முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் 642டன்எடைகொண்ட எல்விஎம்-3 வகை ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது

ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் 642டன்எடைகொண்ட எல்விஎம்-3 வகை ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது


சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக அதன் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தும் பணி தொடங்கியது



சந்திரயான்-3 விண்கலத்தின் நிலவை நோக்கிய பயணம் வெற்றிகரமாக தொடங்கியது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மூலம் நிலவின் தென் துருவத்தை ஆராய சந்திரயான் - 3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.


இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் சிறப்பான மைல்கல்லாக அமைந்த சந்திரயான் பயணத்தின் மூன்றாவது விண்கலம் சந்திரயான் -3, ஶ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தின் இரண்டாவது செலுத்து தளத்தில் இருந்து இன்று 14 ஜூலை 2023 பிற்பகல் 02:35 மணி 17 நொடிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.





சந்திரயான் -3 விண்கலம் புவி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டு, 3 நிலைகளில் படிப்படியாக அதன் சுற்று வட்டப்பாதை உயர்த்தப்படும்.

இந்தமுறை சந்திரயான் -3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் மற்றும் ரோவர் வாகனம் ஆகியவை நிலவின் மேற்பரப்பில் மென்மையான தரையிறக்கம் மூலமாக கீழ் இறக்கப்பட்டு நிலவின் மேற்பரப்பில் சில  வேதிப்பொருட்களுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.




சந்திரயான் -3 புவி சுற்று வட்டப்பாதையில் இருந்து நிலவின் சுற்றுவட்ட பாதைக்கு ஆகஸ்ட் 1ம் தேதி செல்லும் என்று இஸ்ரோவின் தலைவர் திரு சோம்நாத் தெரிவித்தார்.

ஆகஸ்ட் 23-ம் தேதி மாலை 05:47 மணிக்கு, சந்திரனில் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் என்று தெரிவித்தார். இந்த திட்டத்தின் இயக்குநர் மோகன் குமார் ராக்கெட் இயக்க இயக்குநர் பிஜூ தாமஸ் விண்கல இயக்குநர் டாக்டர் பி வீரமுத்துவேல் ஆகியோர்  ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

விண்ணில் செலுத்தப்பட்ட எல்விஎம் 3 வகை ராக்கெட் 16 நிமிடங்களுக்கு பிறகு அதன் எரிபொருள் கலம் விடுவிக்கப்படும் என்றும், நீள்வட்டப்பாதையில் இந்த ராக்கெட் பூமியை சுமார் 5 அல்லது 6 முறை சுற்றி வரும் என்றும் ஒவ்வொரு சுற்றின் போதும் ராக்கெட்டின் உயரம் அதிகரித்து 36,500 கிலோ மீட்டர் வரையிலான உயரத்திற்கு செல்கையில், அது சந்திரனின் சுற்றுவட்டப்பாதைக்கு அருகில் இந்த ராக்கெட் சென்று விடும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறினார். சந்திரனின் சுற்றுவட்டப்பாதையில் சந்திரனிலிருந்து 100 கிலோ மீட்டர் உயரம் வரை அருகில் சென்ற பிறகு லாண்டர் நிலவில் தரையிறங்கும் முயற்சிகளை மேற்கொள்ளும். நிலவின் தென்துருவத்தில் தரையிறங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்தும் திட்டமிட்டப்படி நடைபெறும் பட்சத்தில் ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி மாலை 5.47 மணியளவில் லேண்டர் நிலவில் தரையிறங்கும் என்றும், அதன்பிறகு அதிலிருந்து ரோவர் வாகனம் ஆய்வுப்பணியில் ஈடுபடும் என்று அவர் குறிப்பிட்டார்.   

சந்திரயான் 3 திட்டம்  வெற்றிகரமாக அமையும் பட்சத்தில் சந்திரயான் 4 திட்டம் செயல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறினார்.  இந்த ராக்கெட் ஏவும் நிகழ்ச்சியை நேரில் காண மத்திய அறிவியல், தொழில் நுட்பத்துறை மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் வந்திருந்தார்.  ராக்கெட் ஏவப்பட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், வானம் நமது எல்லை இல்லை, விண்ணையும் தாண்டிச் செல்வோம் என்றும் நமது அடுத்த தலைமுறை நிலவையும் தாண்டிச் சென்று ஆராயும் என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி,  சுட்டிக்காட்டினார்.சந்திரயான்-3 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு குடியரசு துணைத் தலைவர் பாராட்டு தெரிவித்துள்ளார்

சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர்  வாழ்த்து தெரிவித்தார்.

இதுகுறித்து குடியரசுத் துணைத் தலைவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது: "சந்திரயான்-3 விண்கலத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்திற்கு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள். இந்த சாதனை, விண்வெளி ஆராய்ச்சியில் நாடு அடைந்துள்ள முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுகிறது. இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் மைல்கல்லாக அமைந்த இந்த நிகழ்வு ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்படுத்துகிறது!"

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்