முன்னால் முதல்வர் காலம்சென்ற செல்வி ஜெ.ஜெயலலிதாவிடம் தண்டணை வழங்கப்பட்ட ஊழல் வழக்கில் பறிமுதல் செய்த பொருட்கள்
அணைத்தும் கர்நாடக மாநில அரசின் கருவூலத்தில் இல்லையா என தற்போது வினா எழுகிறது. காலஞ்சென்ற முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்கள், கர்நாடக மாநில அரசின் கருவூலத்தில் இல்லை' என, நீதிபதி கூறியதால் பரபரப்பை எழுந்துள்ளது. மறைந்த தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் காலம்சென்ற செல்வி ஜெ.ஜெயலலிதா, சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இவ்வழக்கில் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட, விலை உயர்ந்த புடவைகள், சால்வைகள், செருப்புகள், உள்ளிட்ட பொருட்கள், கர்நாடகா மாநில அரசின் கருவூலத்தில் வைக்கப்பட்ட நிலையில் அவற்றை, 30 ஆண்டுகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். அதனால், அவற்றை பொது ஏலத்தில் விட்டு, அதில் கிடைக்கும் பணத்தை, கர்நாடகா மாநில அரசு கருவூலத்தில் சேர்க்க வேண்டும்' என, சமூக ஆர்வலரான நரசிம்மமூர்த்தி என்பவர், பெங்களூரு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையடுத்து, முன்னால் முதல்வர் காலஞ்சென்ற செல்வி ஜெ. ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விட, கிரண் ஜவளி எனும் அரசு வழக்கறிஞரை, கர்நாடக மாநில அரசு நியமித்த நிலையில்,
நரசிம்மமூர்த்தியின் மனுவை நீதிபதி மோகன் விசாரித்த போது, முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயராமன் மகளான தீபா சார்பில் ஆஜரான வழக்குறைஞர் சத்யகுமார், 'ஜெயலலிதாவின் சொத்துக்களை, அவரது வாரிசான தீபாவிடம் ஒப்படைக்க வேண்டும்' என கோரினார்.
அப்போது, நீதிபதி மோகன், 'சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் வாரிசுகளுக்குச் சேராது' என்றார். மேலும், உரிய முறையில் மனு தாக்கல் செய்து, நீதிமன்றத்தில் வாதிடும்படியும் அறிவுறுத்தினர். பின் 'மனுதாரர் ஏலத்தில் விடும்படி கேட்ட, ஜெ.ஜெயலலிதாவின் பொருட்கள் அரசு கருவூலத்தில் இல்லை. ஜெயலலிதாவிடம் இருந்து சில முக்கியமான பொருட்கள் மட்டுமே, பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. மீதமுள்ள பொருட்கள் பட்டியலில் மட்டுமே இணைக்கப்பட்டு உள்ளது' எனவும் நீதிபதி கூறினார். இதனால், பறிமுதல் செய்யப்பட்ட உண்மையான சொத்துக்கள் குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் பெற உள்ளதாக, நரசிம்மமூர்த்தி தகவல் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்