முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜனநாயகத்தில் கலவரங்களை ஆயுதமாக்குவது குறித்து குடியரசு துணைத் தலைவர் வேதனை

ஜனநாயகத்தில் கலவரங்களை ஆயுதமாக்குவது குறித்து குடியரசு துணைத் தலைவர் தனது வேதனையை வெளிப்படுத்தினார்


ஒவ்வொரு விநாடியும் நாடாளுமன்றத்தை செயல்படவிடாமல் முடக்குவதற்கு எந்தக் காரணமும் இருக்க முடியாது - குடியரசுத் துணைத் தலைவர்

கேள்வி நேரம் இல்லாததை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது - குடியரசுத் துணைத் தலைவர்

சில வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவுக்கு எதிராக செய்யும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மாற வேண்டாம் என்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை குடியரசுத் துணைத் தலைவர் கேட்டுக் கொண்டார்


சட்டத்தின் ஆட்சியை எதிர்த்து வீதி ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தின் அடையாளம் அல்ல - குடியரசுத் துணைத் தலைவர்

இயற்கை வளங்களை ஒருவரின் நிதி வசதிக்கு ஏற்ப அல்லாமல் ஒருவரின் தேவைக்கேற்ப பயன்படுத்த வேண்டும் - குடியரசுத் துணைத் தலைவர்

ஜாமியா மில்லியா இஸ்லாமியா நூற்றாண்டு பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் உரை

"நதியைப் போல இருங்கள், உங்கள் சொந்த பாதையைத் தேர்ந்தெடுங்கள், நாட்டிற்கு உங்களால் முடிந்ததை செய்யுங்கள்" - மாணவர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் அறிவுரை

ஜனநாயகம் என்பது உரையாடல், விவாதம் ஆகியவற்றை உள்ளடக்கியது என்று குடியரசு துணைத் தலைவர் திரு.ஜெகதீப் தங்கர் குறிப்பிட்டார். மேலும் இடையூறு என்பது ஜனநாயகத்தின் மதிப்புகளுக்கு எதிரானது என்றும் கூறினார். "மக்களுக்கு நீதியை உறுதி செய்வதற்காக 24 மணி நேரமும் செயல்பட வேண்டிய ஜனநாயகத்தில், குழப்பங்கள் ஆயுதமாக்கப்பட்டுள்ளது" என்றும் அவர் தனது வேதனையையும், கவலையையும் வெளிப்படுத்தினார்.

ஜனநாயக விழுமியங்களின் சாராம்சத்தைப் பாதுகாக்கவும், நிலைநிறுத்தவும் அனைவரும் இணைந்து செயல்பட அழைப்பு விடுத்த அவர், ஒவ்வொரு நொடியும் நாடாளுமன்றத்தை செயல்படாமல் முடக்குவதற்கு எந்த காரணமும் இருக்க முடியாது என்று சுட்டிக் காட்டினார். இதற்கு நாட்டு மக்கள் பெரும் விலை கொடுப்பதாகக் குறிப்பிட்ட அவர், "ஒரு குறிப்பிட்ட நாளில் நாடாளுமன்றத்தில் இடையூறு ஏற்படும்போது, கேள்வி நேரம் இருக்க முடியாது. கேள்வி நேரம் என்பது நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உருவாக்குவதற்கான ஒரு செயல் முறை. ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்க அரசு கடமைப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு பெரும் நன்மை கிடைக்கும். ஜனநாயகத்தின் மாண்புகள் மற்றும் நல்லாட்சியின் அடிப்படையில் சிந்திக்கும்போது கேள்வி நேரம் இல்லாததை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது” என்றார்.

இன்று விக்யான் பவனில் நடைபெற்ற ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் நூற்றாண்டு பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர் திரு.ஜெகதீப் தங்கர், கருத்து வேறுபாடு என்பது ஜனநாயக செயல்முறையின் இயல்பான பகுதி எனவும், ஆனால் "கருத்து வேறுபாட்டை பகைமையாக மாற்றுவது ஜனநாயகத்திற்கு சாபக்கேடு என்றும் கூறினார். 'எதிர்ப்பு' என்பது 'பழிவாங்கல்' ஆக மாறிவிடக் கூடாது என்று எச்சரித்த அவர், பேச்சுவார்த்தை மற்றும் விவாதம் மட்டுமே முன்னோக்கிச் செல்வதற்கான ஒரே வழி என்றும் பரிந்துரைத்தார்.

'பலவீனமான ஐந்து' பொருளாதாரங்களில் ஒன்றாக இருந்த இந்தியா, இன்று உலகின் 'முதல் ஐந்து' பொருளாதாரங்களில் ஒன்றாக தன்னை மாற்றிக்கொண்டுள்ளது என்று குறிப்பிட்ட குடியரசுத் துணைத் தலைவர், இந்தியாவின் வளர்ச்சியுடன், சவால்களும் உள்ளதாகக் கூறினார். "உங்கள் முன்னேற்றம் அனைவருக்கும் பிடிக்காது. உங்களின் வளர்ச்சியை களங்கப்படுத்துவதற்காக தீய சக்திகள் உள்ளன" என்று கூறினார். அத்தகைய சக்திகளை தடுக்க வேண்டுமெனவும் இளைஞர்களை அவர் வலியுறுத்தினார்.

சில வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவுக்கு எதிரான கதைகளை உருவாக்கும் இடங்களாக மாறிவிட்டன என்று திரு.ஜெகதீப் தங்கர் கூறினார். அத்தகைய நிறுவனங்கள் நமது மாணவர்களையும், ஆசிரியர்களையும் தங்கள் குறுகிய நோக்கத்தத்திற்காகப் பயன்படுத்துவதாக எச்சரித்த அவர், இதுபோன்ற சூழ்நிலைகளைக் கையாளும் போது மாணவர்கள் கவனமாக இருக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். "இந்தியாவுக்கு எதிரான கதைகளை அழிக்க வேண்டும் என்று மாணவர்களை நான் கேட்டுக் கொள்கிறேன். இதுபோன்ற தவறான தகவல்களை வெளியிட அனுமதிக்க முடியாது" என்று அவர் கூறினார்.

வெளிப்படைத்தன்மையிலும், பொறுப்புக் கூறலிலும் தற்போதைய அரசு கவனம் செலுத்துவதாகக் கூறிய அவர், ஊழல், இடைத்தரகர்களுக்கு இன்று இடமில்லை என்றார். "ஊழலில் திளைத்தவர்கள் ஒரு குழுவாக ஒன்றிணைந்துள்ளனர்" என்று அவர் குறிப்பிட்டார். ஊழல் என்பது சமமான வளர்ச்சி மற்றும் சம வாய்ப்புகளுக்கு எதிரானது என்று கூறிய அவர், சட்டத்தை மீறுபவர்கள் தப்பிக்கும் வழிகள் அனைத்தும் பெரும்பாலும் மூடப்பட்டுள்ளன என்பதை எண்ணும்போது ஆறுதலாக உள்ளது என்று கூறினார்.

தேசிய கல்விக் கொள்கை -2020 அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்குவததோடு, கற்றலின் மகிழ்ச்சியைக் கொண்டுவருவதாகப் பாராட்டிய அவர், இந்த கல்விக் கொள்கை பெரிய மாற்றத்திற்கு ஊக்கமளிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

நாட்டின் இயற்கை வளங்களைப் பாதுகாக்க ஒவ்வொரு குடிமகனுக்கும் அழைப்பு விடுத்த குடியரசுத் துணைத் தலைவர், இந்த வளங்களை சமமாக பயன்படுத்த வேண்டுமெனவும் அழைப்பு விடுத்தார். "இயற்கை வளங்களை  நிதி வசதிக்கு ஏற்ப அல்லாமல், தேவைக்கேற்ப பயன்படுத்த வேண்டும் என்ற கலாச்சாரத்தை உருவாக்குவோம்" என்றும் அவர் கூறினார்.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் நஜ்மா அக்தர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பிற முக்கிய பிரமுகர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு பட்டமளிப்பு விழாவில் பேசிய திரு.தர்மேந்திர பிரதான், தனது வருகை மற்றும் வழிகாட்டுதலால் ஊக்கமளித்த திரு.ஜெகதீப் தங்கருக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.

பட்டங்கள் மற்றும் பதக்கங்கள் பெற்ற மாணவர்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். ஜாமியா மில்லியா இஸ்லாமியா போன்ற கல்வி நிறுவனங்கள் அமிர்த காலத்தில் நாட்டிற்கு திறன் மிகுந்த இளைஞர்களை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் குறிப்பிட்டார். இப்போது, முழு உலகமும் இந்தியாவை நம்பிக்கையுடன் பார்க்கும் போது, தேசிய கல்விக் கொள்கையைப் பின்பற்றி திறமையான இளைஞர்களை உருவாக்குவதன் மூலம், மேற்கு நாடுகளுக்கும், தெற்கு நாடுகளுக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வைக் குறைப்பதற்கான தனது கடமையை இப்பல்கலைக்கழகம் செய்யும் என்றும் அவர் கூறினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...