முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சுதந்திரப் போராட்ட வீரர் வாளுக்குவேலி அம்பலத்தின் பிறந்த நாள் விழா ஏற்பாடுகள்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஏப்ரல் மாதம் .10 ஆம் தேதி தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைக்கான புதிய 18 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதில் சிவகங்கை மாவட்டத்தில் காளையார்கோவில் தாலுகாவில்  சுதந்திரப் போராட்ட வீரர் வாளுக்குவேலி அம்பலத்தின் பிறந்த நாள்


ஜூன் 10 அன்று அரசு விழாவாக கொண்டாடப்படும் எனவும் சிவகங்கை மாவட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலத்துக்கு ரூபாய் 50 லட்சம் மதிப்பில் திருவுருவச் சிலை அமைக்கப்பட்டு அதன் விழா சிறப்பாக நடக்கும் நிலை பாகனேரி நாடென்பது 22 1/2 சிற்றூர்கள் உட்பட்டுள்ள ஒரு சிவகங்கை சமஸ்தானத்தின் பகுதியாகும்.



இந்த நாட்டின் அப்போது சம்பளம் ,உம்பளம் அம்பலம் என்ற பொறுப்பும் உண்டு வாளுக்குவேலி அம்பலமாவார். இவருடைய தங்கை கல்யாணி நாச்சியார் தம்பி கறுத்ததாப்பன் அம்பலமார்கள்.

மாவீரர்கள் மருது பாண்டியர்களின் உற்ற நண்பரான வாளுக்கு வேலி அம்பலத்தின் போர்ப்படைகள் மருது சகோதரர்களை தூக்கிலிருந்து விடுவிக்க மக்கள் படை திரட்டி வெள்ளையர்களுக்கெதிராக நடந்த போரில் மருதுபாண்டியர்களுக்கு பெரிதும் உதவியவர் மேலும் அந்த எதிர்ப்பு காரணமாக கத்தாளம்பட்டில் வெள்ளைக்கரார்களின் சதியால் புதைகுழி வீழ்ந்த மாவீரன்


இராணி வேலு நாச்சியார் மற்றும் தளபதி பிரதானி மருதுசகோதரர்களுடன் சேர்ந்து, இவர் போரில் ஈடுபட்டதை, சிவகங்கை சரித்திர அம்மானையில் பக்கம் 151 ல் குறிப்பிடப்படுகிறது.


அக்டோபர் 24 ,1801ஆம் ஆண்டில்  திருப்புத்தூர் வரும் சொக்கநாதபுரம்  கத்தப்பட்டில்  சூழ்ச்சியால் கொல்லப்பட்டார். அந்த இடத்தில் அவரின் நினைவாக, இவரது சகோதரர் கருத்தப்பன் அம்பலத்தால் நடுகல் வைத்து வணங்கி வந்ததில் வாளுக்குவேலி அம்பலம் சிலையின் கையில் ஈட்டி மற்றும் வளரி வைத்துள்ளவாறு அமைக்கப்பட்டுள்ளது.இவருடைய நினைவாகவும் மற்றும் வீரத்தை போற்றும் விதமாகவும் ஜூன் 10 ஆம் (வைகாசி 27) தேதி, பாகனேரி நாட்டு மக்களால் பொங்கல் வைத்துப் படையலிட்டு, வீர வணக்க நினைவு நாளாகக் கொண்டாடி வருகின்றனர். முன்னால் முதல்வர் 


கலைஞர் மு.கருணாநிதி எழுதிய தென்பாண்டிச் சிங்கம் புதினம் மூலம் தற்போது முன் வரலாறு தெறியாத பலரால் அறியப்படும் 

இவரது வீரத்தினைப் போற்றும் விதமாக அரசு விழா நடத்த வேண்டுமென்று தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் தற்போது வாளுக்குவேலி அம்பலம் தமிழ்நாட்டில் கி.பி. 18 ஆம் நூற்றாண்டில் வெள்ளையர்களின் ஆட்சியதிகாரத்தை எதிர்த்துப் போரிட்ட பாகனேரி என்ற தன்னாட்சிக் கள்ளர் நாட்டு அம்பலம்  என்று அறியப்படுகிறது



ஆனால் இந்திய அரசாங்கத்தின் தொல்லியல் துறையிடம் இவரைப் பற்றிய ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டார் என்பதற்கும் , இவர் வாழ்ந்ததற்கு எந்த ஆவணமும் ஆவணப் படுத்தப்படவில்லை என்கிறார்கள்





சரித்திரக்கும்மி மற்றும் அம்மாணை உள்ளிட்ட நாட்டுப்புறப் பாடல் போன்ற ஏதேனும் ஆவணம் இருக்கிறதா என்றும் அறியமுடியவில்லைவாளுக்கு வேலி" அம்பலத்தின் வாழ்க்கை வரலாற்றை எஸ். எஸ். தென்னரசு, 1975 ஆம் ஆண்டு செம்மாதுளை என்ற நூலில் வெளியிடப்பட்டது.

அதை அடிப்படையாகக் கொண்டு கலைஞர் மு. கருணாநிதியால் 1983 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்  எழுதப்பட்ட வரலாற்றுப் புதினம் தென்பாண்டிச் சிங்கமாகும். புதினம்  தொலைக்காட்சித் தொடராகவும் பொதிகை தொலைக்காட்சியில் வெளியானதில் நடிகர் நாசர்  நடித்த தொடருக்கு இளையராஜா இசையமைத்தார். 








இச் சூழ்நிலையில் சுதந்திரப்போராட்டத் தியாகி வாளுக்கு வேலி அம்பலம்  அஞ்சல் தலை வெளியிடக்  கோரிக்கை வைக்கும் மக்கள்        மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், இசை அரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி உள்பட 25 தலைவர்களின் நினைவாக அஞ்சல்தலை வெளியிடப் பட்டுள்ளது.

மௌரியப் பேரரசர் அசோகர் நினைவை போற்றும் வகையில் அவரது அஞ்சல்தலை வெளியிடும் விழா பிஹார் தலைநகர் பாட்னாவில்  நடைபெற்ற. விழாவில் அஞ்சல்தலையை வெளியிட்ட மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்  பேசிய போது நாட்டுக்கு விடுதலைக்கு மிகப்பெரும் சேவையாற்றிய தலைவர்களை கௌரவிக்கும் வகையில் அவர்களின் நினைவு அஞ்சல்தலை வெளியிட முடிவு செய்துள்ளோம். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் உட்பட 25 தலைவர்களின் அஞ்சல்தலையை அஞ்சல் துறை  வெளியிட்டுள்ளது இந்த நிலையில்








கவிஞர் வித்யாபதி, மகாத்மா காந்தி, சர்தார் வல்லபபாய் பட்டேல், மவுலானா அப்துல் கலாம் ஆசாத், டாக்டர் ராஜேந்திர பிரசாத், சச்சிதானந்த சின்ஹா, ஜெய் பிரகாஷ் நாராயண், கர்ப்பூரி தாக்கூர், கைலாசபதி மிஸ்ரா, மலை மனிதர் தஷ்ரத் மாஞ்சி, கவிஞர் ரவீந்திரநாத் தாகூர், லோக மான்ய பாலகங்காதர திலகர், மராட்டிய வீர சிவாஜி, இராணி வேலு நாச்சியார், மருதுபாண்டியர்கள்,








வீரன் அழகுமுத்துக் கோன், பாஜக நிறுவனத் தலைவர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, பண்டிட் தீனதயாள் உபாத்யாய, அன்னை தெரசா, ராம் மனோகர் லோகியா, பிஸ்மில்லா கான், பண்டிட் ரவிசங்கர், இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி உள்ளிட்டோர் அஞ்சல்தலை வெளியிடப்பட்டுள்ள நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மிகப்பெரும் தலைவர் புபேஷ்குப்தாவின் 125-வது பிறந்த நாளையொட்டி அவரது அஞ்சல்தலையும்  வெளியிட்டனர் அரசியல் பாகுபாடின்றி ஒப்புதல் அளித்த நிலையில் தற்போது வாளுக்கு வேலி அம்பலம் அஞ்சல் தலை வெளியிட வேண்டும் என்பது பகுதி மக்களின் கோரிக்கையாகிறது 







முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஒரே ஒரு குடும்பத்தின் நினைவாக நினைவு அஞ்சல்தலைகள் வெளியிடப் பட்டதும் உண்டு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...