முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிதம்பரம் அந்தண தீக்ஷிதர்கள் மத்திய நிதியமைச்சருடன் சந்திப்பு

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில்  கனகசபை தொடர்பான அரசாணையை  தவறாக வெளியிட்டதால்  இந்து சமய  அறநிலைத்துறை அதைத் திரும்ப பெறும்படி அளித்த பாஜக  ஆன்மீகம் மற்றும் ஆலயம் மேம்பாட்டுப் பிரிவின் தலைவர் நாச்சியப்பன் தலைமையில் மனு 



சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில்  கனகசபை  மீது ஏறி பக்தர்கள் தரிசனம்  செய்வது தொடர்பாக சென்னை 

உயர் நீதிமன்றம் கலந்தாலோசனை  செய்யுமாறு உத்தரவு பிறப்பித்த நிலையில் ஆலோசனை செய்யாமல் ஹிந்து சமய  அறநிலையத்துறை தவறான அரசாணையை வெளியிட்டுள்ளதை 

திரும்பப் பெறக் கோரி   ஹிந்து சமய அறநிலையத்துறை  ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது. மேலும்           சிதம்பரம் தீட்சிதர்கள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்தித்துப் பேசினர் 



சிதம்பரம் கோவிலில் கனகசபை அரசாணை தொடர்பாக  பிரச்சனைகள்  ஏற்பட்ட நிலையில்  சிதம்பரம் தீட்சிதர்கள்  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடனான

இந்தச் சந்திப்பு பல்வேறு யூகங்களுக்கு வித்திட்டது, சிதம்பரத்திலுள்ள நடராஜர்  கோவில் பழமையான உலகப் பிரசித்தி பெற்றது அங்கு நடராஜர் நர்த்தனம் நடத்தியதாக நம்பிக்கை கொண்ட  கனகசபை மீதிலேறி சுவாமி தரிசனம் செய்ய அங்குள்ள தீட்சிதர்கள் தனியாகப் பணம் வசூலிப்பதாக ஒரு புகார் எழுந்தது. தொடர்பாக விசாரணை நடத்திய தமிழ்நாடு அரசு, எந்தவிதக் கட்டணமும் செலுத்தாமல் கனகசபை மீது பொதுமக்கள் ஏறி சுவாமி தரிசனம் செய்யலாமென 2023 ஆம் ஆண்டில் மே மாதம் அரசாணை வெளியிட்டதைத் தொடர்ந்து, நிதி மோசடிகள், குழந்தைத் திருமணம் என சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் மீது சர்ச்சைகளும், புகார்களும் எழுந்த சூழலில், கடந்த வாரம் கோவில் கனகசபை மீது பொதுமக்கள் ஏறுவதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து தடை விதித்து அறிவிப்பு பலகையும் வைத்தனர். அதற்கு பொதுமக்களும் இந்து சமய அறநிலைத்துறையும் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தது. இந்தப் பிரச்சினை மீண்டும் காவல் நிலையம் வரை சென்று போராட்டத்துடன் ஒரு முடிவுக்கு வந்தது. நான்கு  நாட்களுக்குப் பின்  மீண்டும் கனக சபையில் பொதுமக்கள் காவல்துறை  பாதுகாப்புடன் அனுமதிக்கப்பட்டனர்.    அதனால் தீட்சிதர்களுக்கும் அறநிலையத்துறைக்கும் பெரும் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து, சிதம்பரம் கோயிலை தங்களின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் கொண்டு வர தமிழ்நாடு  அறநிலையத்துறை முயன்று வருவதற்கு தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையும்  கருத்துத் தெரிவித்துள்ளார். விரைவில் சிதம்பரத்தில் பெரும் போராட்டத்தை பாஜக சார்பில்  நடத்துமெனவும்  அறிவித்தார்.




இந்தச் சூழலில் தான், சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் குழு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்து ஆலோசனையும் நடத்தியுள்ளது.  ஜூலை மாதம் 1 ஆம் தேதி நடைபெற்ற இந்தச் சந்திப்பில் சிதம்பரம் நடராஜர் கோவிலின் பொது தீட்சிதர்கள் கமிட்டியின் செயலாளர் சிவராம தீட்சிதர் தலைமையில் மூன்று தீட்சிதர்கள் நிதியமைச்சரைச் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டறிந்தாகத் தெரிகிறது. மேலும், சிதம்பரம் கோயிலில் தற்போது என்னென்ன பிரச்சினைகள் நடந்து வருகின்றன. இந்து சமய அறநிலையத்துறை எப்படி தங்களை தொந்தரவு செய்கிறது என இந்தக் கூட்டத்தில் நிர்மலா சீதாராமனிடம் தீட்சிதர்கள் குழு எடுத்துக் கூறியதாகத் தெரிகிறது. சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரத்தை தற்போது கையில் எடுத்திருக்கும் பாஜக விரைவில் போராட்டத்தையும் நடத்துவோம் என அறிவித்துள்ளதும், சிதம்பரம் தீட்சிதர்கள் அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்ததும் தமிழ்நாடு  அரசியல் மற்றும் ஆலய பக்தர்கள் மத்தியில் பேசப்படுகிறது.           




   அதே போல கிராமக் கோவில் பூசாரி தட்டில் காணிக்கையாக காசு போட்டால் அதை எடுத்து அறநிலையத்துறை வைத்துள்ள உண்டியலில் போடவேண்டும் என  சம்பளத்துக்கு  ஆள் போட்டிருக்கிறார்களா? இந்து சமய அறநிலையத்துறையில் என்ற வினா எழுகிறது, 

இது அழகர் கோவில் நிர்வாகத்தில்  பதினெட்டாம்படிக் கருப்பண்ண சாமி கோவில்.  பூசாரி பிராமணர் அல்லாதவர். இது இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த சட்டம் அனுமதிக்கிறதா என்பதும் எழுவினா? பக்தர்கள் மத்தியில் எழுந்த நிலையில்


தொழிலாளர் நலச் சட்டங்கள் கோவிலுக்குப் பொருந்துமா? அல்லது 

இடஒதுக்கீடு மட்டும் தான் பொருந்துமா? என்பது பலரது சந்தேகம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...