முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிளீச்சிங் பவுடர் வாங்கியதில் பில் புத்தகம் அச்சடித்ததில் ஊழல் மலர்விழி ஐ.ஏ.எஸ் வீடு உள்ளிட பத்து இடங்களில் சோதனை

பிளீச்சிங் பவுடர் வாங்கியதில் பில் புத்தகம் அச்சடித்ததில்  ஊழல்: தருமபுரி முன்னால் ஆட்சியர் மலர்விழி வீடு உள்ளிட்ட 10 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர்  சோதனை  

தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவராக மலர்விழி இருந்த காலத்தில் நடந்த முறைகேடு  வழக்கில் சோதனை




2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி முதல் 2020 ஆம் ஆண்டு  அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி வரை, தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவராகப் பதவி வகித்த மலர்விழி ஐ.ஏ.எஸ். க்குச் சொந்தமான          சென்னை விருகம்பாக்கத்திலுள்ள ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி வீட்டில் ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் அதிரடியாகச்  சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.


அத்துடன் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் வீட்டிலும் சோதனை நடக்கிறது. அதற்கு முன்னதாக 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி முதல் 2020 ஆம் ஆண்டு  அக்டோபர் மாதம்  29 ஆம் தேதி வரை தருமபுரி மாவட்ட ஆட்சியராக மலர்விழி ஐஏஎஸ் இருந்த காலத்தில் தருமபுரி மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரி வசூல் ரசீது புத்தகங்களை அதிக விலைக்கு வாங்கியதாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. இந்த ரசீது புத்தகங்கள் தருமபுரியில் உள்ள 281 பஞ்சாயத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டு, அவற்றின் மூலம் தண்ணீர் வரி, வீட்டு வரி, சொத்து வரி உள்ளிட்டவை வசூல் செய்யப்படுகின்ற நிலையில் மாநில நிதித்துறை ஆணையம் நடத்திய சோதனையில் வரி வசூல் ரசீது புத்தகத்தில் ஊழல் நடந்திருப்பது கண்டறியப்பட்டதில்,



1.31 கோடி ரூபாய் அளவு முறைகேடு நடந்துள்ளது மாவட்ட அச்சகத்தில் வரி வசூல் ரசீது புத்தகங்களை அச்சடிக்க 50 லட்ச ரூபாய் வரை தான்  செலவாகும் ஆனால் முறைகேடான வகையில் கூடுதல் விலைக்கு அச்சடித்ததாக கணக்குக் காட்டப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்து அதிரடி நடவடிக்கை எடுத்த விவகாரத்தில் மலர்விழி ஐஏஎஸ், தனியார் நிறுவனங்களை நடத்தி வரும் தாஹிர் உசேன், வீரையா, பழனிவேலு உள்ளிட்ட மூவர் மீது மட்டும் தான் இதுவரை வழக்குகள் பதிவாகியுள்ளன

மேற்குறிப்பிட்ட இருவர் நடத்தி வரும் தனியார் நிறுவனங்கள் ரசீதுகளை அதிக விலைக்கு அச்சடித்ததாக போலியான ரசீது தயாரிக்க உதவிகரமாக இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. தவிர பல்வேறு பஞ்சாயத்துத் தலைவர்களும் உடந்தையாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் அடிப்படையில் தான் தருமபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் தற்போது சோதனை புதுக்கோட்டையிலும்  3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை
அதிமுகவைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் பழனிவேலுக்கு சொந்தமான வீடு மற்றும் பாஜக பிரமுகர் முருகானந்தம் (எல் இ டி பல்ப் ஊழல்) உள்ளிட்ட மூன்று நபர்களின் இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். 



 இதுதவிர தருமபுரி மாவட்ட ஆட்சியராக மலர்விழி ஐஏஎஸ் இருந்த போது, கொரோனா காலகட்டத்தில் கிருமி நாசினி கொள்முதலிலும் முறைகேடு செய்ததாக புகாரில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. மலர்விழி ஐஏஎஸ், 2001 ஆம் ஆண்டு குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று தமிழக அரசுப் பணியில் சேர்ந்தார்.

2008 ஆம் ஆண்டில் சென்னையில் வணிக வரித்துறை இணை ஆணையராகவும்  பின் விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலராகவும் பதவிகளை வகித்தார்.2009 ஆம் ஆண்டில் ஐஏஎஸ் அதிகாரியாக  பதவியை ஏற்றார்




2015. ஆம் ஆண்டு முதல்  2017 ஆம் ஆண்டு வரை உள்ல காலத்தில் சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவராகவும், 2018 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவராகவும் பணியாற்றினார். தற்போது சென்னை அறிவியல் நகரத்தின் துணைத் தலைவராக பணி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...