கூட்டாளியைக் சுட்டுக் கொன்று கடலில் வீசிய வழக்கில் வரிச்சியூர் ரவுடி செல்வம் கைது
கூட்டாளியை சுட்டுக்கொன்று சென்னை நீலாங்கரை அருகில் கடலில் வீசிய வழக்கில், மதுரை வரிச்சியூர் ரவுடி செல்வம் கைது செய்யப்பட்டார்.
வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளி செந்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு திடீரென மாயமானதையடுத்து செந்தில் மனைவி லெட்சுமி, கணவரைக் காணவில்லை என விருதுநகர் காவல் நிலையத்தில் அளித்த
புகாரின் அடிப்படையில் மாயமான செந்திலின், செல்போன் அழைப்பு விவரங்களைக் கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்திய போது, வரிச்சியூர் செல்வம் மற்றும் அவனது கூட்டாளிகளை செந்தில் தொடர்பு கொண்டது தெரியவந்ததையடுத்து வரிச்சியூருக்கு வந்தந விருதுநகர் காவல்துறையினர், அங்கு முகாமிட்டு இரண்டு நாட்களாக செல்வத்திடம் விசாரணை மேற்கொண்ட நிலையில், வரிச்சிசூர் செல்வம் கூட்டாளிகளுடன் சேர்ந்து செந்திலை சுட்டுக் கொன்று சடலத்தை சென்னை நீலாங்கரைப் பகுதியில் கடலில் வீசியது தெரியவந்துள்ளது
கருத்துகள்