பிளீச்சிங் பவுடர் வாங்கியதில் பில் புத்தகம் அச்சடித்ததில் ஊழல் மலர்விழி ஐ.ஏ.எஸ் வீடு உள்ளிட பத்து இடங்களில் சோதனை
பிளீச்சிங் பவுடர் வாங்கியதில் பில் புத்தகம் அச்சடித்ததில் ஊழல்: தருமபுரி முன்னால் ஆட்சியர் மலர்விழி வீடு உள்ளிட்ட 10 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை
தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவராக மலர்விழி இருந்த காலத்தில் நடந்த முறைகேடு வழக்கில் சோதனை
2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி முதல் 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி வரை, தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவராகப் பதவி வகித்த மலர்விழி ஐ.ஏ.எஸ். க்குச் சொந்தமான சென்னை விருகம்பாக்கத்திலுள்ள ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி வீட்டில் ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் அதிரடியாகச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் வீட்டிலும் சோதனை நடக்கிறது. அதற்கு முன்னதாக 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி முதல் 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி வரை தருமபுரி மாவட்ட ஆட்சியராக மலர்விழி ஐஏஎஸ் இருந்த காலத்தில் தருமபுரி மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரி வசூல் ரசீது புத்தகங்களை அதிக விலைக்கு வாங்கியதாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. இந்த ரசீது புத்தகங்கள் தருமபுரியில் உள்ள 281 பஞ்சாயத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டு, அவற்றின் மூலம் தண்ணீர் வரி, வீட்டு வரி, சொத்து வரி உள்ளிட்டவை வசூல் செய்யப்படுகின்ற நிலையில் மாநில நிதித்துறை ஆணையம் நடத்திய சோதனையில் வரி வசூல் ரசீது புத்தகத்தில் ஊழல் நடந்திருப்பது கண்டறியப்பட்டதில்,
1.31 கோடி ரூபாய் அளவு முறைகேடு நடந்துள்ளது மாவட்ட அச்சகத்தில் வரி வசூல் ரசீது புத்தகங்களை அச்சடிக்க 50 லட்ச ரூபாய் வரை தான் செலவாகும் ஆனால் முறைகேடான வகையில் கூடுதல் விலைக்கு அச்சடித்ததாக கணக்குக் காட்டப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்து அதிரடி நடவடிக்கை எடுத்த விவகாரத்தில் மலர்விழி ஐஏஎஸ், தனியார் நிறுவனங்களை நடத்தி வரும் தாஹிர் உசேன், வீரையா, பழனிவேலு உள்ளிட்ட மூவர் மீது மட்டும் தான் இதுவரை வழக்குகள் பதிவாகியுள்ளன
மேற்குறிப்பிட்ட இருவர் நடத்தி வரும் தனியார் நிறுவனங்கள் ரசீதுகளை அதிக விலைக்கு அச்சடித்ததாக போலியான ரசீது தயாரிக்க உதவிகரமாக இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. தவிர பல்வேறு பஞ்சாயத்துத் தலைவர்களும் உடந்தையாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் அடிப்படையில் தான் தருமபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் தற்போது சோதனை புதுக்கோட்டையிலும் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை
அதிமுகவைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் பழனிவேலுக்கு சொந்தமான வீடு மற்றும் பாஜக பிரமுகர் முருகானந்தம் (எல் இ டி பல்ப் ஊழல்) உள்ளிட்ட மூன்று நபர்களின் இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.
இதுதவிர தருமபுரி மாவட்ட ஆட்சியராக மலர்விழி ஐஏஎஸ் இருந்த போது, கொரோனா காலகட்டத்தில் கிருமி நாசினி கொள்முதலிலும் முறைகேடு செய்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலர்விழி ஐஏஎஸ், 2001 ஆம் ஆண்டு குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று தமிழக அரசுப் பணியில் சேர்ந்தார்.
2008 ஆம் ஆண்டில் சென்னையில் வணிக வரித்துறை இணை ஆணையராகவும் பின் விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலராகவும் பதவிகளை வகித்தார்.2009 ஆம் ஆண்டில் ஐஏஎஸ் அதிகாரியாக பதவியை ஏற்றார்
2015. ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை உள்ல காலத்தில் சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவராகவும், 2018 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவராகவும் பணியாற்றினார். தற்போது சென்னை அறிவியல் நகரத்தின் துணைத் தலைவராக பணி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர தருமபுரி மாவட்ட ஆட்சியராக மலர்விழி ஐஏஎஸ் இருந்த போது, கொரோனா காலகட்டத்தில் கிருமி நாசினி கொள்முதலிலும் முறைகேடு செய்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலர்விழி ஐஏஎஸ், 2001 ஆம் ஆண்டு குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று தமிழக அரசுப் பணியில் சேர்ந்தார்.
2008 ஆம் ஆண்டில் சென்னையில் வணிக வரித்துறை இணை ஆணையராகவும் பின் விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலராகவும் பதவிகளை வகித்தார்.2009 ஆம் ஆண்டில் ஐஏஎஸ் அதிகாரியாக பதவியை ஏற்றார்
2015. ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை உள்ல காலத்தில் சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவராகவும், 2018 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவராகவும் பணியாற்றினார். தற்போது சென்னை அறிவியல் நகரத்தின் துணைத் தலைவராக பணி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்