முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

செந்தில்பாலாஜியை ஜூன் மாதம் 23 ஆம் தேதி வரை, எட்டு நாட்கள் அமலாக்கத்துறை காவலில் விசாரணை

சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை எட்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.


மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செந்தில் பாலாஜியை துன்புறுத்தவோ, மிரட்டவோ, அச்சுறுத்தவோ கூடாதென அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் நிபந்தனைகளையும் விதித்துள்ளது. செந்தில் பாலாஜிக்கு இதய பாதிப்பு இருப்பதாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். அவருக்கு ஓரிரு நாட்களில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்று மருத்துவக் குழுவினர் தெரிவித்ததாக காவேரி மருத்துவமனை சார்பில் அறிக்கை வந்துள்ளது.


அமலாக்கத்துறை சோதனை  விசாரணையில்  செந்தில் பாலாஜி ஒத்துழைப்பளிக்கவில்லை என்றும் அவரை 15 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டுமெனவும் அமலாக்கத்துறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்திருந்ததற்கு


எட்டு  நாட்களுக்கு அமலாக்கத்துறைபிடியில்  விசாரிக்க  அனுமதியளித்துள்ளது. அதே நேரத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செந்தில் பாலாஜியை துன்புறுத்தவோ, மிரட்டவோ, அச்சுறுத்தவோ கூடாது என அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் நிபந்தனைகளை விதித்துள்ளது.


நீதிபதி அல்லி முன்பு வியாழக்கிழமையன்று விசாரணைக்கு வந்த போது, மருத்துவமனையில் இருந்து காணொளிக்காட்சி  வாயிலாக செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்ட. பின்னர் இருதரப்பு வாதங்களும் நடைபெற்ற நிலையில், இரு மனுக்கள் மீதான தீர்ப்பு வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில்  வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது இருதய பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலுக்கு அனுப்பக்கூடாது என அவரது தரப்பு வழக்கறிஞர் அருண், வாதத்தை முன்வைத்தார் அதை ஏற்காத நீதிமன்றம் 




சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை எட்டு நாட்கள் காவலில் வயத்து விசாரிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி அளித்தது. 

ஆளுநர் எதிர்ப்புக்கு நடுவே. இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜியை வைத்த போதும்  தமிழ்நாடு அரசு அரசாணை வந்த நிலையில்






தீர்ப்பில் ,செந்தில்பாலாஜியை ஜூன் மாதம் 23 ஆம் தேதி வரை, எட்டு நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்கவுள்ளது. செந்தில் பாலாஜி சிகிச்சை பெறும் மருத்துவமனையிலேயே அவரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தலாமென்றும், அவரை விசாரணைக்காக வெளியில் அழைத்துச் செல்லக் கூடாதென்றும் நிபந்தனை விதித்தார்.



அமலாக்கத்துறையின் இயக்குநர் கார்த்திக் தாசரிக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் சில நிபந்தனைகளையும் விதித்துள்ளதன் படி, காவேரி மருத்துவமனையிலிருந்து செந்தில்பாலாஜியை வெளியே அழைத்துச் செல்லக்கூடாது.  உடல்நிலை, மற்றும் அவரது சிகிச்சைக்கு எந்த இடையூறுமில்லாமல் விசாரிக்க வேண்டும், போதிய உணவு, இருப்பிடம் வழங்க வேண்டுமென சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. 



 விசாரணையின் போது செந்தில் பாலாஜி ஒத்துழைப்புக் கொடுக்கவில்லை என்றும் அவரை 15 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் எனவும் அமலாக்கத்துறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்திருந்தது.

இந்த நிலையில் தமிழ்நாடு .ஆளுநர் எதிர்ப்புக்கு நடுவே.. இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக  தமிழ்நாடு அரசு அதிரடி  அரசாணை பிரப்பித்த நிலையில் 

மூன்றாம் தர விசாரணை முறையைப் பயன்படுத்தக்கூடாது, செந்தில் பாலாஜியை பார்க்க குடும்ப உறுப்பினர்களை அனுமதிக்க வேண்டும், காவலில் இருக்கும் போது அவருக்கு தேவையான பாதுகாப்பை வழங்க வேண்டும் ஆகிய நிபந்தனைகளை நீதிமன்றம் விதித்துள்ளது. காவல் விசாரணை முடிந்து மீண்டும் ஜூன் மாதம் 23 ஆம் தேதி மாலை 3 மணிக்கு காணொளிக்காட்சி  வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அமலாக்கதுறைக்கு சென்னை முதன்மை நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலையை எய்ம்ஸ் மருத்துவர்கள் கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும் என அமலாகத்துறை தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்தது. செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாலும் அமலாக்கத்துறையின் கண்காணிப்பில்தான் செந்தில் பாலாஜி இருந்தாக வேண்டும். சட்ட விரோதப் பண பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறையினர் முன் வைக்கும் கேள்விக்கு உண்மையை சொல்வாரா அல்லது சோதனை நாளில் சொன்னது போல தெரியாது, நினைவில்லை என்று மட்டுமே சொல்வாரா என்று பார்க்கலாம்.அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இதுவரை இருந்த  இரண்டு இலாகாக்களுமே மிக முக்கியமானவை. அதில் அமைச்சர் முத்துசாமியிடம் மதுவிலக்குத்துறையும், அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் மின்சாரத்துறையும் கூடுதலாக வழங்கப்பட ஆளுநருக்கு பரிந்துரை அனுப்பப்பட்டது. இரண்டுமே சர்ச்சைகளும், நெருக்கடிகளும் நிறைந்த துறை. செந்தில் பாலாஜியும் அத்தகைய சர்ச்சைகளுக்கும், நெருக்கடிகளுக்கும் தப்பவில்லை.

எனவே, அமைச்சரவை ரீதியாக செந்தில் பாலாஜி இடத்தை மற்றவர்கள் நிரப்புவார்களா இல்லையா என்பதை, செயல்பாடுகளைப் பொறுத்தே மதிப்பிட இயலும். ஆனால். கட்சி ரீதியாக செந்தில் பாலாஜி இடத்தை வேறொருவர் நிரப்புவது என்பது தி.மு.க-வுக்கு மிகுந்த சவாலான ஒன்று தான் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...