சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை எட்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செந்தில் பாலாஜியை துன்புறுத்தவோ, மிரட்டவோ, அச்சுறுத்தவோ கூடாதென அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் நிபந்தனைகளையும் விதித்துள்ளது. செந்தில் பாலாஜிக்கு இதய பாதிப்பு இருப்பதாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். அவருக்கு ஓரிரு நாட்களில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்று மருத்துவக் குழுவினர் தெரிவித்ததாக காவேரி மருத்துவமனை சார்பில் அறிக்கை வந்துள்ளது.
அமலாக்கத்துறை சோதனை விசாரணையில் செந்தில் பாலாஜி ஒத்துழைப்பளிக்கவில்லை என்றும் அவரை 15 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டுமெனவும் அமலாக்கத்துறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்திருந்ததற்கு
எட்டு நாட்களுக்கு அமலாக்கத்துறைபிடியில் விசாரிக்க அனுமதியளித்துள்ளது. அதே நேரத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செந்தில் பாலாஜியை துன்புறுத்தவோ, மிரட்டவோ, அச்சுறுத்தவோ கூடாது என அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் நிபந்தனைகளை விதித்துள்ளது.
நீதிபதி அல்லி முன்பு வியாழக்கிழமையன்று விசாரணைக்கு வந்த போது, மருத்துவமனையில் இருந்து காணொளிக்காட்சி வாயிலாக செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்ட. பின்னர் இருதரப்பு வாதங்களும் நடைபெற்ற நிலையில், இரு மனுக்கள் மீதான தீர்ப்பு வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது இருதய பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலுக்கு அனுப்பக்கூடாது என அவரது தரப்பு வழக்கறிஞர் அருண், வாதத்தை முன்வைத்தார் அதை ஏற்காத நீதிமன்றம்
சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை எட்டு நாட்கள் காவலில் வயத்து விசாரிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
ஆளுநர் எதிர்ப்புக்கு நடுவே. இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜியை வைத்த போதும் தமிழ்நாடு அரசு அரசாணை வந்த நிலையில்
தீர்ப்பில் ,செந்தில்பாலாஜியை ஜூன் மாதம் 23 ஆம் தேதி வரை, எட்டு நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்கவுள்ளது. செந்தில் பாலாஜி சிகிச்சை பெறும் மருத்துவமனையிலேயே அவரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தலாமென்றும், அவரை விசாரணைக்காக வெளியில் அழைத்துச் செல்லக் கூடாதென்றும் நிபந்தனை விதித்தார்.
அமலாக்கத்துறையின் இயக்குநர் கார்த்திக் தாசரிக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் சில நிபந்தனைகளையும் விதித்துள்ளதன் படி, காவேரி மருத்துவமனையிலிருந்து செந்தில்பாலாஜியை வெளியே அழைத்துச் செல்லக்கூடாது. உடல்நிலை, மற்றும் அவரது சிகிச்சைக்கு எந்த இடையூறுமில்லாமல் விசாரிக்க வேண்டும், போதிய உணவு, இருப்பிடம் வழங்க வேண்டுமென சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
விசாரணையின் போது செந்தில் பாலாஜி ஒத்துழைப்புக் கொடுக்கவில்லை என்றும் அவரை 15 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் எனவும் அமலாக்கத்துறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்திருந்தது.
இந்த நிலையில் தமிழ்நாடு .ஆளுநர் எதிர்ப்புக்கு நடுவே.. இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு அதிரடி அரசாணை பிரப்பித்த நிலையில்
மூன்றாம் தர விசாரணை முறையைப் பயன்படுத்தக்கூடாது, செந்தில் பாலாஜியை பார்க்க குடும்ப உறுப்பினர்களை அனுமதிக்க வேண்டும், காவலில் இருக்கும் போது அவருக்கு தேவையான பாதுகாப்பை வழங்க வேண்டும் ஆகிய நிபந்தனைகளை நீதிமன்றம் விதித்துள்ளது. காவல் விசாரணை முடிந்து மீண்டும் ஜூன் மாதம் 23 ஆம் தேதி மாலை 3 மணிக்கு காணொளிக்காட்சி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அமலாக்கதுறைக்கு சென்னை முதன்மை நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலையை எய்ம்ஸ் மருத்துவர்கள் கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும் என அமலாகத்துறை தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்தது. செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாலும் அமலாக்கத்துறையின் கண்காணிப்பில்தான் செந்தில் பாலாஜி இருந்தாக வேண்டும். சட்ட விரோதப் பண பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறையினர் முன் வைக்கும் கேள்விக்கு உண்மையை சொல்வாரா அல்லது சோதனை நாளில் சொன்னது போல தெரியாது, நினைவில்லை என்று மட்டுமே சொல்வாரா என்று பார்க்கலாம்.அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இதுவரை இருந்த இரண்டு இலாகாக்களுமே மிக முக்கியமானவை. அதில் அமைச்சர் முத்துசாமியிடம் மதுவிலக்குத்துறையும், அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் மின்சாரத்துறையும் கூடுதலாக வழங்கப்பட ஆளுநருக்கு பரிந்துரை அனுப்பப்பட்டது. இரண்டுமே சர்ச்சைகளும், நெருக்கடிகளும் நிறைந்த துறை. செந்தில் பாலாஜியும் அத்தகைய சர்ச்சைகளுக்கும், நெருக்கடிகளுக்கும் தப்பவில்லை.
எனவே, அமைச்சரவை ரீதியாக செந்தில் பாலாஜி இடத்தை மற்றவர்கள் நிரப்புவார்களா இல்லையா என்பதை, செயல்பாடுகளைப் பொறுத்தே மதிப்பிட இயலும். ஆனால். கட்சி ரீதியாக செந்தில் பாலாஜி இடத்தை வேறொருவர் நிரப்புவது என்பது தி.மு.க-வுக்கு மிகுந்த சவாலான ஒன்று தான் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
கருத்துகள்