முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஓ. பன்னீர்செல்வம் அணியின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டங்களில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் பங்கேற்றது.

கொடநாட்டில்  நடந்தந கொலை, கொள்ளை வழக்கில் மெத்தனப்போக்கோடு




செயல்படும் தி.மு.க அரசைக் கண்டித்து அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும் முன்னால் முதல்வருமான  ஓ. பன்னீர்செல்வம் அணியின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டங்களில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும்  பங்கேற்றது.        "கொடநாடு கொலை - கொள்ளை சம்பவத்தில் நடவடிக்கை எடுக்காத மாநில  திமுக அரசைக் கண்டித்து தமிழ்நாடு  தழுவிய அளவில் அனைத்து  மாவட்டத் தலைநகரங்களிலும் "நீதி கேட்கும் ஆர்ப்பாட்டம்" அஇஅதிமுக சார்பில் அமமுக கழகத்தின் ஆதரவுடன் இன்று நடந்தது தேனி மாவட்டம் - பங்களா மேடு அருகில் அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளரும்  முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் BA.,MLA தலைமையில்  அமமுக பொதுச்செயலாளர் TTV.தினகரன் BE., முன்னிலையில் மாபெரும் எழுச்சி மாநாடு போல் அலை கடலென அஇஅதிமுக - அமமுக தொண்டர்கள், பொதுமக்கள் திரண்டு வந்து "நீதி கேட்கும் ஆர்ப்பாட்டம்" வெகு பிரமாண்டமாக சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் அக்கட்சியின்  தலைமை நிர்வாகிகள் மற்றும் தேனி மாவட்ட சார்பு அணி, ஒன்றிய, பேரூர் கிளைச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள்,நிர்வாகிகள்,தொண்டர்களுடன்  பொதுமக்களும் தன்னார்வத்தோடு கலந்து கொண்டனர். அதில் பேசிய டி.டி.வி.தினகரன் "கோடநாடு வழக்கு தொடர்பான சாட்சிகள் கடந்த அதிமுக ஆட்சியில் அழிக்கப்பட்டது" என 




-அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றச்சாட்டு             கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் மெத்தனப்போக்கோடு செயல்படும் தி.மு.க அரசைக் கண்டித்து அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் அணியின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டங்களில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பங்கேற்றது "கோடநாடு வழக்கு தொடர்பான சாட்சிகள் கடந்த அதிமுக ஆட்சியில் அழிக்கப்பட்டது"

-தேனியில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றச்சாட்டு போலவே முன்னால் அமைச்சர் 

 வைத்திலிங்கம் பேச்சில் வாய் பிளந்த தொண்டர்கள் ஓ.பன்னீர் செல்வம்  மற்றும் டி டி வி  தினகரனைக்

காட்டிலும் .செம்மையாகப் பேசிய .முன்னால் அமைச்சர் வைத்திலிங்கம்  ..ஜெ.ஜெயலலிதா தங்கியிருந்த கொடநாடு பங்களாவை நாங்கள் குடியிருந்த கோயிலாக நினைக்கிறோம் 

இந்திய அளவில் வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல்துறையிடம் அனுமதி பெற்று .

24 மணி நேரமும் மின்சாரம் இருக்கக்கூடிய கொடநாடு பங்களாவில் மின்சாரம் ஏன் நிறுத்தப்பட்டது.. 


இரவு ஒன்பது மணிக்கு மேல் வனத்துறையிடம்தான் கொடநாடு பங்களாவின் சாவி இருக்கும். 

அம்மா செல்ல வேண்டும் என்றாலும், வனத்துறையிடம் சாவி வாங்கித்தான் செல்ல வேண்டும். 

அப்படி இருக்கும்போது எப்படிக் கொள்ளையர்கள் உள்ளே சென்றார்கள்.

 சிசிடிவி கேமரா எப்படி துண்டிக்கப்பட்டது... இப்படிப் பல மர்மங்கள் அதில் இருக்கின்றன. 

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 90 நாள்களில் குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்றுவோம்' என அப்போது சொன்னார் இன்றைய முதலமைச்சர். 

ஆனால், 900 நாள்கள் ஆகிவிட்டன, என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்.

எங்களைப் பார்த்து `பி டீம்' என்கிறார் எடப்பாடி பழனிசாமி.

இந்த வழக்கை விசாரிக்காமல் இருப்பதற்காக எடப்பாடி பழனிச்சாமியும், மு.க.ஸ்டாலினும் கூட்டாக இருக்கிறார்களோ என்று மக்கள் சந்தேகிக்கிறார்கள். என்றார் 

தி.மு.க-வின் `பி டீம்' எடப்பாடி பழனிசாமி தான். கொடநாடு கொலை, கொள்ளை பற்றி எத்தனையோ ஆதாரங்களுடன் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. 





கண்ணிருந்தும் குருடனாய், வாய் இருந்தும் ஊமையாய் இந்த அரசு ஏன் செயல்படுகிறது என்பது தான் கேள்வி. என்றார் 

யார் குற்றவாளியாக இருந்தாலும் எங்களுக்கும், மக்களுக்கும் தெரிய வேண்டும். 

ஓ.பன்னீர் செல்வமும் , டி.டி.வி.தினகரனும் மண் குதிரைகள்' என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சொல்கிறார்.

ஓ.பி.எஸ் என்ற மண் குதிரை தான், நடக்க முடியாத எடப்பாடி பழனிசயசாமியை நான்கரை ஆண்டுகள் முதலமைச்சராக்கி அழகு பார்த்தது. 

அதேபோல் அண்ணன் தினகரன் தான் எதற்கும் லாயக்கற்ற அவரை முதலமைச்சராக்கினார். 

மண் குதிரை என்று சொல்பவர்கள் தான் எடப்பாடி முதலமைச்சராவதற்கு காரணமானவர்கள்.

இரட்டை இலைச் சின்னம் மட்டும் எடப்பாடி பழனிசயசாமியிடம் இல்லை என்றால், 

அனைத்துத் தொகுதிகளிலும் இரண்டாயிரம் வாக்குகள்கூட அவரால் வாங்க முடியாது. 

ஃபிங்கர் டிப்ஸில் பேசுவார்' என்று முன்னால் அமைச்சர் பொன்னையன் சொல்கிறார். 

ஆனால், கம்பராமயணத்தை எழுதியவர் யார் என்றால் சேக்கிழார் என்பார். 

இப்படி ஒரு முட்டாள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக, பிரதமராக வருவார் என்கிறார்கள். 

கோமாளிகளின் கூடாரமாக இருக்கிறது எடப்பாடி பழனிசாமியின் கட்சி.

பணம் ஒன்று தான் அவர்களுடைய எண்ணம், இரட்டை இலைச்சின்னம் இல்லையென்றால் சந்திக்குச் சந்தி நிற்பார்கள்.

நாங்கள் இரண்டு பேரும் ஒன்று சேர்ந்துவிட்டோம். இந்த சக்திகளை விட்டு தமிழ்நாட்டை யாரும் ஆள முடியாது. 

எங்களுக்குத் தேவை நீதி, நியாயம். மு.க.ஸ்டாலின் அவர்களே, கோவலன் இறந்ததற்கு கண்ணகி, நெடுஞ்செழிய பாண்டியனிடம் போய் நீதி கேட்டார். 

அம்மா வீட்டில் நடந்த கொலைக்கு நாங்கள் நீதி கேட்கிறோம். 

அரசன் அன்றே கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்பார்கள். 

ஆனால், இப்போது தெய்வம் நின்று கொல்கிறது, அரசன் காலம் தாழ்த்துகிறான். 

அதற்கு நீங்கள் உதாரணமாக இருக்கிறீர்கள். எங்களுக்கு நியாயத்தை சீக்கிரம் வழங்க வேண்டும்"என்றார் அதிமுக கொடி பிடித்து கொண்டு .

தமிழகம் முழுவதும்  .கொடநாடு பிரச்சனையை ..ஓ.பன்னீர் செல்வம் கையில் எடுத்துள்ளார் ..முதன்முறையாக சிறப்பான வியூகத்தை வகுத்துள்ளார்  .

மேல் உள்ள ஆதரவை  மட்டுமே நம்பி . அரசியல் செய்துவந்த ஓ.பன்னீர் செல்வம் இப்போது ..பலரை நம்பி மோசம் போன பிறகுதான்  ...மக்களை நம்பும் அரசியலைத் துவங்கியுளாார் ...அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது ...

நாம் கூட ..தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மட்டும்தான் ஓ.பன்னீர் செல்வம் + டி டி.வி

தினகரன் கூட்டனிக்கு ஆதரவு இருக்குமென்று நினைத்தால் .ஆனால் தமிழகம் முழுக்கவே ...நல்ல கூட்டம் அத்தனை ஊர்களிலும் கூடியுள்ளது  .இது நாமே எதிர்பாராதது ...இதை இப்படியே தொடரும்பட்சத்தில் ..

தமிழகத்தில் ..இந்த அணி ..தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கும் .மாறாக மீன்டும் .வழிநடத்த வேறு கட்சியை இவர்கள்  நம்பினால் ..அவர்களுடன் கூட்டனி வைத்தால் ..பெரிய சரிவில்தான் இவர்களின் அரசியல் முடியும் என்பதே அரசியல் பார்வையாளர்கள் கருத்து  .இதில் பொதுநீதி யாதெனில் ஓ.பன்னீர் செல்வம் பதவியில் இருந்தபோது வாய்திறக்கவில்லை இப்போது பேசுவது எடுபடுமா தெரியாது, அப்போதே இந்த விவகாரத்தில் இவர் ராஜினாமா செய்து வெளிவந்திருந்தால் இவரை நோக்கி அரசியல் களம் திரும்பியிருக்கும். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.