சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி அருகில் தனியாா் பேருந்து மாசானியம்மன் கவிழ்ந்து பேருந்து உதவியாளா் பலி 20 நபர்கள் காயம்
சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி அருகில் சாலையோரத்தில் தனியாா் பேருந்து மாசானியம்மன் நேற்று கவிழ்ந்ததில் நடத்துநருக்கு உதவியாக வரும் நபர் உயிரிழந்தாா்.அதில் 20 பயணிகள் காயமடைந்தனா். திருப்புவனத்திலிருந்து காரைக்குடி நோக்கி தனியாா் பேருந்து வந்து கொண்டிருந்தது. மானாமதுரையைச் சோந்த செல்வம் என்ற ஓட்டுனர் பேருந்தை இயக்கியதில் நடத்துநராக இளையான்குடி கருப்பையாவும், அவருக்கு உதவியாக மதுரை சிவா (வயது 22) பணியிலிருந்தனா்.
பேருந்தில் 48 போ பயணம் செய்த நிலையில், பேருந்து குன்றக்குடியைக் கடந்து காரைக்குடி நோக்கி வந்து கொண்டிருந்தது. பகுதியில் காரைக்குடி- மதுரை நான்கு வழிச் சாலைக்கான பணிகள் நடைபெற்று வருவதால் மாற்றுப் பாதையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தது. அந்தப் பகுதியை வேகமாக கடக்க முயன்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்ததில் நடத்துநரின் உதவியாக வந்த சிவா என்ற நபர் பேருந்துக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும் பேருந்தில் பயணம் செய்த 20 போ காயமடைந்தனா். தகவலறிந்ததும் தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியா் பால்துரை, காரைக்குடி வட்டாட்சியா் தங்கமணி, காரைக்குடி காவல் துறை உதவிக் கண்காணிப்பாளா் ஸ்டாலின், குன்றக்குடி காவல் நிலைய ஆய்வாளா் தேவகி, மற்றும் காவலர்கள் அங்கு வந்து சிவாவின் சடலத்தை மீட்டு மருத்துவக் கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா். காயமடைந்தவா்களை மீட்டு காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.
கருத்துகள்