முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் ஆலய கும்பாபிஷேகம் 22 வருடத்திற்குப் பின் சிறப்பாக நடந்தது

சங்ககாலம் பாரி ஆண்ட பரம்புமலை சாரந்த முன்நூறு ஊர்களில் முதலூர் சிங்கம்புணரி 1700 ல் இரமநாதபுரம் சேதுபதி சமஸ்தானம்




பின் மகள் சிவகங்கை முதல் இராணி அகிலாண்டேஸ்வரி நாச்சியாருக்கு மன்னர் கிழவன் இரகுநாத சேதுபதி வழங்கிய 108 கோவில் கொடை அப்போது மதுரை ஜில்லா அமராவதி தாலுகா பின் இராமநாதபுரம் ஜில்லா திருப்புத்தூர் தாலுகா பின் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மாவட்டம் பின் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி  சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்குட்பட்ட தற்போது இராணி டி எஸ். கே .மதுராந்தகி நாட்சியார் ஆளுகைக்கு உட்பட்ட அருள்மிகு சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் சிங்கம்புணரி பெருங்கிராம மக்களின் காவல் தெய்வம் பண்டைய சோழ பாண்டிய நாடுகளின் எல்கையான கேரள சிங்கவளநாடாக  விளங்கிய பாண்டியநாட்டின் வால் பகுதி தான்  எல்லை காவல் தெய்வம் பிடாரி அம்மன் ஆட்சி செய்யும் சிங்கம்புணரியில் அமைந்துள்ள கோவிலில் சைவமும், வைணவமும் கலந்த கையனார் எனும் அய்யனார் சிறப்பு  பொன்னமராவதி பகுதியில் நடந்த சோழ, பாண்டிய போருக்குப் பின்னர் பொது ஆண்டு 13-ஆம் நூற்றாண்டில் மன்னர் கூன்பாண்டியன் காலத்தில் கோவில் கட்டப்பட்டதாக கல்வெட்டு  வரலாறு தெரிவிக்கிறது.16 ஏக்கர் நிலப் பரப்பில் அமைந்துள்ள கோவிலில் சிங்கம் மீதமர்ந்த பிடாரி அம்மன், சேவுகப்பெருமாள் அய்யனார், தான் தோன்றீசுவரர், அடைக்கலம் காத்த அய்யனார், கன்னி மூல கணபதி, முருகன், மேலும் நவக்கிரக்கங்களுக்குத் தனிக் கருவறைகளும், தனி விமானங்களும் கோவிலில் அமைந்துள்ளது,

கோவிலில் கடந்த வாரம்  கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

அருள்மிகு சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில் நடைபெறும் வைகாசித் திருவிழா 10 நாட்கள் பிரமோற்சவத்துடன் ஆண்டு தோரும் சிறப்பாக நடக்கும் விழாவை யொட்டி ஒவ்வொரு நாளும் சுவாமி வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். 5-வது நாள் திருவிழாவில் நடக்கும் திருக்கல்யாண உற்சவமும், 6-வது நாள் கழுவன் திருவிழாவும், 9-ஆம் நாள் தேர்த்திருவிழாவும், 10-ஆம் நாள் நடைபெறும் பூப்பல்லக்கு உற்சவமும் பெருமை சேர்க்கும் விழாவாக நடைபெறுகிறது.

 தேர்த்திருவிழாவில் சுற்று வட்டாரப் பகுதி கிராம மக்கள் வந்து சேர்ந்து ஒற்றுமையுடன் கலந்துகொண்டு வடம் பிடிக்கும் அழகே தனி. குறிப்பாக தேர் நிலையடைந்ததும்  இப்பகுதி மக்கள்  லட்சக்கணக்கான தேங்காய்களை தேரடிப் படிக்கட்டுகளில் உடைத்து  நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும் பகுதி மக்கள் காலகாலமாக இக்கோவில் திருவிழா நாட்களில் தங்கள் வீட்டில் விசேஷங்கள் எதுவும் நடத்த மாட்டார்கள்.  ஐந்து நிலை நாடு சார்ந்த 

முக்கிய முடிவுகள் எடுக்கும் சந்தி வீரன் கூடம் இங்குள்ள மும்மூர்த்திக்கு சேவுகப்பெருமாள், சேவுகமூர்த்தி, சேவுகராயன், சேவுகராஜன், சேவுகன், சேதுபதி என பல திருநாமங்களில் போற்றப்படுகிறார். அரிஹர புத்திரராக விளங்கும்  சேவுகமூர்த்தியின் பெயரில் வைணவ திருநாமமான பெருமாள்  பெயர் கொண்ட போதிலும் சைவக் கடவுளாகவே போற்றப்படுகிறார்

கோவிலுக்கு பக்தர்கள் மாடுகளை காணிக்கையாக நேர்ந்து விடுவது பல ஆண்டுகளாக வழக்கமாக இருந்து வருகிறது. அதுபோல ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் முதலாவது சிங்கம்புணரி மாடு தான் மாரியாதை பெற்று அவிழ்க்கப்படும் பழக்கம் இன்றும் உண்டு இவ்வாறு பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள் காணிக்கையாக நேர்ந்து விடப்பட்டு அந்த மாடுகள் இந்தப் பகுதியில் உள்ள வீதிகளில் சுதந்திரமாகச் சுற்றி வரும்போது அந்த மாட்டிற்கு பழம், உள்ளிட உணவுகளை அப்பகுதி மக்கள் பாசத்துடன் கொடுப்பது வழக்கம். மதுரை பாண்டிய நாடு மற்றும் சுற்று வட்டார பகுதியில் நடக்கும்  மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகளில் இந்தக் கோவில் காளைகளுக்குத்தான் முதல் மரியாதை செலுத்தப்படுவது பழங்காலம் தொட்டு இன்று வரை வழக்கத்திலிருந்து வருகிறது.

நேர்த்திக்கடனாக விடப்படும் மாடுகள் கோசாலை மூலம் பாதுகாக்கப்படுகிறது. சிங்கம்புணரியில் உள்ள சந்திவீரன் கூடத்தில் சேவுகபெருமாள் அய்யனார் உருவமற்ற சொரூபமாக உள்ளார்.  வைகாசி விசாகச் திருவிழா நடத்தும் பொருட்டு மக்களிடம் காணிக்கை பெற கிராமத்திற்கு வரும் உற்சவ விநாயகர் இங்குள்ள சந்திவீரன் கூடத்தில் பத்து நாட்கள் தங்கியிருப்பார்.

அந்த 10 நாட்களும் கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்ட சுயம்பாக நெய்வேத்தியம்  விநாயகருக்குப்  படைக்கப்படும். பத்து  நாட்களுக்குப் பின்னர் கோவிலுக்கு விநாயகர் திரும்பியவுடன் திருவிழா முறைப்படி தொடங்கும். இந்தக் கூடத்தில் விநாயகர் வீற்றிருந்து அருள்பாலிக்கும் பத்து நாட்களும் அவருடன் அருள்மிகு சேவுகபெருமாள் அய்யனார் தங்கியிருந்து அருள்பாலிப்பதாக ஐதீகம் உண்டு.

மற்ற நாட்களில் இந்தக் கூடத்திற்கு வரும் பக்தர்கள் சேவுகமூர்த்தி அய்யனாரை  மட்டும் வணங்குவார்கள். சந்திவீரன் கூடத்தில் கிராமத்தினர் ஒன்றாகக் கூடி  முடிவுகளை எடுக்குமிடமாகவும் உள்ளது. இங்கு உருவமற்ற சொருபமாய் விளங்கும் சேவுகபெருமாள் அய்யனார் முன்னிலையில் தான் வழக்குகள் குறித்து விசாரிக்கப்பட்டு பைசல்  செய்யப்படும். அப்போது தான் யாரும் பொய் சொல்ல மாட்டார்கள் என்பது மக்களின் நம்பிக்கை.

இத்தகைய சிறப்புப் பெற்ற கோவிலில் பக்தர்களின் பங்களிப்புடன் தற்போது தங்கக் கோவிலாக மாறி உள்ளது. இக்கோவிலில் உள்ள சேவுகப்பெருமாளை குலதெய்வமாக வணங்கும் பல்வேறு மாவட்டங்களில் வசித்து வரும் பக்தர்களின் சார்பில் கோவில் திருப்பணிக்காக வழங்கிய நன்கொடைகள் மூலம் பல்வேறு திருப்பணிகள் நடைபெற்றுள்ளது.

கோவிலில் வெள்ளித் தேர் செய்ய பக்தர்கள் முடிவு செய்து அதற்கான வெள்ளியை உபயமாக வழங்கி வெள்ளி தேர் செய்யப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக அம்மன் சன்னதி முன்பு உள்ள கொடிமரத்திற்கும் வெள்ளித் தகடும் பதிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மண்டகபடிதாரர்கள் சார்பில் கோவிலிலுள்ள அனைத்து உற்சவ வாகனங்களுக்கும் வெள்ளித் தகடு பதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க திருப்பணிக்குழு தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இராம.அருணகிரியின் முயற்சியால் கோவிலிலுள்ள 5 மூலஸ்தான விமானங்களுக்கும் தங்கத்தகடும், கோவில் கொடிமரத்திற்கு தங்க தகடும் பதிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர அடைக்கலம் காத்த அய்யனார் விமானம், ராஜகோபுர கலசங்கள் ஆகியவற்றிக்கும் தங்க தகடுகள் பதிக்கப்பட்டு காட்சியளிக்கிறது. கடந்த  இரண்டாண்டுகளாக கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்று ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் புதுப்பிக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டுள்ளது. கோவில் முன்பு உள்ள புரவிகள் சீரமைக்கப்பட்டு புராண, இதிகாச ஓவியங்கள், சிற்பங்கள் மீண்டும் சீர் செய்யப்பட்டுள்ளது. மூலஸ்தானம், அடைக்கலம் காத்த அய்யனார், பூவை வல்லி சமேத சுயம்பிரகாச ஈஸ்வரர், பிடாரியம்மன், விநாயகர், சுப்பிரமணியர் மற்றும் நவக்கிரக விமானங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் திருக்கல்யாண மண்டபத்தில் வர்ணம் பூச்சுகள் நிறைவு பெற்ற நிலையில் சமீபத்தில்  கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏற்கனவே இதற்கு முன்பு கடந்த 1973 மற்றும் 2001-ஆம் ஆண்டுகளில் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

22 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது மீண்டும் கோவிலில்  கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதற்காக சிறப்பான ஏற்பாடுகள் நடத்தப்பட்டு 33 குண்டங்களுடன் பிரமாண்ட யாகசாலை  அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. யாகசாலை பூஜையின் போது தினமும் அன்னதானமும் நடைபெற்றது. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான அறங்காவலர் இராணி மதுராந்தகி நாச்சியார் தலைமையில் கோவில் நிர்வாகத்தினர், கிராமத்தினர் உள்ளிட்ட பல்வேறு மக்கள் சார்பில் நடைபெற்றது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்