இராமநாதபுரம் நீதிமன்றத்தில் உள்ளே ரௌடியை இன்று வெட்டி விட்டுத் தப்பியோடிய மற்றொரு ரௌடியை காவல்துறை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்
தப்பி ஓடிய ரௌடி கொக்கி குமார்; சுட்டு பிடித்த காவல்துறை இராமநாதபுரத்தில் அசம்பாவித நிகழ்வு!
இராமநாதபுரம் மாவட்ட நீதிமன்ற வளாக நீதிமன்றத்தில் உள்ளே ரௌடியை இன்று வெட்டி விட்டுத் தப்பி ஓடிய மற்றொரு ரௌடியை காவல்துறை துப்பாக்கி சூடு நடத்திப் பிடித்தனர் நிகழ்வு சம்பவம் வருமாறு .
இராமநாதபுரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் நடந்த வழக்கு விசாரணைக்கு ஆஜரான ரௌடி அசோக்குமார் என்பவரை மற்றொரு ரௌடியான கொக்கி குமார் நீதிமன்றத்திற்குள்ளேயே வைத்து வாள் கொண்டு இன்று வெட்டி விட்டு்த் தப்பினார். இதில் கழுத்தில் வெட்டுக் காயமடைந்த அசோக்குமாரை மீட்டு சிகிச்சைக்காக இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அதையடுத்து நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் காவல் பாதுகாப்புப் போடப்பட்டதுடன், நீதிமன்றத்திற்குள் வைத்து ரௌடி அசோக்குமாரை வெட்டிய ரௌடி கொக்கி குமாரை தேடி வந்த நிலையில் கொக்கி குமார் உச்சிப்புளி பகுதியில் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்ததையடுத்து கேணிக்கரை காவல்துறை ஆய்வாளர் ஆடிவேல் தலைமையில் சென்ற காவலர்கள், உச்சிப்புளியில் பதுங்கியிருந்த கொக்கி குமாரை பிடித்தனர் பின் விசாரணைக்கு அழைத்து வந்த போது காவலரின் பிடியிலிருந்து கொக்கி குமார் தப்பி ஓடியதையடுத்து ஆய்வாளர் ஆடிவேல் தன் துப்பாக்கியால் கொக்கி குமாரை நோக்கிச் சுட்டதில் கொக்கி குமாரின் வலது காலில் குண்டு பாய்ந்ததனால் ஓட முடியாமல் கீழே விழுந்த பின் கைது செய்து சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
நீதிமன்றத்திற்குள் புகுந்து ரௌடியை வெட்டிய மற்றொரு ரௌடி மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்திப் பிடித்த சம்பவம் இராமநாதபுரம் சுற்று வட்டாரப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கருத்துகள்