யூனியன் பேங்க் ஆப் இந்தியா நூற்றுக் கணக்கான பெண் பணியாளர்களை மாறுதல் என்ற பெயரில் தொலை தூர மையங்களுக்கு மாற்றியுள்ளது.
நிதி அமைச்சகத்தின் நிதிச் சேவை துறை சுற்றறிக்கை எண் 4/9/1/2014/ IR GOI/MoF/DFS/ 08.08.2014 பெண் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இட மாற்றல், பணியிடம் குறித்து தெளிவான வழிகாட்டல்களை தந்துள்ளது. அவர்களின் விருப்பம், பெற்றோர் மற்றும் இணையர் இருப்பிடங்கள் ஆகியன பொருத்து பணியிடங்கள் தீர்மானிக்கப்பட வேண்டுமென்று கூறியுள்ளது.
ஆனால் யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கி நிர்வாகம் இந்த வழி காட்டுதல்களை அப்பட்டமாகவா மீறியுள்ளது. இம்மாற்றல்களில் வங்கியின் நலனும் கருத்தில் கொள்ளப்படவில்லை. சீரான அணுகுமுறையும் இல்லை. இது வங்கி அதிகாரிகள் மத்தியில் பெரும் மனச் சோர்வை உருவாக்கி உள்ளதென்பதும்
அந்த மறுதல் உத்தரவுகளை திரும்பப் பெற சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு வலியுறுத்தி வங்கித் தலைவர் ஏ.மணிமேகலைக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சார்பில் கடிதம் வாயிலாக வேண்டுகேள் விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் .
கருத்துகள்