தமிழ்நாடு ஆதரவில்லாத விலங்குகளைப் பாதுகாக்க ரூபாய்.20 கோடியில் வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்- திட்டம்
வைத்தேனோ! சிவனடியாரைச் சீறி வைதேனோ!
தவஞ்செய் வோரைத் தாழ்வு சொன்னேனோ!
சுத்த ஞானிகளைத் தூஷணஞ் செய்தேனோ!
தந்தைதாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ!
தெய்வ மிகழ்ந்து செருக்கடைந்தேனோ!
என்ன பாவம் செய்தேனோ! இன்னதென் றறியேனே!
(மநு முறை கண்ட வாசகம்)
- வள்ளலார்
முதல்வர் மு.க.ஸ்டாலினால் 2023 ஜனவரி மாதம் 15 ஆம் தேதிப தொடஙஸகிவைத்தார்
கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் மக்களின் பராமரிப்பற்றுக் கைவிடப்பட்ட நாட்டு விலங்குகளைக் காக்கும் வகையில் "வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்" எனும் புதிய திட்டம் இதில்
மொத்தம் 2 கோடியே 14 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதில் , முதல் தவணையாக 88 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை முதல்-அமைச்சர் அப்போது வழங்கினார்.
அந்த நிகழ்வுக்கு வள்ளுவர் கோட்டத்தில் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது வள்ளலாரின் 200-வது பிறந்த ஆண்டை முன்னிட்டு, ஆதரவற்ற, கைவிடப்பட்ட காயமடைந்த வளர்ப்புப் பிராணிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளைப் பராமரிக்கும் அரசுசாரா நிறுவனங்கள், சேவை செய்யும் தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிப்பதற்கு 20 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் "வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்" என்னும் புதிய திட்டம் பிராணிகள் துயர் துடைப்பு சங்கம், பிராணிகள் நலன் தொடர்பான அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் விலங்குகள் நல அமைப்புகளுக்கு முதல் தவணை நிதியுதவியாக 88 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் முதல் தவணை நிதியுதவியை வழங்கினார்.
கைவிடப்பட்ட விலங்குகளை காக்கும் வகையில், தமிழ்நாடு அரசின் 2022-2023-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" என்று பல்லுயிர் காத்த வடலூர் வள்ளலாரின் 200-வது பிறந்த ஆண்டை முன்னிட்டு, ஆதரவற்றுக் கைவிடப்பட்ட, காயமடைந்த வளர்ப்புப் பிராணிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளைப் பராமரிக்கும் அரசுசாரா நிறுவனங்கள், சேவை நிறுவனங்களுக்கு உதவியளிப்பதற்கு "வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்" என்னும் புதிய திட்டம் இது வரும் நிதியாண்டில் தொடங்கப்படும். இத்திட்டத்திற்காக ரூபாய்.20 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று முறையான அறிவிப்பு வெளியிடப்பட்டதன்படி, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் கைவிடப்பட்ட விலங்குகளை காக்கும் வகையில் "வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்" திட்டத்தில், ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட காயமடைந்து தெருவில் சுற்றி திரியும் நாய்கள் மாடுகள் குதிரைகள் கழுதைகள் பூனைகள் உள்ளிட்டபிராணிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளுக்கு உணவுகள் மற்றும் மருத்துவச் சிகிச்சையளித்தல், காயமடைந்த மற்றும் நோய்வாய்ப்பட்ட விலங்குகளுக்கு அவசரச் சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக பிராணிகள் துயர் துடைப்பு சங்கம், விலங்குகள் நல அமைப்புகள் பிராணிகள் நலன் தொடர்பான அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு
மருத்துவ அவசர சிகிச்சை ஊர்தி (ஆம்புலன்ஸ்) கொள்முதல் செய்வதற்கு நிதியுதவி அளித்தல், ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட, காயமடைந்து தெருவில் சுற்றி திரியும் விலங்குகளுக்கு உறைவிடம் கட்டுவதற்கு நிதியுதவி அளித்தல், தெரு நாய்கள் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் வெறிநோய் தடுப்பூசி செலுத்துவதற்கு நிதியுதவி அளித்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.விலங்குகளுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதி வழங்கிடவும், உறைவிடம் மற்றும் அவசர ஊர்தி சேவைக்காகவும், நீலகிரி -இந்தியா புராஜக்ட் பார் அனிமல் பண்ட் நேச்சர், சென்னை விலங்குகள் பராமரிப்பு அறக்கட்டளை, சென்னை மெட்ராஸ் விலங்குகள் மீட்பு சங்கம், சென்னை பிரித்வி விலங்குகள் நல சங்கம் மற்றும் சென்னை பைரவா பவுண்டேஷன்,பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் இழுப்பூர் ஆகிய 15 தொண்டு நிறுவனங்களுக்கு மொத்தம் 2 கோடியே 14 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதல் தவணையாக 88 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை பிரித்து அப்போது Best-selling வழங்கினார்.
அதையடுத்து தற்போது நந்தனம் கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனர் அலுவலகத்தில் நடந்த நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின் படி , "வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்" என்னும் புதிய திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதி சேவைக்காக இரண்டாம் கட்டமாக 15 அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு நிதியினை காசோலையாக அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் வழங்கினார். உணவு கிடைக்காமல் அல்லல் படும் கால்நடைகளின் துன்பத்தை தணிக்க சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் அனைத்து மாவட்ட நிர்வாகங்கள், கால்நடை பராமரிப்பு மண்டல இணை இயக்குநர்கள், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் மற்றும் இதர விலங்கு நல அமைப்புகள், தனி நபர்கள் மூலம் சென்னை பெருநகரம் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது இவ்விலங்குகளுக்கு ஊரடங்கு காலத்தில் உணவு தொடர்ந்து கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் தமிழ்நாடு பிராணிகள் நல வாரியமும் செயல்படுகிறது. மேலும் சென்னை உயர்நீதி மன்றத்தால் ஒரு குழு அமைக்கப்பட்டு கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள் துறை மூலம் ஆதரவற்ற நாய்கள், பூனைகள், குதிரைகளுக்கு தேவைப்படும் தீவனப் பொருட்களை கொள்முதல் செய்து விலங்குகள் நல அமைப்பின் மூலம் விநியோகிக்க அறிவுறுத்தப்பட்டது.
முதற்கட்டமாக சுமார் ரூ.3 இலட்சம் மதிப்பீட்டில் அரிசி-1250 கிலோ, நாய் உலர் தீவனம்-220 கிலோ, 525 கிலோ குதிரைகளுக்கான தீவனம், ஆவின் நிறுவனத்தின் மூலம் 625 கிலோ பால் பவுடர் முதலானவை கால்நடை பராமரிப்புத்துறை இயக்குநரால் மேற்கண்ட விலங்குகள் நல ஆர்வலர்கள் மற்றும் விலங்குகள் நல அமைப்புகளுக்கு (TNAWB) வழங்கப்பட்டதன் மூலம் சுமார் 15 நாட்களுக்கு 1000 க்கும் மேற்பட்ட விலங்குகள் பயன்பெறும். கொரோனா ஊரடங்கு காலத்தில் இத்தகைய பணிகள் தங்கு தடையின்றி நடைபெற கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள் துறை மூலம் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசு அப்போது தெரிவித்துள்ள நிலையில் மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை மாநில அமைச்சர் . அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன் ""வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்"" என்னும் புதிய திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதி சேவைக்காக இரண்டாம் கட்டமாக அதே பதினைந்து நிறுவனங்களுக்கு வழங்கினார்.
கருத்துகள்