திருட்டுத் திருமணம் செய்து வைக்கும் வழக்குரைஞர்கள் மீது பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
சுய மரியாதை எனும் திருட்டுத் திருமணம் செய்து வைக்கும் வழக்குரைஞர்கள் மீது பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
இராமநாதபுரம் மாவட்டம் மோர் பண்ணை இளவரசன், சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த ஆள்கொணர்வு மனுவில் : மோர் பண்ணையைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்த நிலையில் அவருக்கு 16 வயதில் அவருடைய தாய்மாமாவுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தது குறித்து அப்போது மாவட்ட குழந்தைகள் நல மையத்துக்கு புகார் அளித்தேன். அதிகாரிகள் அனைவரையும் அழைத்து விசாரித்து சிறுமிக்கு திருமணம் செய்து வைக்கக் கூடாது என பெற்றோரிடம் எழுதி வாங்கி அனுப்பினர். இருப்பினும் அதை மீறி அவரை பிளஸ் 1 படிப்பை பாதியில் நிறுத்தி, அவரது தாய் மாமாவுக்கு திருமணம் செய்தனர். அதனால் அவர் வீட்டை விட்டு வெளியேறி எனது வீட்டுக்கு வந்து என்னை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்தார்.
நானும், அவரும் திருப்பூரில் வழக்குறைஞர் ஒருவர் நடத்தி வரும் அம்பேத்கர் சுயமரியாதை திருமண மையத்தில் சுயமரியாதைத் திருமணச் சட்டம், இந்து திருமணச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்தோம். இந்நிலையில், பெண்ணை நான் கடத்தியதாக அவரது பெற்றோர் திருப்பாலைக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணைக்கு இருவரும் ஆஜரானோம். பின்னர் எனது மனைவியை, அவரது பாட்டி இருப்பதால் அவரைப் பார்த்துவிட்டுச் செல்லுமாறு கூறி அழைத்துச் சென்றனர். அதன் பின் அவரை வீட்டைவிட்டு அனுப்பாமல் தனி அறையில் சிறை வைத்தனர். இப்போது எனது மனைவியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே, எனது மனைவியை மீட்டு ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும். என அவர் தாக்கல் செய்த
இந்த மனு நீதிபதிகள் தண்டபாணி, விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்த போது. அரசு வழக்கறிஞர் ஆஜராகி வாதிடுகையில், ‘சம்பந்தப்பட்ட பெண்ணைக் கடத்தியதாக ஏற்கெனவே ஒருமுறை புகார் அளிக்கப்பட்டது. அப்போது அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்திய போது தன்னை யாரும் கடத்தவில்லை, என்றார். இதனால் அவரை பெற்றோருடன் காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.
குழந்தைத் திருமணமாக இருந்தாலும், அந்தத் திருமணத்தை இரத்து செய்த பிறகே மறுமணம் செய்ய முடியும் என்றார். அதையடுத்து ஆவணங்களைப் பார்வையிட்ட நீதிபதிகள், வழக்கறிஞர்கள் சுயமரியாதைத் திருமணம் செய்து வைக்க முடியாது என உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.
அதனால் மனுதாரருக்கு சுய மரியாதைத் திருமணம் செய்து வைத்த வழக்கறிஞருக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தி அவர் மீது தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கறிஞர்கள் வேறு யாரேனும் இவ்வாறு செயல்படுவது தெரியவந்தால் அவர்கள் மீதும் பார் கவுன்சில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
கருத்துகள்