காலம் போற்றும் முன்னாள் முதல்வர் கு. காமராஜர் முதல்வராக வர வைத்த முன்று முக்கியஸ்தர்கள் முதல் முகவை நாடாளுமன்ற உறுப்பினர் காநாடுகாத்தான் நாகப்ப செட்டியார், திருமயம் தீரர் சத்தியமூர்த்தி ஐய்ங்கார் திருப்பத்தூர் முன்னால் சட்டமன்ற உறுப்பினர்கள் சண்முக முதலியாரும், குடியாத்தம் அருணாச்சல முதலியாரும்
தமிழ்நாட்டில் ராஜகோபாலாசயசாரியார் பதவியிலிருந்து ராஜினாமா செய்த பின்னர் யார் முதல்வராவது எனக் குழப்பம் ஏற்பட்டது அப்போது கு.காமராஜர் முதல்வராக வேண்டுமென்று தானாக முன்வந்து தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தவர் குடியாத்தம் அருணாச்சல முதலியார் மேலும் செங்குந்த முதலியார்கள் அதிகம் வாழும் தொகுதியான குடியாத்தம் தொகுதியில் கு.காமராஜரைப் போட்டியிட வைத்து அவருக்காக அனைத்து செலவுகள் மற்றும் வேலைகளைச் செய்து வெற்றி எம்எல்ஏவாக வர வைத்தவர் திருப்பத்தூர் சண்முக முதலியார் மற்றும் குடியாத்தம் அருணாச்சலம் முதலியார் இதன் பிறகு காமராஜர் முதல்வராக பதவியேற்க முடிந்தது பெருந்தலைவர் காமராஜர்
அவர்களின் 121-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில், பெருந்தலைவர் காமராஜர் நூற்றாண்டு நினைவு மணிமண்டபத்தில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு இன்று தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் .கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மற்றும் நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த அன்னாரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.திரு கே. காமராஜரின் பிறந்தநாளை யொட்டி பிரதமர் மரியாதை
திரு.கே.காமராஜரின் பிறந்தநாளையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு வருமாறு:
"திரு கே. காமராஜரின் ஜெயந்தியை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். இந்தியாவின் வளர்ச்சிக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்த பெருமகன், சமூக அதிகாரமளித்தலுக்கு அவர் அளித்த முக்கியத்துவம் நம் அனைவருக்கும் வழிகாட்டும் சக்தியாகும். வறுமை ஒழிப்பு மற்றும் மக்கள் நலன் மீதான அவரது தொலைநோக்கை நிறைவேற்றுவதற்கான நமது உறுதிப்பாட்டை நாம் மீண்டும் அர்ப்பணிப்போம் என்பதாகும் மற்றும் பல்வேறு பகுதிகளில் இன்று விழாவாக கொண்டாடப்பட்டது.
கருத்துகள்