முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிளீச்சிங் பவுடர் வாங்கியதில் பில் புத்தகம் அச்சடித்ததில் ஊழல் மலர்விழி ஐ.ஏ.எஸ் வீடு உள்ளிட பத்து இடங்களில் சோதனை

பிளீச்சிங் பவுடர் வாங்கியதில் பில் புத்தகம் அச்சடித்ததில்  ஊழல்: தருமபுரி முன்னால் ஆட்சியர் மலர்விழி வீடு உள்ளிட்ட 10 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர்  சோதனை  

தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவராக மலர்விழி இருந்த காலத்தில் நடந்த முறைகேடு  வழக்கில் சோதனை




2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி முதல் 2020 ஆம் ஆண்டு  அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி வரை, தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவராகப் பதவி வகித்த மலர்விழி ஐ.ஏ.எஸ். க்குச் சொந்தமான          சென்னை விருகம்பாக்கத்திலுள்ள ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி வீட்டில் ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் அதிரடியாகச்  சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.


அத்துடன் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் வீட்டிலும் சோதனை நடக்கிறது. அதற்கு முன்னதாக 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி முதல் 2020 ஆம் ஆண்டு  அக்டோபர் மாதம்  29 ஆம் தேதி வரை தருமபுரி மாவட்ட ஆட்சியராக மலர்விழி ஐஏஎஸ் இருந்த காலத்தில் தருமபுரி மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரி வசூல் ரசீது புத்தகங்களை அதிக விலைக்கு வாங்கியதாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. இந்த ரசீது புத்தகங்கள் தருமபுரியில் உள்ள 281 பஞ்சாயத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டு, அவற்றின் மூலம் தண்ணீர் வரி, வீட்டு வரி, சொத்து வரி உள்ளிட்டவை வசூல் செய்யப்படுகின்ற நிலையில் மாநில நிதித்துறை ஆணையம் நடத்திய சோதனையில் வரி வசூல் ரசீது புத்தகத்தில் ஊழல் நடந்திருப்பது கண்டறியப்பட்டதில்,



1.31 கோடி ரூபாய் அளவு முறைகேடு நடந்துள்ளது மாவட்ட அச்சகத்தில் வரி வசூல் ரசீது புத்தகங்களை அச்சடிக்க 50 லட்ச ரூபாய் வரை தான்  செலவாகும் ஆனால் முறைகேடான வகையில் கூடுதல் விலைக்கு அச்சடித்ததாக கணக்குக் காட்டப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்து அதிரடி நடவடிக்கை எடுத்த விவகாரத்தில் மலர்விழி ஐஏஎஸ், தனியார் நிறுவனங்களை நடத்தி வரும் தாஹிர் உசேன், வீரையா, பழனிவேலு உள்ளிட்ட மூவர் மீது மட்டும் தான் இதுவரை வழக்குகள் பதிவாகியுள்ளன

மேற்குறிப்பிட்ட இருவர் நடத்தி வரும் தனியார் நிறுவனங்கள் ரசீதுகளை அதிக விலைக்கு அச்சடித்ததாக போலியான ரசீது தயாரிக்க உதவிகரமாக இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. தவிர பல்வேறு பஞ்சாயத்துத் தலைவர்களும் உடந்தையாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் அடிப்படையில் தான் தருமபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் தற்போது சோதனை புதுக்கோட்டையிலும்  3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை
அதிமுகவைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் பழனிவேலுக்கு சொந்தமான வீடு மற்றும் பாஜக பிரமுகர் முருகானந்தம் (எல் இ டி பல்ப் ஊழல்) உள்ளிட்ட மூன்று நபர்களின் இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். 



 இதுதவிர தருமபுரி மாவட்ட ஆட்சியராக மலர்விழி ஐஏஎஸ் இருந்த போது, கொரோனா காலகட்டத்தில் கிருமி நாசினி கொள்முதலிலும் முறைகேடு செய்ததாக புகாரில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. மலர்விழி ஐஏஎஸ், 2001 ஆம் ஆண்டு குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று தமிழக அரசுப் பணியில் சேர்ந்தார்.

2008 ஆம் ஆண்டில் சென்னையில் வணிக வரித்துறை இணை ஆணையராகவும்  பின் விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலராகவும் பதவிகளை வகித்தார்.2009 ஆம் ஆண்டில் ஐஏஎஸ் அதிகாரியாக  பதவியை ஏற்றார்




2015. ஆம் ஆண்டு முதல்  2017 ஆம் ஆண்டு வரை உள்ல காலத்தில் சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவராகவும், 2018 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவராகவும் பணியாற்றினார். தற்போது சென்னை அறிவியல் நகரத்தின் துணைத் தலைவராக பணி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு