முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிதம்பரம் அந்தண தீக்ஷிதர்கள் மத்திய நிதியமைச்சருடன் சந்திப்பு

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில்  கனகசபை தொடர்பான அரசாணையை  தவறாக வெளியிட்டதால்  இந்து சமய  அறநிலைத்துறை அதைத் திரும்ப பெறும்படி அளித்த பாஜக  ஆன்மீகம் மற்றும் ஆலயம் மேம்பாட்டுப் பிரிவின் தலைவர் நாச்சியப்பன் தலைமையில் மனு 



சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில்  கனகசபை  மீது ஏறி பக்தர்கள் தரிசனம்  செய்வது தொடர்பாக சென்னை 

உயர் நீதிமன்றம் கலந்தாலோசனை  செய்யுமாறு உத்தரவு பிறப்பித்த நிலையில் ஆலோசனை செய்யாமல் ஹிந்து சமய  அறநிலையத்துறை தவறான அரசாணையை வெளியிட்டுள்ளதை 

திரும்பப் பெறக் கோரி   ஹிந்து சமய அறநிலையத்துறை  ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது. மேலும்           சிதம்பரம் தீட்சிதர்கள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்தித்துப் பேசினர் 



சிதம்பரம் கோவிலில் கனகசபை அரசாணை தொடர்பாக  பிரச்சனைகள்  ஏற்பட்ட நிலையில்  சிதம்பரம் தீட்சிதர்கள்  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடனான

இந்தச் சந்திப்பு பல்வேறு யூகங்களுக்கு வித்திட்டது, சிதம்பரத்திலுள்ள நடராஜர்  கோவில் பழமையான உலகப் பிரசித்தி பெற்றது அங்கு நடராஜர் நர்த்தனம் நடத்தியதாக நம்பிக்கை கொண்ட  கனகசபை மீதிலேறி சுவாமி தரிசனம் செய்ய அங்குள்ள தீட்சிதர்கள் தனியாகப் பணம் வசூலிப்பதாக ஒரு புகார் எழுந்தது. தொடர்பாக விசாரணை நடத்திய தமிழ்நாடு அரசு, எந்தவிதக் கட்டணமும் செலுத்தாமல் கனகசபை மீது பொதுமக்கள் ஏறி சுவாமி தரிசனம் செய்யலாமென 2023 ஆம் ஆண்டில் மே மாதம் அரசாணை வெளியிட்டதைத் தொடர்ந்து, நிதி மோசடிகள், குழந்தைத் திருமணம் என சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் மீது சர்ச்சைகளும், புகார்களும் எழுந்த சூழலில், கடந்த வாரம் கோவில் கனகசபை மீது பொதுமக்கள் ஏறுவதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து தடை விதித்து அறிவிப்பு பலகையும் வைத்தனர். அதற்கு பொதுமக்களும் இந்து சமய அறநிலைத்துறையும் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தது. இந்தப் பிரச்சினை மீண்டும் காவல் நிலையம் வரை சென்று போராட்டத்துடன் ஒரு முடிவுக்கு வந்தது. நான்கு  நாட்களுக்குப் பின்  மீண்டும் கனக சபையில் பொதுமக்கள் காவல்துறை  பாதுகாப்புடன் அனுமதிக்கப்பட்டனர்.    அதனால் தீட்சிதர்களுக்கும் அறநிலையத்துறைக்கும் பெரும் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து, சிதம்பரம் கோயிலை தங்களின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் கொண்டு வர தமிழ்நாடு  அறநிலையத்துறை முயன்று வருவதற்கு தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையும்  கருத்துத் தெரிவித்துள்ளார். விரைவில் சிதம்பரத்தில் பெரும் போராட்டத்தை பாஜக சார்பில்  நடத்துமெனவும்  அறிவித்தார்.




இந்தச் சூழலில் தான், சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் குழு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்து ஆலோசனையும் நடத்தியுள்ளது.  ஜூலை மாதம் 1 ஆம் தேதி நடைபெற்ற இந்தச் சந்திப்பில் சிதம்பரம் நடராஜர் கோவிலின் பொது தீட்சிதர்கள் கமிட்டியின் செயலாளர் சிவராம தீட்சிதர் தலைமையில் மூன்று தீட்சிதர்கள் நிதியமைச்சரைச் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டறிந்தாகத் தெரிகிறது. மேலும், சிதம்பரம் கோயிலில் தற்போது என்னென்ன பிரச்சினைகள் நடந்து வருகின்றன. இந்து சமய அறநிலையத்துறை எப்படி தங்களை தொந்தரவு செய்கிறது என இந்தக் கூட்டத்தில் நிர்மலா சீதாராமனிடம் தீட்சிதர்கள் குழு எடுத்துக் கூறியதாகத் தெரிகிறது. சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரத்தை தற்போது கையில் எடுத்திருக்கும் பாஜக விரைவில் போராட்டத்தையும் நடத்துவோம் என அறிவித்துள்ளதும், சிதம்பரம் தீட்சிதர்கள் அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்ததும் தமிழ்நாடு  அரசியல் மற்றும் ஆலய பக்தர்கள் மத்தியில் பேசப்படுகிறது.           




   அதே போல கிராமக் கோவில் பூசாரி தட்டில் காணிக்கையாக காசு போட்டால் அதை எடுத்து அறநிலையத்துறை வைத்துள்ள உண்டியலில் போடவேண்டும் என  சம்பளத்துக்கு  ஆள் போட்டிருக்கிறார்களா? இந்து சமய அறநிலையத்துறையில் என்ற வினா எழுகிறது, 

இது அழகர் கோவில் நிர்வாகத்தில்  பதினெட்டாம்படிக் கருப்பண்ண சாமி கோவில்.  பூசாரி பிராமணர் அல்லாதவர். இது இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த சட்டம் அனுமதிக்கிறதா என்பதும் எழுவினா? பக்தர்கள் மத்தியில் எழுந்த நிலையில்


தொழிலாளர் நலச் சட்டங்கள் கோவிலுக்குப் பொருந்துமா? அல்லது 

இடஒதுக்கீடு மட்டும் தான் பொருந்துமா? என்பது பலரது சந்தேகம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.