கர்நாடகா மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் நேற்று மே மாதம் 8-ஆம் தேதி மாலையுடன் முடிவுற்ற நிலையில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி மீதான அதிருப்தி தேர்தலன்று பிரதிபலிக்கும்.
எனவும் மக்கள் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி மீதான அதிருப்தி காரணமாக பாஜக தோல்வியைச் சந்திக்கும் நிலை வரும் என பெரும்பகுதி மக்களும், பிரதமர் நரேந்திர மோடி பாஜக ஆட்சியில் செயல்படுத்தப் படும் பல்வேறு நலத்திட்டங்கள் வாயிலாக பலனடைந்தோர் வாக்குகளைக் குறிவைத்துத் தான் பாரதிய ஜனதா கட்சி அங்கு பிரச்சாரம் செய்துள்ளது. எனவே பாஜக வெற்றி உறுதி என அக் கட்சியினரும் கூறி வரும் நிலையில்
கடந்து சென்ற 2013 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை சித்தராமையா தலைமையில் நடந்த காங்கிரஸ் ஆட்சியின் மீது பெரிய அதிருப்தி இல்லாத நிலையிலும் அங்கே 2018 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்து ஆட்சியை இழந்ததும் .
2018 ஆம் ஆண்டில் கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தும் சில முக்கிய தரவுகள்
காங்கிரஸ் கட்சி 221 தொகுதிகளில் போட்டியிட்டு 1,39,32,531 (38.04 சதவீதம் ) வாக்குகள் பெற்று 80 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 13 தொகுதிகளில் ஜாமீன் தொகையை இழந்தது.
மதசார்பற்ற ஜனதாதளம் 200 தொகுதிகளில் போட்டியிட்டு 67,26,668 (18.36 சதவீதம்) வாக்குகள் பெற்று 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 107 தொகுதிகளில் ஜாமீன் தொகை இழந்தது.
பதிவான மொத்த வாக்குகள் 3,66,27,978
சுயேட்சை வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் 14,38,335 (3.93 சதவீதம் ) யாருக்கும் ஆதரவில்லை
நோட்டா 3,13,696 (0.86 சதவீதம்)
பாரதிய ஜனதா கட்சி 223 தொகுதிகளில் போட்டியிட்டு 1,32,68,284 (36.22 சதவீதம் ) வாக்குகள் பெற்று 104 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
67 தொகுதிகளில் இரண்டாமிடமும்.
16 தொகுதிகளில் மூன்றாமிடமும், வந்து டெபாசிட் வாங்கியது.
36 தொகுதிகளில் ஜாமீன் தொகையை இழந்தது. இப்போது கர்நாடக மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி போட்டியில் இருப்பது 172 தொகுதிகளில் மட்டுமே.
அதன் சட்ட மன்ற உறுப்பினர்கள் தற்போது 113 நபர்களில் முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, ஜகதீஸ் ஷெட்டர், துணை முதல்வர் ஈஸ்வரப்பா என பல முக்கியத் தலைகளுக்கும் மேலும் பலருக்கும் போட்டியிடத் தொகுதிகள் மறுக்கப்பட்டது. தற்போது போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் மீது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி காரணமாக பாதிக்கு பாதி தோற்பது நிச்சயம் என்பதே அங்கு அதிகம் பேசி விவாதிக்கப் படுகிறது . ஆகவே பாரதிய ஜனதா கட்சி 65 லிருந்து 70 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்பது தான் மக்கள் ஆய்வு கள எதார்த்தம். கர்நாடக மாநிலத்தில் பிரச்சாரம் செய்யும் முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் மக்கள் கூட்டத்தில் பேசும் போது முதலில் கேட்பது "இந்த வங்கிகளின் பெயர்கள் எல்லாம் உங்களுக்கு நினைவிருக்கிறதா?
1. விஜயா வங்கி, 2. கார்ப்பரேஷன் வங்கி, 3. சிண்டிகேட் வங்கி, 4. கனரா வங்கி, 5. ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர், அவைகள் அனைத்தும் ஒரு காலத்தில் கன்னடர்களின் கைகளில் தொழில் முனைவோர்க்கு மரியாதை செலுத்தியவர்கள்.
இந்த வங்கிகளின் பணி கலாச்சாரம் மற்றும் உள்ளூர் அறிவு ஆகியவை கர்நாடக மக்களின் நிதித் தேவைகளுடன் சிறந்த இணைப்பை அப்போது உறுதி செய்தன.
துரதிர்ஷ்டவசமாக அவைகள் தற்போது இல்லை , தற்போதய ஏழைகளை வெறுத்து ஒதுக்கும் அரசாங்கத்திற்கு நன்றி, அவை இனி சுதந்திரமான நிறுவனங்களாகவும் இல்லை. என பொது வெளியில் காங்கிரஸ் கட்சி பேசி வரும் நிலையில்,
மே மாதம் பத்தாம் தேதி பாரதிய ஜனதா கட்சிவை வீழ்த்தாவிட்டால் வங்கி நந்தினிக்கும் இதே நிலை தான் ஏற்படும். எனவும் கன்னடர்கள் மற்றும் கர்நாடகாவின் நலன்களைப் பாதுகாக்க காங்கிரஸ் கட்சி உத்தரவாதம் அளிக்கிறது". எனப் பேசத் தவறவில்லை,
இதில் கோடிக்கணக்கில் பணத்தை வாரியிறைத்து தான்பாஜக பேரணிகள் ரோட் ஷோ மற்றும் கூட்டங்கள் நடத்தினர். இதெல்லாம் கர்நாடக மாநிலம் முழுவதுமுள்ள தொண்டர்கள் மற்றும் தமிழ்நாடு உட்பட மற்ற மாநிலங்களிலிருந்து வந்தவர் கூட்டம். இதனால் தொகுதி வாரியாக பூத் வாரியாக விழும் வாக்குகளில் பெரிய மாற்றம் எதுவும் இருக்காது. என்பதே கள நிலவரம்.
கருத்துகள்