முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

30 நாட்களில் கட்டிட வரைபட அனுமதி கட்டாயம் என்பது புதிய விதி

30 நாட்களில் கட்டிட வரைபட அனுமதி கட்டாயம் என்பது புதிய விதி


விண்ணப்பித்ததிலிருந்து, 30 நாட்களுக்குள் கட்டுமான திட்ட அனுமதி வழங்குவதை கட்டாயமாக்கும் வகையில், புதிய விதிகள் உருவாக்கப்பட்டுநாடு முழுதும் கட்டுமானத் திட்ட அனுமதி வழங்குவதில், சீரான முறையை ஏற்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அதற்காக, பி.ஐ.எஸ்., எனப்படும் இந்திய தர நிர்ணய ஆணையம் சார்பில், புதிய வரைவு கட்டிட விதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் துறையுடன் இணைந்து, இந்த விதிகள் வகுக்கப்பட்டுள்ளது. அதாவது  புதிய கட்டுமானத் திட்ட விண்ணப்பத்தை பெற்றதிலிருந்து, ஏழு நாட்களில், அதன் அடிப்படைத் தகுதியை ஆய்வு செய்ய வேண்டும். விண்ணப்பதாரரிடம் தேவையான கூடுதல் விபரங்களைப் பெற வேண்டும். அதன் மீதான தொழில்நுட்ப ஆய்வுகளை, 15 நாட்களுக்குள் முடிக்க வேண்டும். இதில் மாற்றங்கள் செய்ய வேண்டிய தேவையிருந்தால், அது குறித்து விண்ணப்பதாரருக்குத் தெரிவிக்க வேண்டும். இதையடுத்து, 30 நாட்களுக்குள் திட்ட அனுமதி குறித்த கடிதம், விண்ணப்பதாரருக்கு அனுப்பப்பட வேண்டும். இந்த வழிமுறைகள் பின்பற்றப்படாமல், 30 நாட்கள் வரை, எவ்விதத் தகவலும் அனுப்பாமலிருந்தால், 45 வது நாளில், அந்த விண்ணப்பத்தின் மீது சம்பந்தப்பட்ட துறை ஒப்புதல் அளித்ததாகவே கருதப்படும். அன்றே விண்ணப்பதாரர், கட்டுமானப் பணிகளை துவங்கலாம். மேலும் வரைவு விதிகளின் படி, 3,229 சதுர அடி வரை பரப்பளவுள்ள மனைகளில், ஒரே கட்டிடமாகக் கட்டப்படும் குடியிருப்புகளுக்கு, பக்கவாட்டில் காலி இடம் விடத் தேவையில்லை; முன்புறம், பின்புறத்தில் மட்டும் காலியிடம் இருந்தால் போதும்.இதே போன்று, 500 சதுர அடி வரையான மனைகளில், 49 அடி உயரம் வரை குடியிருப்புக் கட்டடங்களைக் கட்டலாம். இதில் மனையில், 75 சதவீத இடத்தை, கட்டுமானப் பணிக்குப் பயன்படுத்தலாம்.கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி பெறத் தேவையான 7 படி செயல்முறைகள் இதுவரை உள்ளது


ஒப்புதல்கள் எடுக்கப்படாவிட்டால், அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். எனவே, இருக்க வேண்டிய 7 அனுமதிகள் கட்டிடம் கட்டுவதற்கு ஒப்புதல் பெறும்  போது ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் சொந்த விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் உள்ளன. உங்களிடம் முறையான ஒப்புதல்கள் இல்லை யென்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள தண்டனைகளில் ஏதேனும் ஒன்றை நிர்வாகம் எடுக்கலாம்:-

அதாவது மாஸ்டர் பிளான் பிரிவு 12 ன் கீழ், பிப்ரவரி மாதம்  7ஆம் தேதி , 2021 அன்று ரூபாய் . 5000 அபராதம் அல்லது 6 மாத சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

மேலும் கட்டிடத்தை இடிக்க ஒரு அதிகாரம் ஒரு ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பலாம் மற்றும் செலவுகளை சொத்தின் உரிமையாளர் செலுத்த வேண்டும்.

சட்டத்தை மீறும் பட்சத்தில், ஒரு ஆணையம் கட்டிடம் கட்டும் பணியை நடத்தலாம்.

சீல் வைத்தல் : சட்டத்தின் 31A பிரிவின் கீழ், கட்டிடத்தின் கட்டுமானத்திற்கு சீல் வைக்க ஒரு அலுவலர் அனுமதி அளிக்கலாம்.கட்டிடம் கட்டுவதற்கு உள்ளாட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெறுவது அவசியம். மேலே கொடுக்கப்பட்ட எந்த அனுமதியும் இல்லாமல் ஒரு கட்டிடம் கட்டத் தொடங்கினால், அது அபராதம் அல்லது தண்டணை பிரிவு 12 ன் கீழ் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரிவு 29ன் கீழ் அபராதம் விதிக்கப்படும், ஒப்புதல் பெறப்படாவிட்டால் ரூபாய். 5000 வரை அபராதம் அல்லது 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.என்ற நிலை இலஞ்சம் வாங்கும் நபர்களை ஊக்கப்படுத்துவது போல இருந்த நிலை இனி மாறும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...