தபால் விநியோக எல்லை மாற்றம் சென்னை திருவள்ளுவர் நகர் பகுதிக்கான தபால் விநியோக எல்லை
மாற்றியமைக்கப்படுகிறது. இந்த பகுதிக்கு தற்போது வேளச்சேரி துணை அஞ்சல் நிலையத்திலிருந்து (600 042) தபால்கள் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், இனி பெருங்குடி துணை தபால் நிலையத்திலிருந்து (600 096) தபால்கள் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளுவர் நகர் பகுதி மக்கள் இனி 600 096 என்ற அஞ்சல் குறியீட்டு எண்ணெய் பயன்படுத்துமாறு அஞ்சல் துறை கேட்டுக்கொண்டுள்ளது. 10.06.2023 முதல் இது நடைமுறைக்கு வரும் எனவும், தபால்களை விரைவாகவும், குறித்த நேரத்திலும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என்ற நோக்கில் இந்த விநியோக எல்லை மாற்றியமைக்கப்படுவதாகவும், சென்னை மாநகர தென் மண்டல அஞ்சல் அலுவலகங்களில் மூத்த கண்காணிப்பாளர்கள் மேஜர் டி திவ்யா தெரிவித்துள்ளார்.சென்னை நகர மண்டலம் தபால் நிலையங்களில் மகிளா சம்மான் முதலீடு ரூ. 130 கோடியை தாண்டியது
"மகளிர் மதிப்புத் திட்டம்" என்று அழைக்கப்படும் மகிளா சம்மான் சேமிப்புப் பத்திரம் 31.03.2023 அன்று மத்திய நிதி அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது பெண்களுக்கு நிதி அதிகாரமளிக்கும் நோக்கத்துடன் துவங்கப்பட்டது. அதிக வட்டி விகிதத்தை வழங்குவதன் மூலம், இந்தத் திட்டம், பெண்கள் மற்றும் பொது மக்களிடையே விருப்பமான சேமிப்புத் திட்டமாக பிரபலமடைந்துள்ளது. இது இரண்டு வருட திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு பெண் தனக்காகவோ அல்லது மைனர் பெண் குழந்தையின் சார்பாக பாதுகாவலரோ குறைந்தபட்ச தொகை ரூ.1000 ல் இருந்து நூறு ரூபாய்களின் மடங்குகளில் ரூ.2 லட்சத்திற்கு மிகமால் கணக்கைத் தொடங்கலாம். இத்திட்டம் 7.5% காலாண்டு கூட்டு வட்டியை வழங்குகிறது. 6 மாதங்களுக்குப் பிறகு எந்த நேரத்திலும் நிபந்தனைகளுடன் கணக்கை முடித்துக் கொள்ளும் வசதி உள்ளது. கணக்கைத் தொடங்கி ஒரு வருடத்திற்குப் பின், கணக்கின் இருப்பிலிருந்து 40% வரை திரும்பப் பெறலாம்.
மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம் ஒரு பாதுகாப்பான முதலீட்டு வழியை வழங்குவதுடன், உங்கள் சேமிப்பை பெருக்கி நிதி இலக்குகளை அடைவதற்கு உதவுகிறது.
26.05.2023 புள்ளிவிவரப்படி, சென்னை நகர மண்டலம் இத்திட்டத்தின் கீழ் 18,266 கணக்குகளைத் துவக்கி ரூ.134.24 கோடி டெபாசிட் தொகையை பெற்றுள்ளது. மகிளா சம்மான் சேமிப்பு கணக்குகளை துவங்குவதற்காக சென்னை நகர மண்டலம் முழுவதும் பல்வேறு இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் 31.03.2025 வரை மட்டுமே கணக்குகளை துவங்க முடியும். ஆகையால், பொதுமக்கள் தங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்திற்கு இன்றே சென்று கணக்கைத் தொடங்கி பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
கருத்துகள்