ஒடிசா மாநில ரயில் விபத்தில் 297 பேர் உயிரிழந்துள்ளனர். 650க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
மேலும் உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்பு.
கொல்கத்தாவிலிருந்து சென்னை வந்துகொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலத்தின் பாலாசூர் மாவட்டத்தின் அருகில் நேற்றிரவு சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதியது இந்த விபத்தானது. ஒடிசாவின் பாஹா நாகா பஜார் ரயில் நிலையம் அருகே நடந்து இந்த விபத்தில் பயணிகள் பலரும் சிக்கியுள்ளனர்.297 பேர் உயிரிழந்துள்ளனர். 650க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் உயிரிழப்பு இருக்க வாய்ப்பு அதிக காயமடைந்தவர்கள் கோபால்பூர் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது ஒடிசா மாநில தலைமைச் செயலாளர் தகவல் ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது. மீட்பு பணிகள் விடிய விடிய நடைபெறும் நிலையில், தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை 297 ஆக உயர்ந்துள்ளது.கொல்கத்தாவின் ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்னை நோக்கி வந்த போது கோரமண்டல் எக்ஸ்பிரஸ், தடம் புரண்ட சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து தொடர்பாக தமிழ்நாடு அரசு அறிவிப்பில் 044 2859 3990, 94458 69843 ஆகிய தொலைபேசி எண்களில் தகவல் அறியலாம்;
இரயில் விபத்து தொடர்பாக உதவி பெற 94458 69848 என்ற வாட்ஸ் அப் எண் அறிவிப்பு ரயில் விபத்து நடைபெற்ற இடத்தில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மீட்புப் பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ரயில் விபத்து குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தலைமையில் விசாரணை நடத்தப்படுமென்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
வந்தே பாரத் தொடர் வண்டிகளுக்கு பெருமை தேடுவோர் தானே நேற்றைய கோரமண்டல் தொடர் வண்டி விபத்திற்கும் பொறுப்பேற்க வேண்டும்?இரயில் விபத்து குறித்த கூட்டு ஆய்வு அறிக்கை (Train Accident Joint Inspection) Reportதற்போது வெளிவந்துள்ளது
1954 தொடர் வண்டி விபத்திற்கு துறை அமைச்சர் திரு. லால் பகதூர் சாஸ்திரி பதவி விலகினார். அது இவருக்கும் பொருந்தும் தானே என்பது தற்போது மக்கள் வினா ..தார்மீக அடிப்படையில் பதவி விலக வேண்டும் தமிழ்நாடு அரசு சார்பில், ரயிலில் பயணித்தோர் விபரமறிந்து கொள்ள அவசர கால கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி அவசர உதவிக்காக 044-28593990, 9445869843 ஆகிய தொலைபேசி எண்களுக்கும், 9445869848 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக காவல்துறை சார்பிலும், அவசர கால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 044-28447701, 044-28447703 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து காரணமாக 38 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 35 ரயில்க்கள் மாற்றுபாதையில் இயக்கம். ஹவுராவிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், பாலசோர் அருகே பஹானாகா பஜார் ஸ்டேஷனில் சரக்கு ரயில் மீது மோதியதில் சில பெட்டிகள் தடம் புரண்டன. அந்த பெட்டிகளை ரயில்வே ஊழியர்கள் மீட்டு அருகிலிருந்த தண்டவாளத்தில் நிறுத்தி வைத்திருந்த சமயத்தில், அதே தண்டவாளத்தில் யஷ்வந்த்பூரிலிருந்து ஹவுரா நோக்கிச் சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் வந்ததால் கொடூரமாக மோத நேரிட்டது.என ரயில்வே அமைச்சக செய்தித் தொடர்பாளர் அமிதாப் ஷர்மா, தெரிவித்தார் “சென்னை நோக்கிச் சென்றுகொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் சுமார் 10-12 பெட்டிகள் பாலசோர் அருகே தடம் புரண்டன.
அப்போது தடம் புரண்ட அதன் ரயில் பெட்டிகள், அதற்கு அருகே மற்றொரு தண்டவாளத்தில் யஸ்வந்த்பூரில் இருந்து ஹௌராவுக்கு சென்றுகொண்டிருந்த ரயிலின் மீது மோதியது. இதன் காரணமாக அதிலும் சில பெட்டிகள் தடம் புரண்டன,” என்று தெரிவித்துள்ளார்.
ஒடிசாவின் தலைமைச் செயலாளார் பிரதீப் ஜெனா, “இரண்டு ரயிலிலும் சில பெட்டிகள் தடம் புரண்ட பிறகு அருகிலிருந்த சரக்கு ரயில் மீதும் மோதியது,” எனத் தெரிவித்தார்.
மேலும் “பாலசோர் மருத்துவக் கல்லூரி, எஸ்சிபி மருத்துவக் கல்லூரி, பாலசோர் மாவட்ட மருத்துவமனை, பத்ரக் மாவட்ட மருத்துவமனை ஆகியவற்றில் மருத்துவக் குழுக்கள் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காகத் தயார் நிலையில் உள்ளனர்,” எனக் கூறினார்.விபத்து நடந்த இடத்தில் 200-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் 50 பேருந்துகள் நிறுத்தப்பட்டு நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் நடைபெறுகின்றன.
தடம் புரண்ட பெட்டிகளில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
பாலசோர் மருத்துவமனையின் பிரேதப் பரிசோதனை மையத்திற்கு வெளியே மக்கள் கூடியுள்ளனர்.
நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாகவும், ஆனால் செய்தி எழுதும் வரை, தடம் புரண்ட போகிகளில் மக்கள் சிக்கியுள்ளதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். கர்நாடகாவின் பெங்களூரிலிருந்து, மேற்கு வங்கத்தின் ஹவுரா நோக்கி ரயில் எண் 12864 என்ற பெங்களூரு - ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மாலை சென்று கொண்டிருந்தது.
அப்போது, ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநகர் பஜார் ரயில் நிலையம் அருகே சென்ற போது, மாலை 7:00 மணிக்கு பெங்களூரு - ஹவுரா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது. அந்த ரயிலின் பெட்டிகள் அருகில் இருந்த தண்டவாளத்தின் மீது கவிழ்ந்தன. அதன்மீது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து இது ரயில்வே துறையின் மோசமான நிர்வாகக் குறைபாடு தான் என்பது தெரிகிறது.இந்தப் படம் சொல்லும் செய்தி இயல்பானதாகவே இல்லை.
திட்டமிட்ட விபத்தைப் போல் உள்ளது. மூன்று தண்டவாளத் தடங்களுள்ள பாதையில் மூன்று தொடர் வண்டிகளின் பெட்டிகளும் எப்படி சேதமானவைகளாக இருக்கும்
இன்னும் முழுமையான செய்திகளைப் பார்க்கவில்லை.
தமிழ்நாடு வரும் தொடர் வண்டி மனிதத் திட்டத்தால் விபத்தாக நிகழ்ந்துள்ளதாகவே பலரும் பார்க்கும் நிலை
இவர்கள் நாடகத்தில் போவது என்னவோ பல ஆயிரம் இலட்சம் உயிர்கள் தான்.அப்பாவி கூலித் தொழிலாளர்களாக வந்தவர்கள் இறந்த உடல்களாகத் திரும்புவார்கள். ஏன் எனில் அவர்கள் பதிவு செய்யாத பெட்டியில் பயணம் செய்த நிலை அரசின் இரயில்வே துறையின் தோல்வியை இயற்கை இந்த ஆண்டின் துவக்கத்திலிருந்தே எழுதத் துவங்கி விட்டது என்பதைத் தான் பலரும் அறிகின்றனர்
கருத்துகள்