்கும் செல்ல மாட்டார்கள். அவர்களின் கிராமத்திலேயே யாராவது அவர்களுக்காக அதைச் செய்வார்கள்.

பாரதம் சுதந்திரம் அடைந்த 75வது ஆண்டான “அமிர்த காலம்” முழுமையாகப் பயன்படுத்தப்பட்டு, ஒவ்வொரு மூலை முடுக்கிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சுதந்திரப் போராட்டத்தின் மாவீரர்களும், அறியப்படாத மாவீரர்களும் அடையாளம் காணப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். 2047ல் இந்தியா சுதந்திரம் அடைந்ததன் நூற்றாண்டை கொண்டாடும் போது இந்தியா எப்படி இருக்க வேண்டும்  என்பதற்கு உறுதியான அடித்தளம் போடப்பட்டுள்ளது.

தற்போது ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இருக்கிறோம். இன்னும் சில ஆண்டுகளில் மூன்றாவதாக இருப்போம். இந்த சாதனை சில ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் கனவுகளுக்கு அப்பாற்பட்டது. கடுமையாக உழைக்கும் ஒவ்வொரு இந்தியருக்கும், தொழிலாளிக்கும், விவசாயிக்கும், திறமையான அரசாங்கக் கொள்கைகளுக்கும், கொள்கைகளை வெளிப்படையாகவும் பொறுப்புடனும் நேர்மையாகச் செயல்படுத்தியவர்களுக்கும் இந்தப் பெருமை உரியதாகும்.

நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். எனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் ஏனெனில் இது இந்தியப் பிரதமரிடமிருந்து நான் கற்றுக்கொண்டப் பழக்கம். அவர் வாக்குறுதிகளை மிக வேகமாக நிறைவேற்றுவார். தேவைப்படும் வீடுகளுக்கு 170 மில்லியன் இலவச எரிவாயு இணைப்புகள் வழங்குவதன் மூலம் இது நிறைவேற்றப்பட்டுள்ளது. இலட்சக்கணக்கான வீடுகள் ஏழைகளுக்குக் கிடைத்து வருகின்றன, இலட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் பொதுத்துறையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. உள்கட்டமைப்பு வசதிகள் மிகக் குறுகிய காலத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த