ஓ. பன்னீர்செல்வம் அணியின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டங்களில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் பங்கேற்றது.
கொடநாட்டில் நடந்தந கொலை, கொள்ளை வழக்கில் மெத்தனப்போக்கோடு
செயல்படும் தி.மு.க அரசைக் கண்டித்து அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும் முன்னால் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் அணியின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டங்களில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் பங்கேற்றது. "கொடநாடு கொலை - கொள்ளை சம்பவத்தில் நடவடிக்கை எடுக்காத மாநில திமுக அரசைக் கண்டித்து தமிழ்நாடு தழுவிய அளவில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் "நீதி கேட்கும் ஆர்ப்பாட்டம்" அஇஅதிமுக சார்பில் அமமுக கழகத்தின் ஆதரவுடன் இன்று நடந்தது தேனி மாவட்டம் - பங்களா மேடு அருகில் அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் BA.,MLA தலைமையில் அமமுக பொதுச்செயலாளர் TTV.தினகரன் BE., முன்னிலையில் மாபெரும் எழுச்சி மாநாடு போல் அலை கடலென அஇஅதிமுக - அமமுக தொண்டர்கள், பொதுமக்கள் திரண்டு வந்து "நீதி கேட்கும் ஆர்ப்பாட்டம்" வெகு பிரமாண்டமாக சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் அக்கட்சியின் தலைமை நிர்வாகிகள் மற்றும் தேனி மாவட்ட சார்பு அணி, ஒன்றிய, பேரூர் கிளைச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள்,நிர்வாகிகள்,தொண்டர்களுடன் பொதுமக்களும் தன்னார்வத்தோடு கலந்து கொண்டனர். அதில் பேசிய டி.டி.வி.தினகரன் "கோடநாடு வழக்கு தொடர்பான சாட்சிகள் கடந்த அதிமுக ஆட்சியில் அழிக்கப்பட்டது" என
-அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றச்சாட்டு கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் மெத்தனப்போக்கோடு செயல்படும் தி.மு.க அரசைக் கண்டித்து அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் அணியின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டங்களில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பங்கேற்றது "கோடநாடு வழக்கு தொடர்பான சாட்சிகள் கடந்த அதிமுக ஆட்சியில் அழிக்கப்பட்டது"
-தேனியில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றச்சாட்டு போலவே முன்னால் அமைச்சர்
வைத்திலிங்கம் பேச்சில் வாய் பிளந்த தொண்டர்கள் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் டி டி வி தினகரனைக்
காட்டிலும் .செம்மையாகப் பேசிய .முன்னால் அமைச்சர் வைத்திலிங்கம் ..ஜெ.ஜெயலலிதா தங்கியிருந்த கொடநாடு பங்களாவை நாங்கள் குடியிருந்த கோயிலாக நினைக்கிறோம்
இந்திய அளவில் வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல்துறையிடம் அனுமதி பெற்று .
24 மணி நேரமும் மின்சாரம் இருக்கக்கூடிய கொடநாடு பங்களாவில் மின்சாரம் ஏன் நிறுத்தப்பட்டது..
இரவு ஒன்பது மணிக்கு மேல் வனத்துறையிடம்தான் கொடநாடு பங்களாவின் சாவி இருக்கும்.
அம்மா செல்ல வேண்டும் என்றாலும், வனத்துறையிடம் சாவி வாங்கித்தான் செல்ல வேண்டும்.
அப்படி இருக்கும்போது எப்படிக் கொள்ளையர்கள் உள்ளே சென்றார்கள்.
சிசிடிவி கேமரா எப்படி துண்டிக்கப்பட்டது... இப்படிப் பல மர்மங்கள் அதில் இருக்கின்றன.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 90 நாள்களில் குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்றுவோம்' என அப்போது சொன்னார் இன்றைய முதலமைச்சர்.
ஆனால், 900 நாள்கள் ஆகிவிட்டன, என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்.
எங்களைப் பார்த்து `பி டீம்' என்கிறார் எடப்பாடி பழனிசாமி.
இந்த வழக்கை விசாரிக்காமல் இருப்பதற்காக எடப்பாடி பழனிச்சாமியும், மு.க.ஸ்டாலினும் கூட்டாக இருக்கிறார்களோ என்று மக்கள் சந்தேகிக்கிறார்கள். என்றார்
தி.மு.க-வின் `பி டீம்' எடப்பாடி பழனிசாமி தான். கொடநாடு கொலை, கொள்ளை பற்றி எத்தனையோ ஆதாரங்களுடன் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
கண்ணிருந்தும் குருடனாய், வாய் இருந்தும் ஊமையாய் இந்த அரசு ஏன் செயல்படுகிறது என்பது தான் கேள்வி. என்றார்
யார் குற்றவாளியாக இருந்தாலும் எங்களுக்கும், மக்களுக்கும் தெரிய வேண்டும்.
ஓ.பன்னீர் செல்வமும் , டி.டி.வி.தினகரனும் மண் குதிரைகள்' என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சொல்கிறார்.
ஓ.பி.எஸ் என்ற மண் குதிரை தான், நடக்க முடியாத எடப்பாடி பழனிசயசாமியை நான்கரை ஆண்டுகள் முதலமைச்சராக்கி அழகு பார்த்தது.
அதேபோல் அண்ணன் தினகரன் தான் எதற்கும் லாயக்கற்ற அவரை முதலமைச்சராக்கினார்.
மண் குதிரை என்று சொல்பவர்கள் தான் எடப்பாடி முதலமைச்சராவதற்கு காரணமானவர்கள்.
இரட்டை இலைச் சின்னம் மட்டும் எடப்பாடி பழனிசயசாமியிடம் இல்லை என்றால்,
அனைத்துத் தொகுதிகளிலும் இரண்டாயிரம் வாக்குகள்கூட அவரால் வாங்க முடியாது.
ஃபிங்கர் டிப்ஸில் பேசுவார்' என்று முன்னால் அமைச்சர் பொன்னையன் சொல்கிறார்.
ஆனால், கம்பராமயணத்தை எழுதியவர் யார் என்றால் சேக்கிழார் என்பார்.
இப்படி ஒரு முட்டாள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக, பிரதமராக வருவார் என்கிறார்கள்.
கோமாளிகளின் கூடாரமாக இருக்கிறது எடப்பாடி பழனிசாமியின் கட்சி.
பணம் ஒன்று தான் அவர்களுடைய எண்ணம், இரட்டை இலைச்சின்னம் இல்லையென்றால் சந்திக்குச் சந்தி நிற்பார்கள்.
நாங்கள் இரண்டு பேரும் ஒன்று சேர்ந்துவிட்டோம். இந்த சக்திகளை விட்டு தமிழ்நாட்டை யாரும் ஆள முடியாது.
எங்களுக்குத் தேவை நீதி, நியாயம். மு.க.ஸ்டாலின் அவர்களே, கோவலன் இறந்ததற்கு கண்ணகி, நெடுஞ்செழிய பாண்டியனிடம் போய் நீதி கேட்டார்.
அம்மா வீட்டில் நடந்த கொலைக்கு நாங்கள் நீதி கேட்கிறோம்.
அரசன் அன்றே கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்பார்கள்.
ஆனால், இப்போது தெய்வம் நின்று கொல்கிறது, அரசன் காலம் தாழ்த்துகிறான்.
அதற்கு நீங்கள் உதாரணமாக இருக்கிறீர்கள். எங்களுக்கு நியாயத்தை சீக்கிரம் வழங்க வேண்டும்"என்றார் அதிமுக கொடி பிடித்து கொண்டு .
தமிழகம் முழுவதும் .கொடநாடு பிரச்சனையை ..ஓ.பன்னீர் செல்வம் கையில் எடுத்துள்ளார் ..முதன்முறையாக சிறப்பான வியூகத்தை வகுத்துள்ளார் .
மேல் உள்ள ஆதரவை மட்டுமே நம்பி . அரசியல் செய்துவந்த ஓ.பன்னீர் செல்வம் இப்போது ..பலரை நம்பி மோசம் போன பிறகுதான் ...மக்களை நம்பும் அரசியலைத் துவங்கியுளாார் ...அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது ...
நாம் கூட ..தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மட்டும்தான் ஓ.பன்னீர் செல்வம் + டி டி.வி
தினகரன் கூட்டனிக்கு ஆதரவு இருக்குமென்று நினைத்தால் .ஆனால் தமிழகம் முழுக்கவே ...நல்ல கூட்டம் அத்தனை ஊர்களிலும் கூடியுள்ளது .இது நாமே எதிர்பாராதது ...இதை இப்படியே தொடரும்பட்சத்தில் ..
தமிழகத்தில் ..இந்த அணி ..தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கும் .மாறாக மீன்டும் .வழிநடத்த வேறு கட்சியை இவர்கள் நம்பினால் ..அவர்களுடன் கூட்டனி வைத்தால் ..பெரிய சரிவில்தான் இவர்களின் அரசியல் முடியும் என்பதே அரசியல் பார்வையாளர்கள் கருத்து .இதில் பொதுநீதி யாதெனில் ஓ.பன்னீர் செல்வம் பதவியில் இருந்தபோது வாய்திறக்கவில்லை இப்போது பேசுவது எடுபடுமா தெரியாது, அப்போதே இந்த விவகாரத்தில் இவர் ராஜினாமா செய்து வெளிவந்திருந்தால் இவரை நோக்கி அரசியல் களம் திரும்பியிருக்கும்.
கருத்துகள்