தொன்மையான கலாச்சாரங்களில் நாங்கள் தலையிட முடியாதென
உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. ஜல்லிக்கட்டு, தமிழ்நாட்டின் கலாச்சாரத்தோடு ஒருங்கிணைந்தது, தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது, மாநில அரசு கலாச்சாரமென சட்டமியற்றியுள்ளது.
நாங்கள் அதை ஏற்றுக் கொள்கிறோம். அதை மாற்ற விரும்பவில்லை. அதனால் ஜல்லிக்கட்டுக்குத் தடை இல்லையென உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கூறியது.
மாநில சட்டமன்றத்தின் முடிவை, அதன் பார்வையை நாங்கள் எதிர்க்க மாட்டோம், மேலும் இது மாநிலத்தின் கலாச்சார பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும். தொன்மையான ஒரு கலாச்சாரம் இது என சட்டமன்றம் அவசரச் சட்டத்தில் முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டுக் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜல்லிகட்டு போட்டி தமிழ்நாட்டின் பாரம்பரிய, கலாச்சாரம் என மாநில அரசு கருதினால் அதில் நீதிமன்றத்துக்கு மாற்றுக் கருத்திருக்க முடியாது.
அப்படித் தலையிடுவதாக இருந்தாலும் அதில் மாநில சட்டசபை முடிவு எடுத்த நிலையில் அதில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது, என ஜல்லிக்கட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.இந்திய உச்ச நீதிமன்றம்
18 ஆம் தேதி மே மாதம் , 2023 அன்று இந்திய விலங்குகள் நல வாரியம் மற்றும் யூனியன் ஆஃப் இந்தியா வழக்கில் ஜல்லிக்கட்டுக்கு சட்டப்பூர்வ ஆதரவாக
அமர்வு நீதிபதிகள் கேஎம் ஜோசப், அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ஹிருஷிகேஷ் ராய், சிடி ரவிக்குமார் ஆகியோர் வழங்கிய தமிழ்நாட்டின் பாரம்பரிய கலாச்சார வீர விளையாட்டுக்கு ஆதரவாகத் தீர்ப்புரை அறிக்கையிடத்தக்கதாக வெளிவந்தது அது அணைவராலும் பாராட்டைப் பெறுகிறது
இந்திய உச்ச நீதிமன்றத்தில்
சிவில் அசல் அதிகார வரம்பு
ரிட் மனு (சிவில்) எண். 2016 / 2023
விலங்குகள் நல வாரியம்
இந்தியா & பலர் . ..மனுதாரர்கள்
எதிராக
யூனியன் ஆஃப் இந்தியா & ஏஎன்ஆர். ..எதிர்மனுதாரர்கள்
உடன் அசல் மனு (சிவில்) எண்.6/ 2018
அசல் மனு (சிவில்) எண்.10 /2018
சிவில் மேல்முறையீடு எண்..... 2023
(சிறப்பு விடுப்பு மனு (சிவில்) எண் 3528/ 2018)
ரிட் மனு (சிவில்) எண். 1193 /2017
ரிட் மனு (சிவில்) எண். 1152/2018 ரிட் மனு (சிவில்) எண். 24 /2016
ரிட் மனு (சிவில்) எண். 25 / 2016
ரிட் மனு (சிவில்) எண். 26 / 2016
ரிட் மனு (சிவில்) எண். 27 / 2016
ரிட் மனு (சிவில்) எண். 88/2016
ரிட் மனு (சிவில்) எண். 1011/2017
நிதி அஹுஜா
ரிட் மனு (சிவில்) எண். 1059/2017
நாள்: 18. 05. 2023.
ரிட் மனு (சிவில்) எண். 1188/2017
60 / 2021 வழக்கு மாற்றப்பட்டது
தீர்ப்பு
அனிருத்தா போஸ், ஜே.
2018 இன் படி சிறப்பு விடுப்பு மனு (சி) எண்.3528 இல் வழங்கப்பட்ட தீர்ப்பு.
ஜல்லிகட்டு நடத்துவதத்கான தமிழ்நாடு அரசின் அவசரச் சட்டம் செல்லும் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு வைத்த வாதத்தில், காளைகளுக்கு வலி, வேதனை இல்லை. இருக்கிறது என்றே வைத்துக்கொள்ளுவோம். மற்ற விலங்குகளை வைத்து போட்டிகள் நடப்பது இல்லையா? பல விலங்குகளை வைத்து வேலைகளைச் செய்கிறார்களே? அது தவறு இல்லையா?ஜல்லிக்கட்டு என்பது கேளிக்கை கிடையாது. இதில் காளைகளின் வீரத்தைக் காட்டுகிறார்கள். காளைகள் ஏன் முக்கியம் என்பதை காட்டுகிறது. குதிரைகளை மட்டும் போட்டிகளில் பயன்படுத்துகிறார்களே? அதில் என்ன தவறு இருக்கிறது. குதிரைகளை பயன்படுத்துவதை இவர்கள் ஏன் எதிர்ப்பதில்லை? காளைகளுக்கு சாராயம் ஊற்றப்படுகிறது கண்களில் மிளகாய் பொடி தூவுகிறோம் என்றெல்லாம் சொல்கிறார்கள். காளைகள் இவர்களின் குடும்பத்தில் பிள்ளைகள் போல. பெற்ற பிள்ளைகளை யாரவது இப்படி நடத்துவார்களா?
இந்த ஜல்லிக்கட்டு காரணமாகவே நாட்டுக் காளைகள் உயிர் வாழ்கின்றன. அந்தக் காளைகளுக்கு நோய்கள் வரலாம். ஆனால் ஜல்லிக்கட்டு காரணமாக காளைகளை இவர்கள் சிறப்பாக பாதுகாக்கிறார்கள். இல்லை யென்றால் வெளிநாட்டுக் காளைகள் அந்த இடத்தைப் பிடித்துவிடும். ஜல்லிக்கட்டு தான் நாட்டுக் காளைகளைப் பாதுகாக்கிறது. சர்க்கஸ் போல ஜல்லிக்கட்டு ஒன்றும் கேளிக்கை கிடையாதென்பது குறிப்பிடத்தக்கது.ஜல்லிக்கட்டு சட்ட திருத்தத்தை இயற்றியது சீனிவாசன் ரத்தினசாமி !
இன்று அது உச்ச்நீதி மன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது !
கருத்துகள்